எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி,செப்.- 27 - நீலகிரி மாவட்ட ஐந்து லாந்தர் பகுதியில் உதகை நகர செயலாளர் டி.கே. தேவராஜ் தலைமையிலும், நகர அவைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் லோகநாதன், சிவகாமி, நந்தகுமார், பாலன், ஜெனிபர் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான புத்திசந்திரன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். முத்துமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டு உன்னதம் சேர்த்தவர் அண்ணா. உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தி தமிழர்களின் பெருமையையும், கலாச்சாரத்தையும் உலகறிய செய்தவர் அவர். அண்ணாவின் மறைவின் போது கூடிய மக்கள் கூட்டம் போல் அதற்கு முன்பு இறந்த எந்த தலைவருக்கும் அஞ்சலி செலுத்த கூடவில்லை என்று குறிப்பிட்டு அந்த அஞ்சலி ஊர்வலம் 1984 ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதனால்தான் எம்.ஜி.ஆர். தனது இயக்கத்துடன் அண்ணாவின் பெயரையும் கொடியில் அண்ணாவின் உருவத்தையும் பொறித்து உருவாக்கிய அ.தி.மு.க. 1977 ல் ஆட்சி பொறுப்பை ஏற்று 1987 வரை ஏழை, எளிய மக்களுக்காக கோலோச்சியது. அந்த வழித்தடத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் காத்து ஆட்சி செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா. நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக தேயிலை தோட்டங்களில் தங்களது உழைப்பை நல்கி வரும் படுகர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. மேலும் தேயிலைக்கு கிலோ ஒன்று ரூ. 2 வீதம் மானியம் அறிவித்து சுமார் ரூ. 10 கோடியை வழங்கி சிறு, குறு விவசாயிகளின் நலனை காத்தார் நம் முதல்வர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தேயிலை தோட்ட விவசாயிகள் பல நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கடுமையாக தாக்கி குற்றவியல் வழக்குகளை கருணாநிதி அரசு தொடுத்தது. இது குறித்து விசாரித்த மனித உரிமை கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அறிவித்தது. ஆனால் கருணாநிதி அரசு அதை வழங்காமல் ஆட்சியை விட்டும் போய் விட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்படி நஷ்ட ஈட்டு தொகையை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு மூட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிறுவனத்தை புணரமைக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் துறை செயலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று முடிவு செய்தது. இது தொழிலாளர் சமுதாயத்திற்கு செய்யும் நிரந்த துரோகம் இல்லையா? மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் பரிந்துரைப்படி ரூ. 302 கோடியை ஒதுக்கீடு செய்து ஆசியா கண்டத்திலேயே ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலையான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புணரமைத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு நீலகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிய முன்வர வேண்டும். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு சதி வலை பின்னி மறைமுகமாக தொழிற்சாலையை மூட திட்டம் தீட்டி வருவதை அறிந்து நமது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தொழிலாளர் சமுதாயம் ஒன்றுபட்டு போராடும். இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூட நினைக்கும் மத்திய அரசின் சதி திட்டத்தை முறியடித்தவர் முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.
இம்தியாஸ் எம்.சி. நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
ஜி.எஸ்.டி. மறுசீரமைப்பால் 375 பொருட்களின் விலை மேலும் குறைந்துள்ளது: நிர்மலா சீதாராமன்
20 Sep 2025கோவில்பட்டி, ஜி.எஸ்.டி. புரட்சியால் 375 பொருட்களுக்கு விலை குறைந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், ஜி.எஸ்.டி.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.