எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை.மார்ச்.16 - தன்னையும் -நடிகை ரஞ்சிதாவையும் இணைத்து சன் டிவி, நக்கீரன் வெளியிட்ட வீடியோ பட காட்சிகள் போலியானவை சித்தரிக்கப்பட்டவை என்பதை அமெரிக்க புலனாய்வு பிரிவுக்கு இணையான தடவியல் நிபுணர்கள் 4 பேர் சோதனையிட்டு உறுதிபடுத்தி உள்ளனர் என்று நித்தியானந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த சாமி நித்தியானந்தா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.மூன்று விஷயங்களுக்காக செய்தியாளர்களை சந்திக்கிறேன்.கடந்தமுறை செய்தியாளர்களை சந்தித்தபோது லெனின் கருப்பன் தலைமறைவாக இருந்ததால் அவரைப்பற்றி எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசில் சரணடைந்ததால் ஆதாரங்களை திரட்டி வெளியிடுகிறோம்.முதலில் வீடியோ முற்றிலும் பொய் என்று எஃப்.பி.ஐ(அமெரிக்கா உளவு பிரிவு) லேப் டெக்னீஷியன் 4 கைதேர்ந்த நிபுணர்கள் மூலமாக ரிப்போர்ட் தயார் செய்து அறிக்கை வந்துள்ளது.60 காரணங்களை வெளியிட்டு சித்தரிக்கப்பட்டது என்று ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது.அதுமட்டுமல்ல அவர்கள் 4 பேரும் இந்திய நீதிமன்றத்தில் சாட்சியம் சொல்லவும் தயாராக இருக்கிறார்கள்.இந்திய சட்டப்படி அமெரிக்க எக்ஸ்பர்ட் சாட்சியம் ஏற்று கொள்ள தயாராக இருப்பது முக்கிய அம்சம். சன் டிவி பிரபலமான டிவி இதன் வெளியிடப்பட்ட காட்சிகளை நிபுணர்கள் எடுத்து சோதித்துள்ளனர் வீடியோ உண்மைகள் காட்சிகள் இயற்கையானது அல்ல அவதூறு செய்யும் வகையில் வெட்டியும் ஒட்டியும் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறி உள்ளனர் நான்கு பேரின் நடைமுறைகளும் அமெரிக்க புலனாய்வு தரத்துக்கு இணையானது.58 ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் தேசிய பாரன்ஸிக் நிறுவனத்தில் பணிபுரிந்த நிபுணர் ஒருவர் ஆவார். அவர்கள் அளித்த அறிக்கையில் சில விஷயங்களை டெக்னிக்கல் சைடில் காட்சிகளை வெட்டியும் ஒட்டப்பட்டுள்ளதாக லேயர்கள் எப்படி இணையாமல் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்திய தடவியல் துறை அறிக்கை எவ்வாறு மோசமானது என்பதை வரிக்கு வரி விமர்சித்துள்ளனர்.காட்சிகளை ஒளிபரப்ப கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியும் மாற்றி மாற்றி ஒளிபரப்பினார்கள். 2ஜி விவகாரமான சுவாமிஜி படத்தை போட்டு ஜனங்களை திசைமாற்று. நாட்டை கொள்ளை அடித்துவிட்டு அதன்மூலம் சிக்கல் ஏற்பட்டால் உடனே திசைதிருப்ப சாமியின் ஆசிரமங்களை அடித்து உடை என்ற முறையில் செயல்பட்டனர். கலாநிதிமாறன் என்ற தனிப்பட்ட மனிதனின் விருப்பத்திற்கு சன் டிவி என்ற நிறுவனத்தின் நம்பக தன்மை கெடுக்கப்படுகிறது. இவர்கள் மீது 32 நாடுகளில் வழக்கு தொடுக்க உள்ளேன். சன் டிவிக்கு பிரச்சனை வந்தால் தீனி போட நானா கிடைத்தேன். இரண்டாவதாக பிரசன்னா போலீஸ் விசாரணையில் பல விசயங்களை ஒத்துகொண்டார். நாங்கள் மறந்து போன சில விஷயங்களை பிரசன்னா வெளியிட்டார். ஐயப்பன் பணம் பிடுங்கியதை ஒப்பு கொண்டார் அந்த நேரம் யார் யார் இருந்தனர் என்பதையும் கூறியுள்ளார்.சக்சேனாவும் பல விஷயங்களை ஒத்து கொண்டுள்ளார். இப்போது லெனின் கைதாகி உள்ளார் லெனின் கருப்பனுக்கு எஃப்.பி.ஐ யில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இன்னொரு பெண்ணுக்கும் கள்ள தொடர்பு உள்ளதை நிரூபிக்க ஆதாரம் கொடுக்கப்பட்டுள்ளது. லெனின் கருப்பன் காந்தப்படுக்கை வழக்கில் தொடர்புடையவர். அவர் ஆசிரமத்திற்கு வந்த பிறகு அவருக்கு வேண்டியப்பட்ட பலரை பல வேலைகளில் அமர்த்தியுள்ளார் அதற்கான ஆதாரங்களை ஒப்படைத்துள்ளோம். அவர்கள் பணம் கேட்டு மிரட்டியதை என்னுடைய பர்செனல் செகரட்டரி செல்போனில் பதிவு செய்து வைத்துள்ளார். ரூ35 கோடி கேட்டு மிரட்டினார்கள். முதலில் 200 கோடிகேட்டு மிரட்டினார்கள் பின்னர் 60 கோடியாக குறைத்தார்கள் நாங்கள் ஒத்து கொள்ளவில்லை.கலாநிதி மாறன் தயாநிதிமாறன் மேல் அமலாக்கப்பிரிவு வழக்கு தொடர்ந்துள்ளது.அமலாக்கப்பிரிவு தொடர்ந்த 80 சதவித வழக்குகளில் தண்டனை பெற்றுதந்துள்ளனர். கலாநிதிமாறனுக்கும் கோபாலுக்கும் சொல்வது நீங்கள் என்மேல் போட்டது காமெடி வழக்கு இனிமேல் தான் இருக்குது ரியல் வழக்கு. மாறன் தி.மு.க மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மூலம் எங்கள் மீது 20 வழக்குகள் போட்டார் எதுவும் நிற்கவில்லை.எனது துணியை கூட புலித்தோல் என்று வழக்குபோட்டு இப்போது வழக்கை முடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மொத்தம் நூறு வழக்குகள் போட்டார்கள் சாமியார்கள் என்றால் கிள்ளு கீரையா? அட்டுளியத்திற்கும் ஒரு அளவில்லையா பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதா இவர்கள் இழைத்த கொடுமை தமிழ்நாட்டில் உள்ள எல்லா விஐபிக்களும் இவர்கள் ரத்தத்தை உறிஞ்சி போட்ட எலும்பு கூடுகள் தான்.தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பிறகு எவ்வித அரசியல் குறுக்கீடு இல்லாமல் வழக்கு நடந்துவருகிறது.லெனின் கருப்பன் மீது வழக்கு தொடரந்துள்ளோம் இந்த வழக்கில் சன் டிவி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் மானநஷ்ட வழக்கு கட்டாயம் போடுவேன். இவர்கள் அபரிக்க முயற்சித்த நிலம் எங்களுக்கு சொந்தமானது என்று போன வாரம் தீர்ப்பு வந்துள்ளது. சன் டிவி, தினகரன், நக்கீரன் கோபால், காமராஜ் மீது வருங்காலத்தில் மானநஷ்ட வழக்கு போடுவோம் இவ்வாறு பிரேமானந்தா கூறினார்.
ஐயப்பன் மூலம் சக்சேனா நக்கீரன் கோபால்- காமராஜ் மிரட்டினர் - நடிகை ரஞ்சிதா
தன்னிடம் தொடர்பு கொண்ட ஐயப்பன் மூலம் சக்சேனாவும், நக்கீரன் கோபாலும், காமராஜும் பேசி பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ரஞ்சிதா கூறினார்.
மேலும் சக்சேனா அவ்வளவு பணம் ரஞ்சிதாவிடம் இருக்காது. அவரது ஆரீகனைசேஷனில் பேசி வாங்கி தர சொல்லுங்கள் என்று தனது ஆடிட்டரிடம் சொல்லி அனுப்பியதாக ரஞ்சிதா கூறினார். பேட்டி முழுவதும் ரஞ்சிதா இறுக்கமாகவே காணப்பட்டார்.
மு.க.ஸ்டாலின் சமாதான தூது - நித்தியானந்தா பேட்டி
நித்தியானந்தா தனது பேட்டியில், அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரம் வந்தபோது என் பக்தர் ஒருவர் மூலம் சுவாமிஜியிடம் தங்களுக்கும் இந்த விவகாரங்களுக்கும் சம்பந்தமில்லை. கலைஞர் டி.வி.யில் இந்த காட்சிகள் ஒளிபரப்பாகாது. இதை சுவாமிஜியிடம் நான் சொன்னதாக கூறுங்கள் என்று ஸ்டாலின் சொல்லி அனுப்பியதாக நித்தியானந்தர் தெரிவித்தார்.
வீடியோவை ஆராய்ந்த நிபுணர்கள் விபரம்
1. எட்வர்ட் ஜோ: ஆடியோ வீடியோ தடய அறிவியல் துறை நிபுணர் நீதிமன்ற எக்ஸ்பர்ட். 27 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்.
2. பிரயன் நியூமீஸ்டர் : தடயவியல் துறை எக்ஸ்பர்ட் 31 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.
3. டேவிட் நோடோவிட்ஸ்: லாஸ் ஏஞ்சல்ஸ் சுப்பீரியர் பாரன்ஸிக் சையின்டிஸ்ட்.
4. ஜோ யூனோவிட்ஸ் 58 ஆண்டுகள் தடயவியல் துறையில் அனுபவம் பெற்ற நிபுணர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026


