முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சீபுரம், டிச.- 20 - காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. மார்கழி உற்சவத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு nullஜைகள் நடந்து வருகிறது. திரளான பக்தர்கள் காலையிலேயே தரிசனத்துக்கு வருகிறார்கள்.   இந்த நிலையில் சென்னை போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு  நேற்று காலை ஒரு தொலைபேசி வந்தது. அதில் பேசியவன், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று காலை அது வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டான். மிரட்டல் குறித்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து காஞ்சீபுரம் போலீஸ் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.   போலீஸ் எஸ்.பி. மனோகரன், டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் போலீசாருடன் கோவிலுக்கு விரைந்தனர். போலீஸ் மோப்ப நாய் சீசர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கோவில் முழுக்க சோதனையிட்டனர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு சோதனையிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்