எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜாகர்தா, ஜுன் - 18 - இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பட்டத்தை மூன்றாவது முறையாக பெற்று சாதித்திருக்கிறார். இந்தோனேஷிய தலைநகர் ஜாகர்தாவில் இந்தோனேஷிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தன. இப்போட்டிகளில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலர் பட்டத்தை வெல்ல கடுமையாக போராடினர். இந்த போட்டித் தொடரில் இந்தியா ஆடவர் மற்றும் பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக செயல்பட்டது. ஒலிம்பிக் போட்டித் தொடருக்கு தேர்வு பெற்றுள்ள இந்திய வீரர்கள் காஷ்யப் மற்றும் சாய்னா நேவால் ஆகியோர் ஆரம்பம் முதல் மிகச் சிறப்பாக செயல்பட்டு அரை இறுதி போட்டியை எட்டினர். ஆனால் காஷ்யப் அரை இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரரிடம் தோல்வி அடைந்ததால் தொடரில் இருந்து வெளியேறினார். ஆனால் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய்னா நேவால் அரை இறுதியில் கொரிய வீராங்கனையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் இந்தோனேஷிய சூப்பர் சீரிஸ் இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 4 வது முறையாக தகுதி பெற்றார் சாய்னா. இறுதிப் போட்டியில் சாய்னா சீனாவின் ஜியூரூய் லீயை சந்தித்தார். உலகத் தரவரிசையில் 4 ம் இடத்தில் இருக்கும் லீ, ஏற்கனவே சாய்னாவுடன் மோதிய 4 போட்டிகளில் 3 இல் வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வலுவான லீ தனது அதிரடி துவக்கத்தின் மூலம் முதல் செட்டில் சாய்னாவை எளிதில் வீழ்த்தினார். இரண்டாவது கேமில் எழுச்சி கண்ட சாய்னா கடும் போராட்டத்திற்குப்பின் அந்த கேமை 22 - 20 என்ற கணக்கில் வென்றார். இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3 வது கேமை ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த போட்டி மிகக் கடுமையாக இருந்தது. இந்த கேமில் லீ பல ரிட்டர்ன் ஷாட்களை நெட்டில் அடித்ததால் பாயிண்ட்களை இழந்தார். இதை பயன்படுத்தி மிகச் சிறப்பாக செயல்பட்ட நேவால் 21 - 19 என்ற கணக்கில் மூன்றாவது கேமை வென்று பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றினார். இதற்கு முன் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இவர் இங்கு பட்டம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு இத் தொடரில் 2 ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்து ஓபன் போட்டியில் பட்டம் வென்ற சாய்னா நேவால், சில தினங்களுக்கு உள்ளாகவே இந்த போட்டியில் வென்றுள்ளார். இது இவர் இந்த ஆண்டில் வெல்லும் 3 வது பட்டமாகும். ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் துவங்கவுள்ள நிலையில் சாய்னாவின் இந்த எழுச்சி இந்திய பேட்மிண்டன் ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை சீன வீராங்கனைகள் அனைவருமே கடுமையான சவாலைத் தரக்கூடியவர்கள் என்றார். மேலும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் எனக்காக ஆரவார குரல் கொடுத்தது எனக்கு மேலும் உற்சாகத்தை கொடுத்தது என்றார்.
தோல்வியடைந்த லீ கூறுகையில், நான் பலமுறை வெற்றிக்கு மிக அருகில் வந்து அதை கோட்டைவிட்டேன். மிகவும் உணர்ச்சிவசப்பட்டு ஆடியதால் பல பாயிண்ட்களை இழக்க நேரிட்டது. ஆனால் நேவால் அதனை பயன்படுத்திக்கொண்டார் என்றார்.
இப்போட்டித் தொடரில் ஆடவர் பிரிவில் இந்தோனேஷியாவின் சைமன் சந்தோசோ, சீனாவின் டு பென்கியோவை 21 - 18, 13 - 21, 21 - 11 என்ற கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026


