எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. முஸ்லிம்களின் இந்த போராட்டத்துக்கு அந்த பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து எதிர் போராட்டத்தில் குதித்தனர். அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வடகிழக்கு டெல்லி பகுதியில் தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் டெல்லி வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். போலீசார் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலாமல்போய் விட்டது. இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் மீதும் சரமாரியாக கல் வீசப்பட்டன. மறுநாள் திங்கட்கிழமையும் கலவரம் நீடித்தது. அன்று நடந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் 3-வது நாளாக கலவரம் நீடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்புவர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். என்றாலும் கலவரம் அடங்கவில்லை. இதனால் போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கலவரம் நடந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கலவரத்தின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. டெல்லி கலவரத்தில் நேற்று முன்தினம் காலை வரை 5 பேர் பலியாகி இருந்தனர். பிறகு அது 8 ஆக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 13 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் காரணமாக டெல்லி வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி கலவரம் 3 நாட்களாக நீடித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். 3 முறை அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலவரம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்கவும், அமைதிக்குழுக்களை உருவாக்கி பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் உடனடியாக பிறப்பிக்கப்பட்டன. அமித்ஷாவின் ஆலோசனையை தொடர்ந்து கூடுதலாக 35 கம்பெனி துணைநிலை ராணுவப்படை வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தது. அவர்கள் கொடி அணிவகுப்பும் நடத்தினார்கள். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. என்றாலும் வடகிழக்கு டெல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவும் சில இடங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்தது. வீடுகளை தாக்கும் சம்பவம் அதிகரித்தது. இது பற்றி அறிந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வடகிழக்கு டெல்லி பகுதிக்கு விரைந்தார். கலவரம் நடந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கலவரக்காரர்களில் ஒரு பிரிவினர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தங்களது வீடுகளை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினார்கள். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே டெல்லி கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு நீதிபதி முரளிதர் வீட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் 11 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் கலவரம் தீவிரமானதால் டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரானது. நேற்று காலையிலும் சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்தது. பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. டெல்லி வன்முறை சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்புவதால் பதட்டம் தணியவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி வன்முறை காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கலவரத்தை முழுமையாக ஒடுக்குவதற்காக வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கியில் எச்சரித்து வருகிறார்கள். கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக சுடுவதற்கு டெல்லி போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு டெல்லியில் நேற்று காலை அமைதி நிலவியது. கலவரத்தை ஒடுக்கி மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவற்காக டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி கண்டனம்
இந்நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் டெல்லி வன்முறைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசு இது போன்ற வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்றும் ரஜினி எச்சரித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்
14 Dec 2025சென்னை, பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியானவர்களுக்கு ரூ. ஆயிரம் நிச்சயம் கிடைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
14 Dec 2025தருமபுரி, தமிழகத்தில் ஏற்கனவே 1 கோடியே 13 லட்சம் பேருடன் மொத்தமாக 1 கோடியே 30 லட்சம் பேருக்கு உதவித் தொகை வழங்கியுள்ளோம்.
-
மூடுபனியால் விபரீதம்: அரியானாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து
14 Dec 2025சண்டிகர், அரியானா மாநிலத்தில் நெடஞ்சாலைகளில் நிலவிய மூடுபனியால் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பலர் காயமடைந்தனர்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.


