முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது நிலமோசடி வழக்கு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். - 19 - முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது நிலமோசடி புகார் கூறப்பட்டுள்ளது.இதுபற்றிய விவரம் வருமாறு:​ தியாகராயநகரைச் சேர்ந்தவர் சோமசேகர். இவருக்கு சொந்தமாக ஜி.என்.செட்டி ரோட்டில் 1 1/2 கிரவுண்டு இடம் உள்ளது. இதன் அருகில் இருக்கும் 4 1/2 கிரவுண்டு நிலத்தையும் சோமசேகர் வாங்க முடிவு செய்தார். இது தொடர்பாக முன்னாள் முதல்​அமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் டாக்டர் ஜோதிமணியும், அவரது உறவினர்கள் 2 பேரும் சோமசேகரை சந்தித்து பேசியதாக தெரிகிறது. அந்த இடத்தை வாங்கி தருவதாக கூறி சோமசேகரிடம், டாக்டர் ஜோதிமணி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் சொன்னபடி நிலத்தை வாங்கி கொடுக்காததால் சோமசேகர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். அதில், பாஸ்கரன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான 4 1/2கிரவுண்டு நிலத்தை வாங்கி தருவதாக கூறி ஜோதிமணி ரூ. 1 கோடியே 40 ஆயிரம் வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் மனு பாண்டி பஜார் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகார் மனுவை விசாரித்த பாண்டி பஜார் போலீசார் ஜோதிமணி மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவரது அக்காள் உமா மகேஸ்வரி, மானேஜர் ஆனந்த் ஆகியோர் மீதும் மோசடி தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக போலீசார் கூறும்போது, சம்பந்தப்பட்ட நில பிரச்சினை தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் உடனடியாக இந்த வழக்கில் கைது நடவடிக்கை இருக்காது என்று தெரிவித்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்