முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதாலாக்கள் மீதான 3 வழக்குகளை ஒரேகோர்ட்டுக்கு மாற்றசி.பி.ஐ.மனு

ஞாயிற்றுக்கிழமை, 11 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, டிச.- 11- அரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன்கள் அஜய் சவுதாலா,  அபய் சவுதாலா ஆகியோர் மீது அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த  வழக்குகள் கீழ்க்கோர்ட்டு ஒன்றில்  நடைபெற்று வந்தன. இந்த 3 வழக்குகளையும் இருவேறு கோர்ட்டுகளுக்கு மாற்றி கீழ்க்கோர்ட்டு   உத்தரவிட்டது.  ஆனால் இதில் பல அசவுகரியங்கள் ஏற்படும் என்றும் இதனால் இந்த 3 வழக்குகளையும் ஒரே கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரி மாவட்ட நீதிபதி சுனிதா குப்தா முன்பு சி.பி.ஐ.அதிகாரிகள் மனு செய்துள்ளனர்.
இந்த 3 வழக்குகளையும் ஒரே நீதிபதி விசாரிக்க ஏதுவாக ஒரே கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் வருகிற ஜனவரி 18-ம் தேதிக்குள் தங்களது பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்