எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இன்று காலை 10.00 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராசன்- பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார். வளர்ப்புத்தாய் இராஜாமணி அம்மையாரால் வளர்க்கப்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார் ஆவார். பேரறிஞர் அண்ணா, ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அரசியல் தத்துவார்த்த மந்திராமான வார்த்தையை நாட்டு மக்களுக்கு நல்கியவர். அரசியலில் குடும்ப பாச உணர்வை ஊட்டியவர். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான். மாபெரும் ஜனநாயகத் தலைவர்.
பேரறிஞர் அண்ணா 06.03.1967 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். சென்னையில் 1968 ஜனவரித் திங்களில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தினார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தார். சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள் நடத்தினார். சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரறிஞர் அண்ணா, தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு, சென்னை, கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார். உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ. 9 லட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் சப்-பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரை சந்தித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
தமிழ்நாடு அரசு, பேரறிஞர் அண்ணாவுக்கு , சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் எழுப்பி அணையா விளக்கை ஏற்றி வைத்து அண்ணா சதுக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அங்கு அண்ணாவின் அழகு தமிழைக் கேட்க ஒலிச்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகமும், அண்ணா நூல்கள் விற்பனைக் கூடமும் அண்ணா சதுக்கத்தை அணி செய்கின்றன. 1969-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி இந்திய அரசு அண்ணாவின் நினைவாக 20 காசு அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. 1971-ம் ஆண்டு சென்னை மாநகரில் மவுன்ட் ரோடுக்கு அண்ணா சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழக அரசு வாங்கிய இரண்டு கப்பல்களுக்கு எம்.வி.தமிழ் அண்ணா என்ற பெயரும், தமிழ் அண்ணா என்ற பெயரும் சூட்டப்பட்டன.
1978-ம் ஆண்டு சென்னை, கிண்டியில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு எம்.ஜி.ஆரால் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், 1980-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த இல்லத்தை எம்.ஜி.ஆர். தலைமையில் அமைத்த தமிழக அரசு செப்டம்பர் 16 அன்று அண்ணா நினைவு இல்லமாக மாற்றியது. 1990-ம் ஆண்டு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, சொர்கவாசல் போன்ற நாடகங்கள், ஆரியமாயை, கம்பரசம் மற்றும் ரோமாபுரி ராணிகள் போன்ற பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் 1994-ம் ஆண்டு முதல் அம்மாவால் அரசுடைமையாக்கப்பட்டது. ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தினை அம்மா 09.12.2012 அன்று திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு (இன்று) 15.9.2019 காலை 10.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-09-2025.
13 Sep 2025 -
பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க. எஃகு கோட்டையை தொட்டுக்கூட பார்க்க முடியாது : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
13 Sep 2025சென்னை : பழைய எதிரிகள் - புதிய எதிரிகள் என எந்தக் கொம்பனாலும் தி.மு.க.
-
தங்கம் விலை சற்று சரிவு
13 Sep 2025சென்னை : உலக நாடுகள் இடையிலான போர் பதற்றம், பொருளாதார மந்தநிலை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வர
-
7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
13 Sep 2025மாஸ்கோ : 7.4 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானதாக சனிக்கிழமை காலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய அரசு திட்டங்களுக்கு நேரடி நிதி; ரிசர்வ் வங்கியில் கணக்கு துவக்கிய தமிழ்நாடு அரசு
13 Sep 2025சென்னை : மத்திய அரசின் உதவியுடன், மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்களுக்கான செலவு தொகையை, நேரடியாக வழங்கும் பணி துவங்கி உள்ளது.
-
திண்டுக்கல் அருகே மின் கசிவு காரணமாக பஞ்சு ஆலையில் திடீர் தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து நாசம்
13 Sep 2025திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார்நத்தம் பகுதியில் தனியார் பஞ்சு ஆலையில் வெள்ளிக்கிழமை இரவு பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது.
-
மிசோரத்தில் ரூ. 8,070 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பைராபி-சாய்ராங் புதிய ரயில் பாதை: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
13 Sep 2025ஐஸ்வால் : மிசோரமில் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
-
நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதிக்குள் தேர்தல் : இடைக்கால அரசு அறிவிப்பு
13 Sep 2025காத்மாண்டு : வன்முறை வெறியாட்டத்தில் சிக்கி தவித்த நேபாளத்தில் அடுத்தாண்டு மார்ச் 5ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை? வெளியான புதிய தகவல்கள்
13 Sep 2025புதுடெல்லி. வரும் 22-ம் தேதி முதல் அமலாகும் ஜி.எஸ்.டி. வரி விகித மாற்றத்தால் விலை உயரும் பொருட்கள் எவை என்பது குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்க்கும் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிப்பு? ஐ.நா. அறிக்கைக்கு வடகொரியா கடும் எதிர்ப்பு
13 Sep 2025பியாங்யாங், வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தால் குடிமக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாக ஐ.நா.
-
கிரிக்கெட் உபரகணங்கள் வழங்கும் நிகழ்ச்சி: அ.தி.மு.க. விளையாட்டு அணியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : எடப்பாடி பழனிசாமி பேச்சு
13 Sep 2025கோவை : அ.தி.மு.க.வில் உள்ள விளையாட்டு அணியிலும் வீரர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.
-
வரும் 20-ம் தேதி நடைபெற இருந்த நாகையில் விஜய் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு
13 Sep 2025நாகை, நாகை மாவட்டம் அவுரித்திடலில் வரும் 20-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜயின் பிரசாரத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
-
பழநி கோவிலுக்கான ரூ.100 கோடி நிலம் மீட்பு
13 Sep 2025பழநி, பழநி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டது.
-
வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணி: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை : தமிழக தலைமைத்தோ்தல் அதிகாரி தகவல்
13 Sep 2025சென்னை : தீவிர வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் தொடா்பாக, தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்துள்ளாா்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு: ஐ.நா. தீர்மானத்துக்கு 142 நாடுகள் ஆதரவு : அமெரிக்கா உள்ளிட்ட 10 நாடுகள் எதிர்ப்பு
13 Sep 2025நியூயார்க் : பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதி வழியில் தீர்வு ஏற்படுத்த கோரும் ஐ.நா. தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 142 நாடுகள் ஆதரவாக ஓட்டளித்தன.
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பலூனில் பறக்கும் போது பிடித்த தீ; அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பிய ம.பி. முதல்வர் மோகன் யாதவ்
13 Sep 2025போபால் : மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் சென்ற வெப்ப காற்று பலூன் தீப்பிடித்தது. இதில் அவர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினார்.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
நேபாள இடைக்கால அரசின் பிரதமராக சுசீலா பதவியேற்பு : பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
13 Sep 2025புதுடில்லி : நேபாள இடைக்கால அரசின் பிரதமராக பதவியேற்றுள்ள முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி திருச்சியில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
13 Sep 2025சென்னை : திருச்சி வந்த த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
இன்று ஜப்பான் தலைநகரில் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
13 Sep 2025டோக்கியோ : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஜப்பானில் துவங்கவுள்ள நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே எழுந்த