எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மு.க.ஸ்டாலினின் புகாருக்கு தமிழக அரசு பதிலளித்துள்ளது.
இது குறித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு அரசு புதிய மாவட்டங்களை திட்டமிட்டு பிரித்துள்ளதாகவும் இப்படி பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு 50 ஆயிரம் ஓட்டு பெறக்கூடிய ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் இனி 5 ஆயிரம் ஒட்டு பெறக்கூடிய வகையில் பிரித்து ஆளுங்கட்சி தேர்தலை நடத்தப் போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளார். மேலும் தேர்தலை நிறுத்த சொல்லி ஒரு வார்த்தை கூட கூறாமல் உள்ளாட்சித்தேர்தலை நிறுத்துவதற்கும் ஆளும்கட்சி திட்டமிட்டு வருகிறதோ என சந்தேகம் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
2016-ம் ஆண்டில் உள்ளாட்சித்தேர்தலை நடத்துவதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்தபின்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியால் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 21-9-2016 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னரும் இந்த தீர்ப்பை எதிர்த்தும் மீண்டும் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று வரை நிலுவையில் உள்ளது. எனினும் தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்றுத்தான் தமிழ்நாடு அரசு, 2011-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளை மறுவரையறை செய்யும் வகையில் 21 -7-2017 ஆம் ஆண்டில் தனது அறிவிக்கையின் மூலம் எல்லை வரையறை ஆணையத்தை ஏற்படுத்தியது. மேற்படி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு அறிவிக்கை 2018-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அரசிதழிலும் வெளியிடப்பட்டது. மேலும் மறுசீரமைக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் ஆதிதிராவிடர் பழங்குடியினர், மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு மற்றும் மாவட்ட அரசிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டன.
கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மறுவரையறை செய்யப்பட்ட உள்ளாட்சி வார்டுகளின் அடிப்படையிலை வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணிகளை துரிதமாக முடித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோருக்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கான ஆயத்தப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அரசை குறை சொல்லும் நோக்கில் இது போன்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது மிகவும் வருந்தத்தக்கது. பல்வேறு மாவட்டங்களை பிரிப்பது என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் நெடுநாளைய கோரிக்கை. அதை ஏற்று செயல்படுத்துவது நிர்வாக நடைமுறையாகும். 2020-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் பூர்வாங்க பணிகள் தொடங்க இருப்பதால் டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்னர் எந்த வொரு நிர்வாக அலகையும் புதிதாக ஏற்படுத்தவோ அல்லது அதை குறைக்கவோ இயலாது. எனவே மக்களின் கோரிக்கைக்கு ஏற்பட முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் சட்டசபையில் அறிவிக்கப்பட்ட புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணியை தமிழ்நாடு அரசு விரைவாக முடித்து அதை நடைமுறைப்படுத்தியுள்ளது.
புதிய மாவட்டங்களை தோற்றுவித்தும் அவற்றின் எல்லைகளை வரையறுத்தும் வெளியிடப்பட்ட அரசாணைகள் பத்தி 7-ல் உள்ளாட்சி வார்டுகளின் மறுசீரமைப்பு பணி முடிவுற்றுள்ளதாலும் சுப்ரீம் கோர்ட் வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி ஏற்கனவே தொடங்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதாலும் தற்போது புதிய மாவட்டங்கள் தோற்றுவிக்கப்பட்டதாலும் இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட எல்லை வரையறைப்படி நடைபெறும் இந்த தேர்தல் பணிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எந்த குழப்பமும் இல்லை என தெளிவாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றங்கள் தேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தல் முடிவுற்ற பின்னர் அரசால் அவை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
எனவே புதிதாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படுவதற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. 2018-ம் ஆண்டில் ஏற்கனவே புதிதாக மறுவரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்ட வார்டுகளின் அடிப்படையிலேயே உள்ளாட்சித்தேர்தல் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தால் விரைவில் நடத்தமுடிக்கப்படும் என்று தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025