எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 8 - தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொறுப்பேற்று நடத்தும் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று காலை துவக்கியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை துவக்கி வைத்தார். பெண் நீதிபதி ரஞ்சனா தேசாய், தலலைமை நீதிபதி டி.முருகேசன், தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். விழாவில் மாநாட்டு மலரை சென்னை ஜகோர்ட் நீதிபதி டி.முருகேசன் வெளியிட, சீனியர் அட்வகேட் நளினி சிதம்பரம் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இந்திராணி நன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை நடத்த சென்னையைத் தேர்ந்தெடுத்தற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை காப்பதில் பெண்களின் பங்கு மிகமுக்கியமானது. பெண்களுக்குகான வாய்ப்புகள் பெற்று கொடுக்க புதிய சட்டங்களுக்கு, சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்றத் தருவவதற்கு போராடும் வேளையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமையை வழங்கியது உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்சாகும் என்று பேசினார். சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் பேசுகையில், பெண் வக்கீல்கள் அதிக நாட்கள் ஜுனியலர் வக்கீலாக பணியாற்ற வேண்டாம். ஒரு காலக்கட்டத்திற்கும் பின் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அது உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
நீதிபதி ரஞ்சனா பி.தேசாயிக்கு, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி நினைவுப் பரிசு வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் பேசுகையில், நீதித்துறையில் 50 சதவீதம் பெண்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்குகாரணம் முதலமைச்சர் ஜெயலலிதா தான். எனக்கு அவர் கொடுத்த பதவி தான் இந்த மாநாட்டில் உங்கள் முன் என்னை பேச வைத்துள்ளது. முதலில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளிறேன். பெண் வக்கீல்களுக்கும்,நீதிதுறைக்கும் சிறந்த சேவை செய்ய கடமை பட்டுள்ளேன் என்று கூறினார்.
தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, பெண் வக்கீல்கல் மீது முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வக்கீல் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும். பெண்களின் சரித்திரத்தையும், புகழையும் கூற தமிழ் சரித்திர நூல்கள் ஏராளம் உள்ளன. தமிழக முதலமைச்சர் நீதித்துறைக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட உத்தர விட்டுள்ளார்.
மேலும் மதுரைகிளை விரிவாக்கத்திற்கு அதிகி அளவு நிதி உதவி செய்துள்ளார் என்றார்.
இந்தியாவில் முதன்முதலாக, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி நிறுவுவதற்கான வழிவகையை முதலமைச்சர் ஜெயலலிதா செய்து வருகிறார். இந்த மாநாடு நடத்த ரூ.20 லட்சம் நிதியும் வழங்கியுள்ளார். நீதித்துறைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு எப்போதும் உதவி செய்யும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தொடர்பாளர் சுஜாதா ரெங்கராஜன் மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடர்ச்சியாக பிற்பகல் 2.30 மணிக்கு வாடகை தாய் என்ற நிகழ்வு சட்டத்திற்கு சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கவுரவக் கொலை என்ற தலைப்பில் கலப்பு திருமணம், வரதட்சணை பிரச்சனை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தூத்துக்குடியில் மாணவி கொலை வழக்கு: சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி ஐகோர்ட் கிளையில் மனு
13 Mar 2026தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அ
-
கள்ளச்சந்தையில் விற்க சிலிண்டர்கள் பதுக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது
13 Mar 2026மதுரை, மதுரையில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாட்டை காரணம் காட்டி, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக 398 எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்திருந்த 2 பேர் தமிழ்நாட்டில் முத
-
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீடு: கனிமொழி எம்.பி. தகவல்
13 Mar 2026தூத்துக்குடி, தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடுவார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி.. தேர்தல் அறிவிப்பே இன்னும் வரவில்லை.
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
ரூ.581.65 கோடி மதிப்பிலான அனில் அம்பானியின் சொத்துகள் முடக்கம்
13 Mar 2026புதுடெல்லி, கோவா, கேரளா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.581.65 கோடி மதிப்பிலான
-
தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
13 Mar 2026சென்னை, இளைஞர்களே தாய்த்தமிழை காக்க உழைப்பை மட்டும் கொடுங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு நாளை நேரில் ஆஜராகுகிறார் விஜய்
13 Mar 2026சென்னை, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விஜய் நாளை நேரில் ஆஜராகுகிறார்.
-
சுட்டு வீழ்த்தப்பட்டதா..? ஈராக்கில் விழுந்து நொறுங்கியது அமெரிக்க விமானம்-4 பேர் பலி
13 Mar 2026தெஹ்ரான், ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவத்தின் எரிபொருள் நிரப்பும் விமானத்தில் பயணித்த பணியாளர்கள் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் தொடர் அமளி: பார்லி., மக்களவை ஒத்திவைப்பு
13 Mar 2026புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவையில் எல்பிஜி தட்டுப்பாடு குறித்த எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
-
மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாளை மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026சென்னை, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் என்.டி.ஏ.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.1,843 கோடி செலவில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சாலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Mar 2026சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (13.03.2026) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம்,
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து 3-வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்
13 Mar 2026புதுடெல்லி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வர்த்தக எல்.பி.ஜி.
-
பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு: கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விநியோகிக்க தடை
13 Mar 2026சென்னை, பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் பாட்டில்கள், கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கக் கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத
-
இந்திய பங்குச்சந்தைகள் 3-ம் நாளாக கடும் வீழ்ச்சி : ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு
13 Mar 2026மும்பை, இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3-ம் நாளாக நேற்று (மார்ச் 13) கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகமானது.
-
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட 5 மாநில தோ்தல் தேதி மாா்ச் 16-ல் அறிவிப்பு?
13 Mar 2026புதுடெல்லி, தமிழகம், கேரளம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவை மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவைக்கு மாா்ச் 15 அல்லது 16-ஆம் தேதி தோ்தல் தேதியை இந்திய தோ்த
-
மாதவிடாய் விடுப்பு அளித்தால் பெண்கள் வேலை பறிபோகும்: சுப்ரீம் கோர்ட் கருத்து
13 Mar 2026புதுடெல்லி, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும், நிறுவன உரிமையாளர்கள், பெண்களை
-
இன்றைய ராசிபலன்
13 Mar 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Mar 2026- மன்னார்குடி ராஜகோபாலசுவாமி காலை பல்லக்கு, இரவு ராஜாங்க அலங்காரம்
- திருவாரூர் தியாகராஜர் வீதி உலா.
-
இன்றைய நாள் எப்படி?
13 Mar 2026


