எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பல்லேகெல்லே, மார்ச் 8 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். கேப்டன் அப்ரிடி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இலங்கையின் பல்லேகெல்லே நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அப்ரிடி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை 3 - 2 என்ற கணக்கில் வென்றதையும் குறிப்பிட்ட வெட்டோரி, தற்போதும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஒரு அணியாக வலம்வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அந்த அணியின் பந்துவீச்சு பலம் அச்சுறுத்தக்கூடிய ஒன்று என்பதையும் ஒத்துக்கொண்டார். அந்த அணியை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்றுதான் என்றார் வெட்டோரி. அந்த அணி கனடாவிற்கு எதிராக 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பாக். அணி தனது பந்துவீச்சு பலத்தால் கனடாவை எளிதாக வென்றதையும் குறிப்பிட்டார். ஆனாலும் தங்களது அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் அஹமது ஷேஜாத் ஆகியோர் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்துவருகிறது. கென்யாவிற்கு எதிரான போட்டியில் 11 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்களையும், கனடாவிற்கு எதிரான போட்டியில் 16 ரன்களை மட்டுமே இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்துள்ளனர். இவர்கள் இப்படி விளையாடினாலும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாக் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் இருவரில் ஹபீஸ் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். அதிலும் இவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் மெக்கலம் ஆகியோர் அதிரடியாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி மற்ற ஆல்ரவுண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை ஒரு கை பார்க்கலாம். கடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தானுக்கு இது அவ்வளவு முக்கிய போட்டி இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இலங்கையில் மழை அச்சுறுத்தல் வேறு அவ்வப்போது இருந்துகொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து சிறிய அணிகளான கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை மட்டுமே வென்றுள்ளது. இன்று பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை
21 Oct 2025சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.790 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
ஊட்டி மலை ரயில் ரத்து
21 Oct 2025மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் ரத்துசெய்யப்பட்டது. இதனால் சற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை: கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
21 Oct 2025மதுரை, மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கை தொடர்ந்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியாது - ஆர்.பி.உதயகுமார் தகவல்
21 Oct 2025சென்னை : தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் த.வெ.க.வை காப்பாற்ற முடியது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்
-
சென்னையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 151 மெ.டன் பட்டாசு குப்பைகள் அகற்றம்
21 Oct 2025சென்னை : சென்னையில் கடந்த 3 நாட்களில் 151 மெட்ரிக் டன் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் தங்கம் மாயம்: ஐகோர்ட்டில் விசாரணை அறிக்கை தாக்கல்
21 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் தங்கம் மாயம் ஆனதை தொடர்ந்து ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு 10 பேர் மது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு
21 Oct 2025வாஷிங்டன், எச்-1 பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.