எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.24 - சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் வெளிவட்ட சாலை இரண்டாவது கட்டப்பணிகளுக்கு 1075 கோடி ரூபாய் ஒப்புதல் அளித்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஒரு மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை நிர்ணயப்பதிலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் சாலைகள் முக்கிய பங்காற்றுகின்றன. பயணிகள் மற்றும் சரக்குகளின் பாதுகாப்பான, சிக்கனமான மற்றும் விரைவான போக்குவரத்திற்கு சிறந்த சாலைகள் மிகவும் இன்றியமையாததாக விளங்குகின்றன. இதனை உணர்ந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா திறனான மற்றும் பாதுகாப்பான பயணத்திற்கு ஏற்ற சாலைகளை அமைத்து மாநிலத்தின் அனைத்து தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சியினை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
எண்ணூர் துறைமுகம், சென்னை துறைமுகம், சென்னை நகரை ஒட்டியுள்ள பகுதிகளில் இயங்கிவரும் பல்வேறு தொழிற்சாலைகள், மற்றும் நிறுவனங்களுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சரக்குகளை ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெட்டக வண்டிகள், நகரில் அன்றாடம் இயங்கும் போக்குவரத்து வாகனங்களுடன் இணைவதால் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனைக் கருத்தில் கொண்டு நெரிசலற்ற போக்குவரத்தினை ஏற்படுத்தும் வண்ணம், சென்னை மாநகரின் தென்பகுதி, மேற்கு பகுதி, மற்றும் வடக்கு பகுதிகளை இணைத்து புதியதாக வெளிவட்டச் சாலை கட்டம் ஐஐ அமைக்கும் பணிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் அளித்துள்ளார்.
ஏற்கனவே சென்னை வெளிவட்ட சாலையின் முதற்கட்டப் பணியான வண்டலூரிலிருந்து தொடங்கி தே.நெ.4ல் நசரத்பேட்டை, தே.நெ.205ல் நெமிலிச்சேரி வரையிலான 29.65 கி.மீ ளத்திற்கு 1,081.40 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டு பொது மற்றும் தனியார் பங்கேற்போடு வடிவமைத்தல், கட்டுதல், நிதி திரட்டுதல், செயல்படுத்தல், ஒப்படைத்தல் முறையில தனியார் நிறுவனத்தால் சாலைப் பணிகள துவங்கப்பட்டு பணிகள் நடைபெறறு வருகின்றன. அனைத்து பணிகளும் நவம்பர் 2012-க்குள் நிறைவு செய்யப்படும். இதன் தொடர்ச்சியாக நெமிலிச்சேரி (தே.நெ.205) முதல் திருவொற்றியூர்பொன்னேரி பஞ்சட்டி சாலையில் உள்ள மீஞ்சூர் வரையிலுள்ள மீதமுள்ள 32 கீ.மீ நீளமுள்ள சாலையை இரண்டாம் கட்ட பணியாக 1,075 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த பணிகள், அரசு மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ் கட்டுதல், இயக்குதல் மற்றும் ஒப்படைத்தல் அடிப்படையில் ஆண்டு ஈவுத் தொகை செலுத்தும் முறையில் செயல்படுத்தவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மற்றும் பாலங்கள் மட்டும் அமைத்தால் மட்டும் போதுமானது அல்ல; அவை முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பது மிகவும் இன்றியமையாததாகும். நன்கு பராமரிக்கப்படும் சாலைகள் மற்றும் பாலங்கள் மூலம் தான் சீரான வாகனப் போக்குவரத்து ஏற்படவும், மற்றும் விபத்துக்கள் தடுக்கப்படவும் முடியும். இதனைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாலைகள் மற்றும் பாலங்களின் பராமரிப்பிற்காக 285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார். இந்த ஒதுக்கீடு நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மாநிலம் முழுமைக்கும் சாலைகள் மற்றும் பாலங்களுடைய வழக்கமான காலமுறை பராமரிப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். மேலும், இவை தவிர சாலை புருவங்களை சீர் செய்தல், மண் திட்டுகள் அகற்றுதல், மழைநீர் வடிகாலுக்காக மண் வாய்க்கால்கள் அமைத்தல், சாலையோரங்களில் மரங்கள் நடுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பிற பணிகளும் செயல்படுத்தப்படும்.
மேற்கூறிய அரசின் நடவடிக்கைகளினால். சென்னை நகருக்கு பல திசைகளிலிருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெட்டக வண்டிகள் சென்னை மாநகருக்குள் நுழையாமல் எண்ணூர் மற்றும் சென்னை துறைமுகங்கள் மற்றும் சென்னை நகரை ஒட்டியுள்ள தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு எளிதாக சென்றடைய முடியும். இதனால் சென்னை மாநகரில் நெரிசலற்ற சீரான போக்குவரத்து அமையும். மேலும், சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதினால் மக்களின் பயண நேரம் குறைக்கப்படுவதுடன், பெருமளவில் வாகனங்கள் பழுதடைவது மற்றும் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிதியை கிள்ளிக் கொடுக்கிறது : கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு
26 Oct 2025நெல்லை : ஒவ்வொரு முறையும் கேட்கும் நிவாரணத்தை கொடுக்காமல் மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது என்று கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
-
பட்டுக்கோட்டை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியை கைது
26 Oct 2025பட்டுக்கோட்டை : பட்டுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் மற்றும் அது தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியயை ஆகியோரை போலீஸார் சனிக்கிழ
-
கேரளாவில் நிலச்சரிவு: ஒருவர் பலி
26 Oct 2025திருவனந்தபுரம் : கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் இடுக்கி மாவட்டம் அடிமலி கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.
-
குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி
26 Oct 2025தென்காசி : குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் - 4 பேர் பலி
26 Oct 2025கீவ் : உக்ரைன் , ரஷ்யா இடையே நேற்று 1 ஆயிரத்து 340வது நாளாக போர் நீடித்த நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 பேர் பலியானார்கள்.
-
8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல்
26 Oct 2025சென்னை : 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் ‘மோந்தா' புயல், சென்னைக்கு கிழக்கு - தென் கிழக்கு திசையில் 790 கி.மீ தூரத்தில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
-
அமெரிக்க் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்
26 Oct 2025நியூயார்க் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30 ஆயிரம் கனஅடியாக குறைப்பு
26 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியாக குறைக்கப்பட்டது.
-
'பைசன்' படக்குழுவினருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு : இயக்குனர் மாரி செல்வராஜ் நன்றி
26 Oct 2025சென்னை : மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார்.
-
கந்தசஷ்டி சூரசம்ஹார விழா; திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்
26 Oct 2025திருச்செந்தூர் : கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-10-2025.
26 Oct 2025 -
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
26 Oct 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கேளிக்கை நிகழ்ச்சியில் நடந்த சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு விளையாட்டுத்துறை திறமையானவர்களுக்கு என்றென்றும் பக்கபலமாக இருக்கும்: துணை முதல்வர்
26 Oct 2025சென்னை : திறமையாளர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டுத்துறை என்றென்றும் பக்கபலமாக இருக்கும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் சந்திக்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்
26 Oct 2025கரூர் : கரூர் சம்பவம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று சென்னையில் த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்கிறார்.
-
சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு
26 Oct 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கோரிய நடிகர் தர்ஷன் மனு மீது 29-ந் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: தங்க தேரில் சுவாமி வீதிஉலா
26 Oct 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று தங்க தேரில் சுவாமி வீதிஉலா நடந்தது.ஏராளமான பக்தர்கள் திரளாக வந்து சாமி தரிசனம
-
நேரடியாக போர் தொடுப்போம்: ஆப்கானுக்கு பாக். பகிரங்க எச்சரிக்கை
26 Oct 2025லாகூர் : ஆப்கானிஸ்தானுடன் நடந்து வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாவிட்டால் பாகிஸ்தான் வெளிப்படையான போரை தொடங்கும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச
-
ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி சம்பவம்: ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
26 Oct 2025ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் ரத்தமாற்றம் செய்யப்பட்ட 5 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி.
-
கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
26 Oct 2025வாஷிங்டன் : கனடா மீதும் மேலும் 10 சதவீத வரி விதிப்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: மலேசியாவில் ட்ரம்புக்கு உற்சாக வரவேற்பு
26 Oct 2025கோலாலம்பூர் : ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்க மலேசியா சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி
26 Oct 2025டெல்அவீவ் : அக்டோபர் 10-ம் தேதி காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களில் 93 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என காசா சுகாதர அமைச்சகம் த
-
பாக்.குடன் அமெரிக்காவின் நெருக்கம் இந்தியாவுடனான நட்பை பாதிக்காது : மார்கோ ரூபியோ விளக்கம்
26 Oct 2025நியூயார்க் : பாகிஸ்தானுடன் அமெரிக்கா காட்டும் நெருக்கம் இந்தியாவுடனான உறவுகளை பாதிக்காது என அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.
-
டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
26 Oct 2025புதுடெல்லி : டிஜிட்டல் கைதுக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறுகிறது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: தேஜஸ்வி வாக்குறுதி
26 Oct 2025பாட்னா : பீகாரில் இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர 20 நாட்களில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி அளித்


