எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து தேனி மாவட்டம் கம்பம், சின்னமனூர் போடிநாயக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் இறுதி கட்ட பிரச்சாரமாக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். இப்பிரச்சாரத்தின் போது தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,
மத்தியில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி புரிந்தது. ஆனால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.
மேலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மக்கள் பல லட்சம் பேர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்திய போது பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று நான் முதலமைச்சராக இருந்த போது வேண்டுகோள் விடுத்தேன். இதனையடுத்து உடனடியாக இந்த ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு ஒரே நாளில் நான்கு துறைகளிலும் அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடைபெற வழிவகை செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு மூல காரணமாய் இருந்தவர் நரேந்திர மோடி.
மேலும் தமிழகத்தில் தாய்மார்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை அம்மா செய்திருந்தார். அவர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பெண்கள் மற்றும் இல்லத்தரசிகளின் பணி சுமையை குறைப்பதற்காக இலவச மிக்சி கிரைண்டர் மின் விசிறி போன்ற அனைத்து பொருட்களும் தமிழக அரசால் 5 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா இருந்த போது பொங்கலுக்கு அனைவரும் சர்க்கரை பொங்கல் வைத்து சாப்பிடும் விதமாக பச்சரிசி வெல்லம் போன்றவை வழங்கப்பட்டது தற்போது அவற்றுடன் சேர்த்து மக்கள் அனைவரும் சந்தோசமாக பொங்கல் திருவிழாவை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அம்மா இருந்த பொழுது கொண்டு வந்த எந்த திட்டத்தையும் குறைக்கவில்லை, விரிவுபடுத்தப்பட்டுதான் வருகிறது. மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு தமிழக அரசால் 2000 ரூபாய் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு கொடுக்க முன் வருவதற்குள் தி.மு.க.வினர் அதனை தடுக்கும் விதமாக நீதிமன்றம் சென்று நிறுத்தி விட்டனர். உறுதியாக தேர்தல் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் இருக்கும் தடையை விலக்கி ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் நாங்கள் சரிவர வேலை செய்கிறோமா என்று மேலிருந்து எங்களை அம்மா கண்காணித்துக் கொண்டிருக்கிறார்.
அதனால் நாங்கள் பயந்து கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதை ஸ்டாலின் இந்தத் தேர்தலுடன் அ.தி.மு.க. காணாமல் போய் விடும் என்று பேசி வருகிறார். 1972-ல் எம்ஜிஆர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கத்திற்கு வந்த வேதனைகள் சோதனைகள் அனைத்தையும் தாங்கி இன்று ஒன்றரை கோடிக்கு மேல் தூய தொண்டர்களை கொண்ட இயக்கமாக உள்ளது. எந்த ஒரு கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக அம்மா உருவாக்கி வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்டாலின் கூறுகிறார், ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தமிழ்நாட்டையே தீ வைத்துக் கொளுத்தி விடுவார்கள் என்கிறார். அதற்கு நாங்கள் என்ன தீப்பந்தத்துடனா அலைந்து கொண்டிருக்கிறோம். மாமன், மச்சான் சண்டையில் மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீ வைத்துக் கொளுத்தி 3 பேர் இறந்ததற்கு தி.மு.க. வே காரணம். அதற்கு தீர்ப்பு காலம் தாழ்த்தி வந்தாலும் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர். இன்றைக்கும் ஸ்டாலின் எதிர்க்கட்சி தான். ஆனால் வன்முறையை கைவிடவில்லை.
சென்னையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு அந்தக் கட்சியினர் பணம் கொடுப்பதில்லை. தற்போது பணம் கொடுத்தால் மட்டும் தான் அவர்களை உள்ளே நுழைய விடும் அவலம் அந்த கட்சியினருக்கு தற்போது நிகழ்ந்து வருகிறது. எதிர்க்கட்சியில் இருக்கும் போதே இந்த ஒரு நிலை என்றால் ஆளுங்கட்சியாக அவர்கள் வந்தால் தமிழ்நாட்டை என்ன பாடு படுத்துவார்கள். மேலும் இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்களுக்கு நோன்புக் கஞ்சிக்கு 4,500 மெட்ரிக் டன் அரிசி விலையில்லாமல் வழங்கப்படுகிறது. மேலும் மூவாயிரத்திலிருந்து 4000 பேர் வரை ஹஜ் பயணத்திற்கு மாநில நிதியிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவ பெருமக்கள் ஜெருசலம் செல்வதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இப்படி அனைத்து தரப்பு மக்களுக்கும் நல்ல பல திட்டங்களை வழங்கி வருவது இந்த அரசுதான். ஆகவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் ரவீந்திரநாத் குமாருக்கு தங்களது வாக்குகளை வழங்க வேண்டும். உங்களுக்காக அவர் உழைத்திடுவார். இந்த இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மற்றும் நகர செயலாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.


