எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நீலகிரி,செப்.- 27 - நீலகிரி மாவட்ட ஐந்து லாந்தர் பகுதியில் உதகை நகர செயலாளர் டி.கே. தேவராஜ் தலைமையிலும், நகர அவைத் தலைவர் குணசேகரன், பொருளாளர் சுப்பிரமணி மற்றும் லோகநாதன், சிவகாமி, நந்தகுமார், பாலன், ஜெனிபர் ஆகியோர் முன்னிலையிலும் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நீலகிரி மாவட்ட செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான புத்திசந்திரன் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை முன்னாள் செயலாளரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். முத்துமணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்.பி. முத்துமணி பேசியதாவது, தமிழுக்கும், தமிழர்களுக்கும் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டு உன்னதம் சேர்த்தவர் அண்ணா. உலகத் தமிழ் மாநாட்டை சென்னையில் நடத்தி தமிழர்களின் பெருமையையும், கலாச்சாரத்தையும் உலகறிய செய்தவர் அவர். அண்ணாவின் மறைவின் போது கூடிய மக்கள் கூட்டம் போல் அதற்கு முன்பு இறந்த எந்த தலைவருக்கும் அஞ்சலி செலுத்த கூடவில்லை என்று குறிப்பிட்டு அந்த அஞ்சலி ஊர்வலம் 1984 ல் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது. அதனால்தான் எம்.ஜி.ஆர். தனது இயக்கத்துடன் அண்ணாவின் பெயரையும் கொடியில் அண்ணாவின் உருவத்தையும் பொறித்து உருவாக்கிய அ.தி.மு.க. 1977 ல் ஆட்சி பொறுப்பை ஏற்று 1987 வரை ஏழை, எளிய மக்களுக்காக கோலோச்சியது. அந்த வழித்தடத்தில் எம்.ஜி.ஆரின் புகழ் காத்து ஆட்சி செய்து வருபவர் முதல்வர் ஜெயலலிதா. நீலகிரி மாவட்டத்தில் நீண்ட காலமாக தேயிலை தோட்டங்களில் தங்களது உழைப்பை நல்கி வரும் படுகர் இன மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவர் முதல்வர் ஜெயலலிதா. மேலும் தேயிலைக்கு கிலோ ஒன்று ரூ. 2 வீதம் மானியம் அறிவித்து சுமார் ரூ. 10 கோடியை வழங்கி சிறு, குறு விவசாயிகளின் நலனை காத்தார் நம் முதல்வர். கடந்த தி.மு.க. ஆட்சியில் தேயிலை தோட்ட விவசாயிகள் பல நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை கடுமையாக தாக்கி குற்றவியல் வழக்குகளை கருணாநிதி அரசு தொடுத்தது. இது குறித்து விசாரித்த மனித உரிமை கழகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அறிவித்தது. ஆனால் கருணாநிதி அரசு அதை வழங்காமல் ஆட்சியை விட்டும் போய் விட்டது.
மீண்டும் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்படி நஷ்ட ஈட்டு தொகையை பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் இந்துஸ்தான் போட்டோ தொழிற்சாலையை திட்டமிட்டு மத்திய காங்கிரஸ் அரசு மூட முற்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தி அந்த தொழிற்சாலை தொடர்ந்து இயங்குவதற்கான நடவடிக்கையை எடுத்தார் முதல்வர் ஜெயலலிதா. இந்நிறுவனத்தை புணரமைக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் துறை செயலாளர்கள் குழு இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று முடிவு செய்தது. இது தொழிலாளர் சமுதாயத்திற்கு செய்யும் நிரந்த துரோகம் இல்லையா? மத்திய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு உண்மையிலேயே தொழிலாளர்கள் மீது அக்கறை இருக்குமானால் பரிந்துரைப்படி ரூ. 302 கோடியை ஒதுக்கீடு செய்து ஆசியா கண்டத்திலேயே ஒரே போட்டோ பிலிம் தொழிற்சாலையான இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை புணரமைத்து தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்குவதோடு நீலகிரி மாவட்ட பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரிய முன்வர வேண்டும். இந்த சூழ்நிலையில் மத்திய அரசு சதி வலை பின்னி மறைமுகமாக தொழிற்சாலையை மூட திட்டம் தீட்டி வருவதை அறிந்து நமது முதல்வர் ஜெயலலிதா தலைமையில் தொழிலாளர் சமுதாயம் ஒன்றுபட்டு போராடும். இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை மூட நினைக்கும் மத்திய அரசின் சதி திட்டத்தை முறியடித்தவர் முதல்வர் ஜெயலலிதா. இவ்வாறு அவர் பேசினார்.
இம்தியாஸ் எம்.சி. நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
17 Oct 2025சென்னை, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. கைது : ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல்
17 Oct 2025சண்டிகர் : ஊழல் குற்றச்சாட்டில் பஞ்சாப் டி.ஐ.ஜி. ஹர்சரண் சிங் புல்லரை கைது செய்துள்ள சி.பி.ஐ., அவரிடம் இருந்து ரூ.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
வி.ஐ.டி. போபால் பல்கலையில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
17 Oct 2025சென்னை, வி.ஐ.டி. போபால் பல்கலைகழகத்தில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
-
மதுரை மேயர் ராஜினாமா: தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்
17 Oct 2025மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
விமான உணவில் கிடந்த முடி: பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட் உத்தரவு
17 Oct 2025சென்னை, விமான உணவில் முடி இருந்ததை முன்னிட்டு பயணிக்கு ரூ.35 ஆயிரம் வழங்க ஏர் இந்தியாவுக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஹங்கேரியில் விரைவில் புதினுடன் 2-வது சந்திப்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
17 Oct 2025வாஷிங்டன், புதினுடன் அலாஸ்காவில் சந்தித்து பேசிய நிலையில், 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
17 Oct 2025சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர்
-
த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
17 Oct 2025சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க.: இ.பி.எஸ்.
17 Oct 2025சென்னை : திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க. என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடக்கம்: ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் பயணிகள் கடும் அவதி
17 Oct 2025புதுடெல்லி, : தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக ஏராளமானோர் ஐ.ஆர்.சி.டி.சி.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் காலமானார்
17 Oct 2025டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் டோமிச்சி முர்யமா நேற்று காலமானார்.