முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். மரியாதை

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் பெருமக்கள் ஆகியோர் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அம்மாவின் நல்லாசியுடன் செயல்படும் தமிழக அரசு, தமிழ்ச் சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான செப்டம்பர் 15-ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி, பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு நேற்று காலை 10.00 மணியளவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் கே. ராஜூ, பி. தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், டாக்டர். வி.சரோஜா, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், ஓ. எஸ். மணியன், உடுமலை கே. ராதாகிருஷ்ணன், டாக்டர் சி. விஜயபாஸ்கர், இரா. துரைக்கண்ணு, கடம்பூர் ராஜூ, ஆர். பி. உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், கே. டி. ராஜேந்திரபாலாஜி, பா. பென்ஜமின், டாக்டர். நிலோபர் கபீல், எம். ஆர். விஜயபாஸ்கர், வி. எம். ராஜலெட்சுமி, க. பாண்டியராஜன், சேவூர் எஸ். இராமச்சந்திரன், வளர்மதி மற்றும் அரசு தலைமைச் செயலாளர் சண்முகம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் கார்த்திக், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) இரவீந்திரன், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து