எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்லேகெல்லே, மார்ச் 8 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். கேப்டன் அப்ரிடி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இலங்கையின் பல்லேகெல்லே நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அப்ரிடி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை 3 - 2 என்ற கணக்கில் வென்றதையும் குறிப்பிட்ட வெட்டோரி, தற்போதும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஒரு அணியாக வலம்வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அந்த அணியின் பந்துவீச்சு பலம் அச்சுறுத்தக்கூடிய ஒன்று என்பதையும் ஒத்துக்கொண்டார். அந்த அணியை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்றுதான் என்றார் வெட்டோரி. அந்த அணி கனடாவிற்கு எதிராக 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பாக். அணி தனது பந்துவீச்சு பலத்தால் கனடாவை எளிதாக வென்றதையும் குறிப்பிட்டார். ஆனாலும் தங்களது அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் அஹமது ஷேஜாத் ஆகியோர் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்துவருகிறது. கென்யாவிற்கு எதிரான போட்டியில் 11 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்களையும், கனடாவிற்கு எதிரான போட்டியில் 16 ரன்களை மட்டுமே இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்துள்ளனர். இவர்கள் இப்படி விளையாடினாலும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாக் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் இருவரில் ஹபீஸ் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். அதிலும் இவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் மெக்கலம் ஆகியோர் அதிரடியாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி மற்ற ஆல்ரவுண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை ஒரு கை பார்க்கலாம். கடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தானுக்கு இது அவ்வளவு முக்கிய போட்டி இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இலங்கையில் மழை அச்சுறுத்தல் வேறு அவ்வப்போது இருந்துகொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து சிறிய அணிகளான கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை மட்டுமே வென்றுள்ளது. இன்று பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
20 ஆண்டு கால மோதல் முடிவுக்கு வந்தது: ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே
05 Jul 2025மும்பை, மும்பை ஆசாத் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒரே மேடையில் உத்தவ் - ராஜ்தாக்கரே பங்கேற்றனர்.
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.