எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பல்லேகெல்லே, மார்ச் 8 - உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. 10-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் ஏ பிரிவு லீக் போட்டி ஒன்றில் 3 போட்டிகளில் தொடர் வெற்றியை பெற்றுள்ள பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. நியூசிலாந்தைப் பொறுத்தவரை இந்த போட்டி அந்த அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். ஏ பிரிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணி, நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பை போட்டித் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பாக். கேப்டன் அப்ரிடி எதிர் அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார்.
நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி இலங்கையின் பல்லேகெல்லே நகரில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் சோபிக்காவிட்டாலும் அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அப்ரிடி தலைமையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார்கள் என்று நியூசிலாந்து கேப்டன் டேனியல் வெட்டோரி தெரிவித்துள்ளார். அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி, கடந்த மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது தங்கள் அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடரை 3 - 2 என்ற கணக்கில் வென்றதையும் குறிப்பிட்ட வெட்டோரி, தற்போதும் பாகிஸ்தான் அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஒரு அணியாக வலம்வந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். அந்த அணியின் பந்துவீச்சு பலம் அச்சுறுத்தக்கூடிய ஒன்று என்பதையும் ஒத்துக்கொண்டார். அந்த அணியை எதிர்கொள்வது சற்று கடினமான ஒன்றுதான் என்றார் வெட்டோரி. அந்த அணி கனடாவிற்கு எதிராக 185 ரன்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டாலும், பாக். அணி தனது பந்துவீச்சு பலத்தால் கனடாவை எளிதாக வென்றதையும் குறிப்பிட்டார். ஆனாலும் தங்களது அணி வெற்றிக்காக கடுமையாக போராடும் என்றும் வெட்டோரி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் துவக்க வீரர்கள் மிகப் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. ஆனால் அந்த அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் முகமது ஹபீஸ் மற்றும் அஹமது ஷேஜாத் ஆகியோர் கடந்த மூன்று போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இவர்களுடைய பார்ட்னர்ஷிப் மிக மோசமாக இருந்துவருகிறது. கென்யாவிற்கு எதிரான போட்டியில் 11 ரன்களையும், இலங்கைக்கு எதிரான போட்டியில் 28 ரன்களையும், கனடாவிற்கு எதிரான போட்டியில் 16 ரன்களை மட்டுமே இவர்கள் பார்ட்னர்ஷிப்பாக எடுத்துள்ளனர். இவர்கள் இப்படி விளையாடினாலும் இவர்கள் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் இதுவரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் பாக் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. துவக்க வீரர்கள் இருவரில் ஹபீஸ் ஓரளவு சிறப்பாக செயல்படுகிறார். அதிலும் இவர் நியூசிலாந்துக்கு எதிரான கடந்த தொடரில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதங்கள் அடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் குப்தில் மற்றும் மெக்கலம் ஆகியோர் அதிரடியாக செயல்படும் பட்சத்தில் அந்த அணி மற்ற ஆல்ரவுண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தான் அணியை ஒரு கை பார்க்கலாம். கடந்த 3 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே காலிறுதி போட்டிக்கு கிட்டத்தட்ட தகுதி பெற்றுவிட்ட பாகிஸ்தானுக்கு இது அவ்வளவு முக்கிய போட்டி இல்லை. ஆனால் நியூசிலாந்து அணியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு இது மிகவும் முக்கியமான போட்டியாகும். இலங்கையில் மழை அச்சுறுத்தல் வேறு அவ்வப்போது இருந்துகொண்டிருக்கிறது. இந்த மைதானத்தில் உலக கோப்பை போட்டிக்கு முன் நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்துள்ள நியூசிலாந்து சிறிய அணிகளான கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளை மட்டுமே வென்றுள்ளது. இன்று பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
பி.வி.சிந்துவுக்கு பொறுப்பு
25 Dec 2025உலக பேட்மிண்டன் சம்மேளனத்தின் (BWF) விளையாட்டு வீரர்கள் கமிஷனின் தலைவராக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி சிந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
த.வெ.க. தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


