எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜன.- 8 - தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொறுப்பேற்று நடத்தும் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று காலை துவக்கியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை துவக்கி வைத்தார். பெண் நீதிபதி ரஞ்சனா தேசாய், தலலைமை நீதிபதி டி.முருகேசன், தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். விழாவில் மாநாட்டு மலரை சென்னை ஜகோர்ட் நீதிபதி டி.முருகேசன் வெளியிட, சீனியர் அட்வகேட் நளினி சிதம்பரம் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இந்திராணி நன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை நடத்த சென்னையைத் தேர்ந்தெடுத்தற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை காப்பதில் பெண்களின் பங்கு மிகமுக்கியமானது. பெண்களுக்குகான வாய்ப்புகள் பெற்று கொடுக்க புதிய சட்டங்களுக்கு, சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்றத் தருவவதற்கு போராடும் வேளையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமையை வழங்கியது உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்சாகும் என்று பேசினார். சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் பேசுகையில், பெண் வக்கீல்கள் அதிக நாட்கள் ஜுனியலர் வக்கீலாக பணியாற்ற வேண்டாம். ஒரு காலக்கட்டத்திற்கும் பின் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அது உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
நீதிபதி ரஞ்சனா பி.தேசாயிக்கு, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி நினைவுப் பரிசு வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் பேசுகையில், நீதித்துறையில் 50 சதவீதம் பெண்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்குகாரணம் முதலமைச்சர் ஜெயலலிதா தான். எனக்கு அவர் கொடுத்த பதவி தான் இந்த மாநாட்டில் உங்கள் முன் என்னை பேச வைத்துள்ளது. முதலில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளிறேன். பெண் வக்கீல்களுக்கும்,நீதிதுறைக்கும் சிறந்த சேவை செய்ய கடமை பட்டுள்ளேன் என்று கூறினார்.
தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, பெண் வக்கீல்கல் மீது முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வக்கீல் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும். பெண்களின் சரித்திரத்தையும், புகழையும் கூற தமிழ் சரித்திர நூல்கள் ஏராளம் உள்ளன. தமிழக முதலமைச்சர் நீதித்துறைக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட உத்தர விட்டுள்ளார்.
மேலும் மதுரைகிளை விரிவாக்கத்திற்கு அதிகி அளவு நிதி உதவி செய்துள்ளார் என்றார்.
இந்தியாவில் முதன்முதலாக, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி நிறுவுவதற்கான வழிவகையை முதலமைச்சர் ஜெயலலிதா செய்து வருகிறார். இந்த மாநாடு நடத்த ரூ.20 லட்சம் நிதியும் வழங்கியுள்ளார். நீதித்துறைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு எப்போதும் உதவி செய்யும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தொடர்பாளர் சுஜாதா ரெங்கராஜன் மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடர்ச்சியாக பிற்பகல் 2.30 மணிக்கு வாடகை தாய் என்ற நிகழ்வு சட்டத்திற்கு சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கவுரவக் கொலை என்ற தலைப்பில் கலப்பு திருமணம், வரதட்சணை பிரச்சனை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.
09 Jul 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.