எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஷாகின் பாக் பகுதியில் முஸ்லிம்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த் பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது. முஸ்லிம்களின் இந்த போராட்டத்துக்கு அந்த பகுதியில் உள்ள மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து எதிர் போராட்டத்தில் குதித்தனர். அது மோதலாக மாறியது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன. வடகிழக்கு டெல்லி பகுதியில் தெருக்களில் நிறுத்தப்பட்டு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் டெல்லி வடகிழக்கு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களை அடித்து உடைத்து தீ வைத்தனர். போலீசார் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததால் கலவரத்தை உடனடியாக கட்டுப்படுத்த இயலாமல்போய் விட்டது. இதற்கிடையே கலவரத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் துப்பாக்கியால் சுட்டனர். போலீசார் மீதும் சரமாரியாக கல் வீசப்பட்டன. மறுநாள் திங்கட்கிழமையும் கலவரம் நீடித்தது. அன்று நடந்த தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் 3-வது நாளாக கலவரம் நீடித்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்புவர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். என்றாலும் கலவரம் அடங்கவில்லை. இதனால் போலீசார் சில இடங்களில் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். கலவரம் நடந்த பகுதிகளில் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கலவரத்தின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. டெல்லி கலவரத்தில் நேற்று முன்தினம் காலை வரை 5 பேர் பலியாகி இருந்தனர். பிறகு அது 8 ஆக உயர்ந்தது. நேற்று காலை நிலவரப்படி 13 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் கலவரத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதன் காரணமாக டெல்லி வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 70 பேருக்கு துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டு இருக்கிறது. டெல்லி கலவரம் 3 நாட்களாக நீடித்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். 3 முறை அவர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலவரம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் கூடுதல் படைகளை குவிக்கவும், அமைதிக்குழுக்களை உருவாக்கி பேச்சு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான உத்தரவுகள் உடனடியாக பிறப்பிக்கப்பட்டன. அமித்ஷாவின் ஆலோசனையை தொடர்ந்து கூடுதலாக 35 கம்பெனி துணைநிலை ராணுவப்படை வடகிழக்கு டெல்லிக்கு விரைந்தது. அவர்கள் கொடி அணிவகுப்பும் நடத்தினார்கள். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டது. என்றாலும் வடகிழக்கு டெல்லி பகுதியில் நேற்று முன்தினம் இரவும் சில இடங்களில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்தது. வீடுகளை தாக்கும் சம்பவம் அதிகரித்தது. இது பற்றி அறிந்ததும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் வடகிழக்கு டெல்லி பகுதிக்கு விரைந்தார். கலவரம் நடந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். அதன் பிறகு டெல்லி உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வடகிழக்கு டெல்லி பகுதியில் கலவரத்தை ஒடுக்க மத்திய அரசு புதிய அதிரடி நடவடிக்கையை எடுத்து உள்ளது. அதன்படி கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கலவரக்காரர்களில் ஒரு பிரிவினர் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தங்களது வீடுகளை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டினார்கள். போராட்டம் நடத்தியவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே டெல்லி கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க உரிய பாதுகாப்பு வழங்குவதற்கு உத்தரவிடக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 2 மணிக்கு நீதிபதி முரளிதர் வீட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், கலவரத்தில் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளை போலீசார் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே டெல்லியில் கலவரத்தில் ஈடுபட்டதாக போலீசார் 11 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். நேற்று முன்தினம் கலவரம் தீவிரமானதால் டெல்லி மெட்ரோ ரெயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை மெட்ரோ ரெயில் போக்குவரத்து சீரானது. நேற்று காலையிலும் சில இடங்களில் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதனால் வடகிழக்கு டெல்லி பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடித்தது. பள்ளிக்கூடங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. டெல்லி வன்முறை சம்பவத்தை சில தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் ஒளிப்பரப்புவதால் பதட்டம் தணியவில்லை என்று புகார்கள் எழுந்தன. இதையடுத்து தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கும் வகையில் வன்முறை காட்சிகளை ஒளிபரப்ப வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறி வன்முறை காட்சிகளை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பினால் கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கலவரத்தை முழுமையாக ஒடுக்குவதற்காக வடகிழக்கு டெல்லியில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் திரள தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கியில் எச்சரித்து வருகிறார்கள். கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக சுடுவதற்கு டெல்லி போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வடகிழக்கு டெல்லியில் நேற்று காலை அமைதி நிலவியது. கலவரத்தை ஒடுக்கி மக்களிடம் அமைதியை ஏற்படுத்துவற்காக டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார்.
ரஜினி கண்டனம்
இந்நிலையில் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் டெல்லி வன்முறைக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டார். மத்திய அரசு இது போன்ற வன்முறைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படும் என்றும் ரஜினி எச்சரித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
நாகரிகப் பயணம் படத்தின் இசை வெளீயீட்டு விழா
16 Sep 2025RICH மற்றும் DSK மூவிஸ் இணைந்து வழங்க, தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாகரிகப் பயணம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில்
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் கனமழை
16 Sep 2025சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை பெய்ததால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
பார்லி.யை மேலும் பலப்படுத்த ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு
16 Sep 2025டெல்லி : பாராளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
வக்பு சட்டத்திருத்தம் குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
16 Sep 2025சென்னை : வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு கிடைத்ததுக்கு த.வெ.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.