எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பேரறிஞர் அண்ணா அவர்களின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் இன்று காலை 10.00 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர்.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,
அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பேரறிஞர் அண்ணா, காஞ்சிபுரத்தில் நடராசன்- பங்காரு அம்மாள் இணையருக்கு மகனாக 15.09.1909 அன்று பிறந்தார். வளர்ப்புத்தாய் இராஜாமணி அம்மையாரால் வளர்க்கப்பட்டார். பேரறிஞர் அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார் ஆவார். பேரறிஞர் அண்ணா, ஏழை, எளிய மக்களிடையே தம் பேச்சாற்றலால் அறிவுப் புரட்சியை உருவாக்கியவர். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற அரசியல் தத்துவார்த்த மந்திராமான வார்த்தையை நாட்டு மக்களுக்கு நல்கியவர். அரசியலில் குடும்ப பாச உணர்வை ஊட்டியவர். மாற்றாரையும் மதிக்கக் கற்றுத் தந்த ஆசான். மாபெரும் ஜனநாயகத் தலைவர்.
பேரறிஞர் அண்ணா 06.03.1967 அன்று தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவியேற்றார். மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்திடும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். சென்னையில் 1968 ஜனவரித் திங்களில் இரண்டாவது உலகத்தமிழ் மாநாட்டினை நடத்தினார். சீர்திருத்த திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தார். சேலம் உருக்காலைத் திட்டத்தை நிறைவேற்ற, மைய அரசை வற்புறுத்தி, பேரறிஞர் அண்ணா, தமிழ்நாடெங்கும் ‘சேலம் எழுச்சி நாள் நடத்தினார். சென்னையில் கூவம் சீரமைப்புத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
பேரறிஞர் அண்ணா, தமிழ் வளர்த்த சான்றோர்களுக்கு, சென்னை, கடற்கரைச் சாலையில் சிலைகள் அமைத்துப் போற்றினார். உலகத் தமிழ் மாநாட்டு ஊர்வலத்தை, சென்னை மாநகரில் நடத்தினார். திருக்குறள் ஆராய்ச்சிக்காக ரூ. 9 லட்சம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். தாய்மொழி தமிழ், உலக மொழி ஆங்கிலம் ஆகிய இருமொழித் தீர்மானத்தை சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றச் செய்தார். அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் சப்-பெலோஷிப் விருது பெற்றார். வாட்டிகன் நகரில் போப்பாண்டவரை சந்தித்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
தமிழ்நாடு அரசு, பேரறிஞர் அண்ணாவுக்கு , சென்னை, மெரினா கடற்கரையில் நினைவிடம் எழுப்பி அணையா விளக்கை ஏற்றி வைத்து அண்ணா சதுக்கத்தை உருவாக்கி இருக்கிறது. அங்கு அண்ணாவின் அழகு தமிழைக் கேட்க ஒலிச்சாதன வசதி அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா நூலகமும், அண்ணா நூல்கள் விற்பனைக் கூடமும் அண்ணா சதுக்கத்தை அணி செய்கின்றன. 1969-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. 1970-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம் தேதி இந்திய அரசு அண்ணாவின் நினைவாக 20 காசு அஞ்சல் தலையை வெளியிட்டுச் சிறப்பித்தது. 1971-ம் ஆண்டு சென்னை மாநகரில் மவுன்ட் ரோடுக்கு அண்ணா சாலை எனப் பெயர் சூட்டப்பட்டது. தமிழக அரசு வாங்கிய இரண்டு கப்பல்களுக்கு எம்.வி.தமிழ் அண்ணா என்ற பெயரும், தமிழ் அண்ணா என்ற பெயரும் சூட்டப்பட்டன.
1978-ம் ஆண்டு சென்னை, கிண்டியில் தமிழக அரசால் தொடங்கப்பட்ட தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திற்கு எம்.ஜி.ஆரால் அண்ணா பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், 1980-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில், பேரறிஞர் அண்ணா பிறந்த இல்லத்தை எம்.ஜி.ஆர். தலைமையில் அமைத்த தமிழக அரசு செப்டம்பர் 16 அன்று அண்ணா நினைவு இல்லமாக மாற்றியது. 1990-ம் ஆண்டு சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு அண்ணா பன்னாட்டு விமான நிலையம் எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், வேலைக்காரி, ஓர் இரவு, நல்ல தம்பி, சொர்கவாசல் போன்ற நாடகங்கள், ஆரியமாயை, கம்பரசம் மற்றும் ரோமாபுரி ராணிகள் போன்ற பேரறிஞர் அண்ணாவின் படைப்புகள் அனைத்தும் 1994-ம் ஆண்டு முதல் அம்மாவால் அரசுடைமையாக்கப்பட்டது. ரூ. 1.20 கோடி மதிப்பீட்டில் புதுப்பொலிவுடன் புனரமைக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தினை அம்மா 09.12.2012 அன்று திறந்து வைத்தார். தமிழக அரசின் சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்படவுள்ள திருவுருவப் படத்திற்கு (இன்று) 15.9.2019 காலை 10.00 மணியளவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்துகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-07-2025.
04 Jul 2025 -
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர் கைது
04 Jul 2025நீலகிரி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
திருச்செந்தூர் கும்பாபிஷேக விழா: சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜை
04 Jul 2025திருச்செந்தூர் : கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் சண்முகர் விமான கலசத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்