எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ. 14 - மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.6.5 கோடி மதிப்புள்ள ஹெராயினை சென்னை ஏர்போர்ட்டில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட தனியார் விமான நிறுவனத்தின் பஸ் டிரைவர் மற்றும் இளம்பெண் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் இருந்து மலேசியாவுக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு முதல் விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்nullருக்கு செல்லும் ஜெட் ஏர்வேஸ் விமானம், நேற்று அதிகாலை ஒரு மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்லவிருந்த பயணிகள் அனைவரிடமும் பாதுகாப்பு மற்றும் சுங்க சோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பஸ்கள் மூலம் விமானம் அருகே அழைத்து வரப்பட்டனர்.
அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தப்படலாம் என்ற சந்தேகம் எழுந்ததால் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வந்தனர். பயணிகள் அனைவரும் விமானத்துக்குள் ஏறுவதற்கு ஆயத்தமாகினர். அப்போது பயணிகளை ஏற்றி வந்த ஒரு பஸ்சின் டிரைவர், அங்கிருந்த மூன்று பேரிடம் ஒரு பார்சலை கொடுத்தார். இதைப் பார்த்த டிஆர்ஐ அதிகாரிகள், விரைந்து சென்று பயணிகளையும் பஸ் டிரைவரையும் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த பார்சலை பறிமுதல் செய்தனர். பிரித்து பார்த்தபோது, அதில் ஹெராயின் போதைப் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் புறப்படுவதற்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தால் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பிடிபட்ட பயணிகளை உடனடியாக டிஆர்ஐ அதிகாரிகள் விமான நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சியை சேர்ந்த முகமது மசூர் (40), ஹத்தாரியா (35) என்ற பெண் மற்றும் இலங்கையை சேர்ந்த அப்துல் காதர் அலீம் (35) என்பதும், ஹெராயினை அவர்களிடம் ஒப்படைத்த பஸ் டிரைவர் வண்டலூர் வெங்கம்பாக்கத்தை சேர்ந்த பாலகுமார் (30) என்பதும் தெரியவந்தது.
பார்சலில் மொத்தம் 6 கிலோ 380 கிராம் ஹெராயின் இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.6 கோடியே 50 லட்சம் ஆகும். அவர்கள் 4 பேரையும் கைது செய்து, தி.நகரில் உள்ள டிஆர்ஐ தலைமை அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ஹெராயினை கடத்த சொன்ன கிண்டியை சேர்ந்த ஜாகீர் (40), மணிகண்டன் (35) ஆகியோரை கிண்டி அருகே அதிகாரிகள் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் கடும் சோதனைகளை கடந்து போதைப் பொருள் கடத்தப்படுவதும், கடத்தல்காரர்கள் பிடிபடுவதும் அடிக்கடி நடக்கும் சம்பவங்கள். இதுபோன்ற கடத்தல்கள், சிறு அளவில்தான் நடந்து வந்தது. தற்போது ஏர்போர்ட்டில் பயணிகளை அழைத்து செல்லும் பஸ் மூலம் போதைப் பொருள் கடத்தப்பட்டு, விமானத்துக்குள் கொண்டு செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது பற்றி பிடிபட்டவர்களை அதிகாரிகள் விசாரித்தனர்.
விசாரணையின்போது, பிடிபட்ட கடத்தல்காரர்கள் கூறியதாவது:
போதைப் பொருளை பணத்துக்காகவே கடத்தினோம். இதுபற்றி முழுமையாக எங்களுக்கு தெரியாது. சென்னை கிண்டியை சேர்ந்த ஜாகீர், மணிகண்டன் இருவரும்தான் எங்களிடம் இதை தந்தனர். கோலாலம்nullர் ஏர்போர்ட்டில் அவர்கள் சொன்னவரிடம் ஒப்படைத்தால் பணம் தருவதாக கூறினர். பணத்துக்கு ஆசைப்பட்டு பார்சலை எடுத்து செல்ல ஒப்புக் கொண்டோம். பார்சலை விமானம் அருகே கொண்டு வந்து தருவதற்காக, பஸ் டிரைவரை அவர்கள்தான் ஏற்பாடு செய்தனர்.
விமான நிலைய பஸ் டிரைவர்கள் வருவதற்கென தனி வழி உள்ளது. அதன் வழியாகவே இந்த பார்சலை டிரைவர் உள்ளே எடுத்து வந்து பஸ்சில் வைத்தார். நாங்களும் அந்த டிரைவர் ஓட்டிய பஸ்சில் சென்று ஏறிக் கொண்டோம். விமானம் அருகே வந்தபோது, யாருக்கும் சந்தேகம் வராதபடி எங்களிடம் அந்த பார்சலை தந்தார். பத்திரமாக எங்களிடம் பார்சல் ஒப்படைக்கப்பட்டு விட்டது என தெரிந்ததும் ஜாகீரும் மணிகண்டனும் புறப்பட்டு சென்று விட்டனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
பாதுகாப்பு விஷயத்தில் அதிர்ச்சி
மத்திய வருவாய் புலனாய்வு துறை கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன், நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்ற சம்பவத்தில் 6 பேரை கைது செய்துள்ளோம். இதற்கு பயன்படுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவன பஸ்சையும் பறிமுதல் செய்துள்ளோம். சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல்காரர்கள் கைதான சம்பவம் பலமுறை நடந்துள்ளது. ஆனால், ஏர்லைன்ஸ் ஊழியர் ஒருவரின் நேரடி தொடர்புடன் நடந்த சம்பவம் இதுதான். சென்னை விமான நிலைய வரலாற்றிலேயே முதன்முறையாக தனியார் விமான நிறுவன வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விஷயத்தில் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது.
போதைப் பொருள் கடத்துவதாக கிடைத்த தகவலையடுத்து நேற்று முன்தினம் முதல் தீவிர சோதனை நடத்தி வந்தோம். இவ்வளவு பெரிய கடத்தல் கும்பல் பிடிபடும் என எதிர்பார்க்கவில்லை. விமான நிறுவன பஸ் டிரைவர்கள் ஏர்போர்ட்டுக்குள் வருவதற்கு தனி கேட் உள்ளது. அங்கும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்களை தீவிரமாக சோதனை செய்தபிறகே அனுப்புவார்கள். அடையாள அட்டையை பார்த்து, உடலை தடவிப் பார்த்துதான் அனுப்புவார்கள். அப்படி இருந்தும் எப்படி இந்த பார்சலை டிரைவர் எடுத்து வந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரிடம் சோதனை நடத்தவில்லையா என்பது பற்றியும் விசாரிக்கிறோம். இது பாதுகாப்பு சம்பந்தபட்ட விவகாரம். போதை பொருள் கடத்தி செல்வது போன்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை எடுத்து சென்றிருந்தால் என்னவாயிருக்கும். எனவே, இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு ராஜன் கூறினார்.
இந்த விவகாரத்தில் போதை பொருள் இதுபோல் எத்தனை முறை கடத்தப்பட்டுள்ளது. ஜாகீர்உசேன் தவிர வேறு பெறும் நெட்வொர்க் உள்ளதா? தனியார் விமான நிறுவன ஊழியர்கள் இதற்கு முன்பு இவ்வா கடத்தலில் ஈடுபட்டார்களா? என்று மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் தீவிவரமாக விசாரித்து வருகின்றனர். செனனை விமான நிலையத்தில் ரூ.6 1/2 கோடி மதிப்புள்ள ஹெராயின் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 4 weeks ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 day 18 hours ago |
ஆனியன்ப்ரை4 days 17 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 1 day ago |
-
தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் : ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
12 May 2024சென்னை : தமிழ்நாட்டில் தொழில் துவங்கவே தொழிலதிபர்கள் அஞ்சுகின்றனர் என்று தெரிவித்துள்ள ஓ.பி.எஸ். மூன்று ஆண்டு கால தி.மு.க.
-
கோடை விடுமுறை எதிரொலி: பத்மநாபபுரம் அரண்மனையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
12 May 2024திருவனந்தபுரம் : கோடை விடுமுறை காணமாக பத்மநாபபுரம் அரண்மனை சுற்றுலா பயணிகளால் திணறியது.
-
வெஸ்ட் நைல் காய்ச்சல்: தமிழக, எல்லையில் கண்காணிப்பு தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 May 2024சென்னை : வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 13 வழித்தடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.&
-
கொளுத்தும் வெயில்: சென்னை பஸ்களில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி பொருத்தம்
12 May 2024சென்னை : வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் விதமாக சென்னை மாநகராட்சி பேருந்துகளில் மின்விசிறியை பொருத்த மாநகர் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது.&n
-
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள்: அண்ணாமலை, நடிகர் விஜய் வாழ்த்து
12 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் ஆகியோர் அ.தி.மு.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2024
12 May 2024 -
பூர்வகுடி மக்கள் அமைதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டும்: எடப்பாடி
12 May 2024சென்னை : பூர்வகுடி மக்கள் எவ்வித அச்சுறுத்தலும் இன்றி தங்கள் இருப்பிடத்தில் அமைதியாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அ.தி.மு.க.
-
முத்திரை கட்டணங்கள் உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் : எடப்பாடி வலியுறுத்தல்
12 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் முத்திரை கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய பெண் கைது
12 May 2024சென்னை : சென்னையில் வீட்டு வாசலில் உறங்கியவர்களின் மீது காரை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
குழந்தைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடிய நடிகை நயன்தாரா
12 May 2024சென்னை : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுல் ஒருவர் நயன்தாரா. அவர் கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஜவான் திரைப்படத்தில் நடித்தார்.
-
நெல்லை காங்.நிர்வாகி மரணம்: சோதனையில் சிக்கிய டார்ச் லைட்
12 May 2024நெல்லை : நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் உடல் கிடந்த இடத்திற்கு அருகே எரிந்த நிலையில் டார்ச் லைட் ஒன்று போலீசாரின் தேடுதல் வேட்டையில் சிக்கியுள்ளது.
-
எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் பேசுவதை நிறுத்த மாட்டேன் : அண்ணாமலை திட்டவட்டம்
12 May 2024சென்னை : அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவரை பற்றி அவதுறாக பேசிய புகாரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
-
சாலை விபத்தில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் காயம்
12 May 2024திருவண்ணாமலை : அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் எ.வ.வே. கம்பன் சாலை விபத்தில் காயமடைந்தார்
-
மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. பேட்டி
12 May 2024மதுரை : மூன்றாண்டு காலமாக தி.மு.க.வினர் விளம்பரம் தேடினார்களே தவிர மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தெரிவித்த
-
கன்னட டி.வி. நடிகை விபத்தில் உயிரிழப்பு
12 May 2024பெங்களூரு : பிரபல தொலைக்காட்சி நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார்.
-
நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியர் கைது
12 May 2024ஒட்டாவா : காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் மேலும் ஒரு இந்தியரை கனடா போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி 70-வது பிறந்தநாள்: கவர்னர் ஆர்.என். ரவி வாழ்த்து
12 May 2024சென்னை : அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பம்
12 May 2024சென்னை : பொறியியல் படிப்பில் சேர முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
-
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் தீவிரம் : சுதந்திரம் கேட்டு கோஷம்
12 May 2024ஸ்ரீநகர் : பணவீக்கம், அதிகவரி, மின்சார பற்றாக்குறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
நிக்கி ஹாலே துணை அதிபர் வேட்பாளரா? - டொனால்ட் டிரம்ப் மறுப்பு
12 May 2024வாஷிங்டன் : வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில், இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலேயை துணை அதிபர் வேட்பாாளராக நிறுத்த பரிசீலனை செய்யவில்லை என முன்னாள் அதிபர் டிரம்ப் கூற
-
குடியுரிமை சட்டத்தை யாரும் ஒழிக்க முடியாது : மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
12 May 2024கொல்கத்தா : நான் இருக்கும் வரை யாரும் குடியுரிமை திருத்த சட்டத்தை ஒழிக்க முடியாது என்று மேற்கு வங்கத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடி பேசினார்.
-
ராஜஸ்தானில் ரூ.107 கோடி போதைப்பொருள் பறிமுதல் : மும்பை போலீசார் நடவடிக்கை
12 May 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ரூ.107 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை மும்பை போலீசார் பறிமுதல் செய்தனர். 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
உலக செவிலியர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
12 May 2024சென்னை : உலக செவிலியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
1,500 மீட்டர் ஓட்ட பந்தயம்: தடகள வீராங்கனை தீக்சா தேசிய சாதனை
12 May 2024லாஸ் ஏஞ்சல்ஸ் : இந்தியாவுக்காக 2021-ம் ஆண்டில் ஹார்மிலன் பெய்ன்ஸ் 4 நிமிடங்கள் 5.39 வினாடிகளில் பந்தய தொலைவை கடந்து படைத்திருந்த தேசிய சாதனையை தீக்சா முறியடித்து உள்ளார