எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வினர் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை போட்டி போட்டு அளித்தனர். சென்னையில் ஐந்து இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் விருப்ப மனுக்களை வழங்கினர்.
தமிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் விரைவில் நடைபெறவிருக்கிறது, இத்தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. சார்பில் விருப்பமனுத்தாக்கல் 15, 16 தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர், மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என ஏற்கனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமனு விநியோகம் நேற்று தொடங்கியது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட இன்று வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது. மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் 5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் பதவிக்கு 10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 2 ஆயிரத்து 500 ரூபாயும், இதே போல் பேரூராட்சி தலைவர் பதவிக்கு 5 ஆயிரம் ரூபாயும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ஆயிரத்து 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் ராயபுரம் எஸ்.என் செட்டித் தெருவில் தொடங்கிய விருப்பமனு தாக்கலை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தொடங்கி வைத்தார். ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. செயலாளர் ஏ.டி.அரசு, துறைமுகம் தொகுதி ஜெயலலிதா பேரவை செயலாளர் மோகன் ஆகியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனுக்களை வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட செயலாளர் பாலகங்கா, முன்னாள் மாவட்ட செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன் ஆகியோர் மனுக்களை பெற்றனர். வடசென்னை வடக்கு, கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொருக்குப்பேட்டை வேலன் திருமண மண்டபத்தில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் ஆகியோர் மனுக்களை பெற்றனர்.
தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.முக. சார்பில் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன்,கோகுல இந்திரா, ஜெ பேரவை மாநில இணைசெயலாளர் ரமேஷ், தி,நகர் எம்.எல்.ஏ. சத்யா உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பெற்றனர். இதே போல் தென்சென்னை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருகம்பாக்கம் ராதா மஹாலில் விருப்பமனுக்கள் பெறப்பட்டன. நேற்று காலை 10 மணிக்கு விருப்பமனுக்கள் பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் திரண்டு வந்து விருப்பமனுக்களை பெற்றனர். மேயர் தேர்தலில் போட்டியிட அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்த்தன், அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், முன்னாள் எம்.பி.க்கள் வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.அசோக், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் மகளிர் அணி இணைச்செயலாளர் நூர்ஜகான், மயிலாப்பூர் பகுதி செயலாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விருப்பமனுக்களை வழங்கினர்.
இதே போல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட துறைமுகம் தொகுதியில் மோகன், குமாரி நாராயணன் எழும்பூர் தொகுதியில் பிரிதிவி ராஜன், வேளாங்கண்ணி ஆயிரம் விளக்கில் வழக்கறிஞர் சதாசிவம், புஷ்பாநகர் ஆறுமுகம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் விருப்பமனுக்களை அளித்தனர். அ.தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் விருப்பமனுக்களை வழங்கினர். இதே போல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் தங்களது விருப்ப மனுக்களை போட்டி போட்டுக் கொண்டு நிர்வாகிகளிடம் வழங்கினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தங்கம் விலை சற்று சரிவு
09 Jul 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.72,000-க்கு விற்பனையானது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
கடலூர் ரயில் விபத்து: கேட் கீப்பராக 'தமிழர்' நியமனம்
09 Jul 2025சென்னை, கடலூர் ரயில் விபத்தை அடுத்து அங்கு புதிய கேட் கீப்பராக தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 நாட்களுக்கு உயர வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
09 Jul 2025சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்புள்ளது.
-
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசை எதிர்த்து தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை- வழக்கம்போல் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள் இயங்கின - கேரளா, மேற்கு வங்கம், ஒடிசாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
09 Jul 2025சென்னை : மத்திய அரசை எதிர்த்து 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13 தொழிற்சங்கங்கள் நடத்திய பாரத் பந்த்தால் தமிழ்நாட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
டெக்ஸாஸ் வெள்ளம்: பலி 109 ஆக உயா்வு
09 Jul 2025டெக்ஸாஸ் : டெக்ஸாஸில் ஏற்பட்ட திடீா் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 109 ஆக உயா்ந்துள்ளது.
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
09 Jul 2025சென்னை, மத்திய அரசை கண்டித்து நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
ஆசியாவின் அதிக வயதான யானை உயிரிழப்பு
09 Jul 2025போபால் : ஆசியாவிலேயே அதிக வயதான யானை வட்சலா உயிரிழந்தது.
-
திருவாரூரில் முதல்வர் 'ரோடு ஷோ'
09 Jul 2025திருவாரூர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில
-
'வள்ளுவர் மறை வைரமுத்து உரை' 13-ம் தேதி வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Jul 2025சென்னை : வள்ளுவர் மறை வைரமுத்து உரை' என்ற பெயரில் கவிஞர் வைரமுத்து திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.
-
கணவர் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: ‛கல்லுக்குள் ஈரம்'' நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு
09 Jul 2025சென்னை : கணவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரை அடுத்து 1980-களில் பிரபலமாக இருந்த நடிகை அருணாவின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
-
ராஜஸ்தானில் பயங்கரம்: இந்திய விமானப்படை விமானம் விழுந்து விபத்து - இருவர் பலி
09 Jul 2025ஜெய்பூர் : ராஜஸ்தானின் சுருவில் இந்திய விமானப்படையின் ஜாகுவார் போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானி உள்பட இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
-
ஜூலை 28-ல் சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
09 Jul 2025சென்னை : உதவி பேராசிரியர் பணிக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு ஒரேகட்டமாக ஜூலை 28-ம் தேதி நடைபெறுகிறது என்று என்டிஏ அறிவித்துள்ளது.
-
மாணவர்களுக்கு அரசியல் புரிதல் வேண்டும்: 'ஓரணியில் தமிழ்நாடு' நின்றால் நம்மை யாராலும் வீழ்த்த முடியாது : திருச்சி கல்லூரி விழாவில் முதல்வர் முக.ஸ்டாலின் பேச்சு
09 Jul 2025திருச்சி : “காந்தி வழி, அம்பேத்கர் வழி, பெரியார் வழி என்று மாணவர்கள் பின்பற்ற வழிகள் உள்ளன.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.