எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் செய்தி வெளியிட்ட மிட்-டே, முரசொலி ஆகிய பத்திரிகைகளும், கலைஞர் தொலைக்காட்சியும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜெயலலிதா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சார்பில் அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ்பாண்டியன் அனுப்பி உள்ள இந்த நோட்டீசில் இவ்வாறு மன்னிப்பு கேட்கத்தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மும்பையிலிருந்து வெளிவரும் மிட்-டே ஆங்கில நாளிதழில் கடந்த 4-ம் தேதி வெளியான ``ரச்ஙிஹடூ உஞ்இஙி பகீடீ தடீஹங் நசிச்ஙுநீ ஸடீகீடுடூக்ஷ ஏஹஙூஹடூ அங்டு நசிஹஙூகீ'' என்ற செய்தியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறான கருத்து திணிக்கப்பட்டிருப்பதாக அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியன், அந்த பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில்தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி விஷமத்தனமானது. கீழ்த்தரமானது, மிக மோசமாக திரித்து கூறப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர், வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஜெயலலிதா அறிக்கைகளை வெளியிட்டு வந்ததையும், தனது நோட்டீசில் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த செய்தி மேலும் திரித்து வெளியிட்டுள்ள தி.மு.க. நாளிதழான முரசொலியின் ஆசிரியர் எஸ்.செல்வத்திற்கும், இந்த செய்தியை கடந்த 5-ம் தேதி ஒளிபரப்பிய கலைஞர் தொலைக்காட்சியின் ஆசிரியருக்கும், ஜெயலலிதா சார்பில் பி.எச்.மனோஜ் பாண்டியன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
முற்றிலும் உண்மைக்கு மாறான இந்த செய்தியை ஜெயலலிதா முழுமையாக மறுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பி.எச்.மனோஜ்பாண்டியன் உள்நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமுதாயத்தின் மிகவும் பொறுப்பு வாய்ந்த தேச பக்தி நிறைந்த பிரஜையும், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயலலிதாவுக்கு இந்த செய்தியால் ஏற்பட்டுள்ள இழப்பை அளவிட முடியாது என்றும், பண அடிப்படையில் இதை மதிப்பிட முடியாது என்றும் பி.எச்.மனோஜ் பாண்டியன் தனது நோட்டீசில் குறிப்பிட்டுள்ளார்.
துளி கூட உண்மை இல்லாத இந்த செய்தியை வெளியிட்ட மிட்-டே நாளிதழ் ஆசிரியர், முரசொலி நாளிதழ் ஆசிரியர் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, அதனை அந்ததந்த நாளிதழ்களின் முதல் பக்கத்தில் வெளியிட வேண்டும் என்றும்,
கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியரும், தனது நிபந்தனையற்ற மன்னிப்பை கலைஞர் தொலைக்காட்சியில் உரிய முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்ப வேண்டும் என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு மன்னிப்பு கோரத்தவிறினால், ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பித்ததோடு, மன உளைச்சலையும், வேதனையையும் ஏற்படுத்தியதற்காக சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜெயலலிதா சார்பில் அனுப்பப்பட்டுள்ள அந்த நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 11-07-2025.
11 Jul 2025 -
தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது: டெல்லியை அச்சுறுத்தும் தமிழ்நாட்டின் வளர்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
11 Jul 2025சென்னை, தமிழ்நாடு உங்களுக்கு தலைவணங்காது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வி போன்றவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி டெல்லியை
-
அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம்: விஜய்
11 Jul 2025சென்னை : மாவீரர் அழகுமுத்துக்கோன் தியாகத்தை எந்நாளும் போற்றுவோம் என விஜய் தெரிவித்துள்ளார்.
-
கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பலமாக இருக்கும்: இ.பி.எஸ்.
11 Jul 2025விழுப்புரம் : கூட்டணி இல்லை என்றால் தி.மு.க. இல்லை. கூட்டணி இருந்தாலும், இல்லையென்றாலும் பலமாக இருக்கும் கட்சி அ.தி.மு.க. என எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
தங்கம் விலை ரூ.440 உயர்வு
11 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 11) பவுனுக்கு ரூ.440 உயர்ந்து விற்பனையானது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கனடா நாட்டு பொருட்களுக்கு 35 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
11 Jul 2025வாஷிங்டன் : ''ஆகஸ்ட் 1ம் தேதி முதல் கனடா பொருட்களுக்கு 35 சதவீத வரி அமலுக்கு வரும்'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டு பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் : டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
11 Jul 2025சென்னை : வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவ
-
பிரதமரின் வெளிநாட்டு பயணம்: பஞ்சாப் முதல்வர் விமர்சனம்
11 Jul 2025புதுடெல்லி : “பிரதமர் மோடி நினைத்தால் பாகிஸ்தானுக்கும் செல்லலாம். ஆனால், அவரைப் போல நம்மால் செல்ல முடியாது” என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் விமர்சித்துள்ளார்.
-
ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியா பயணம்
11 Jul 2025மாஸ்கோ : ரஷ்யா வெளியுறவு அமைச்சர் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
-
பாக்.கில் கிளர்ச்சியாளர்களால் பயணிகள் 9 பேர் சுட்டுக்கொலை
11 Jul 2025கராச்சி : பாகிஸ்தானில் பஸ்சில் சென்ற 9 பேரை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றனர்.
-
தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
11 Jul 2025சென்னை : தமிழ்நாடு கால்பந்தாட்ட சங்கத்தின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆடு, மாடுகள் முன் சீமான்: அமைச்சர் சிவசங்கர் வருத்தம்
11 Jul 2025அரியலூர் : ஆடு, மாடுகளுக்கு முன்பு பேசும் நிலைக்கு சீமான் தள்ளபட்டுள்ளார் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் ‘ஹைடெக்’ ஆய்வகங்கள் வரும் 15-ம் தேதி திறப்பு
11 Jul 2025சென்னை, தமிழகத்தில் உள்ள 6,990 அரசு நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் ‘ஹைடெக்’ ஆய்வகங்களை, காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாளன்று முதல்வர் மு.க.ஸ்
-
குன்றக்குடி அடிகளாரின் தொண்டு தொடரட்டும்: முதல்வர் புகழாரம்
11 Jul 2025சென்னை : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி பழனிசாமி தனது பெயரை மாற்றிக்கொள்ளலாம்: அமைச்சர் சேகர்பாபு
11 Jul 2025சென்னை : எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்
11 Jul 2025சென்னை : கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.
-
ஜி-மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்
11 Jul 2025வாஷிங்டன் : ஜி மெயில் பயனர்களுக்கு கூகுள் கொண்டு வரும் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது.
-
குரூப்-4 வினாத்தாள் கசிவா? - டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மறுப்பு
11 Jul 2025சென்னை : குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 27,28-ம தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
11 Jul 2025சென்னை, வரும் 27, 28-ம் தேதிகளில் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.
-
தமிழகத்தில் நிபா வைரஸ் இல்லை: பொதுசுகாதாரத்துறை
11 Jul 2025சென்னை : தமிழகத்தில் 'நிபா' வைரஸ் இல்லை. மக்கள் பீதி அடைய தேவையில்லை என பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை: அமெரிக்காவுக்கு இந்திய குழு விரைவில் பயணம்
11 Jul 2025புதுடெல்லி : வர்த்தக ஒப்பந்த பேசசுவார்த்தைககு அமெரிக்காவுககு இந்திய குழுவினர் பயணம் செய்ய உள்ளனர்.
-
வெள்ளம், நிலச்சரிவு பாதித்த 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி
11 Jul 2025புதுடெல்லி : வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க
-
பீகார் தேர்தலை 'திருட' பா.ஜ.க. முயற்சி: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
11 Jul 2025புவனேஸ்வர் : மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பீகார் தேர்தலையும் திருட பா.ஜ.க. முயல்கிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
வழக்கின் சாட்சிகளை அழிக்க முயற்சி: தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
11 Jul 2025சியோல் : தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார்.
-
கடமை தவறுவது போல் தெரிகிறது: அ.தி.மு.க. தொடர்பான மனுக்கள் மீது எப்போது முடிவெடுக்கப்படும்? தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கேள்வி
11 Jul 2025சென்னை, அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கடமை தவறுவது போல் தெரிவதாக சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.