எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : இன்று புரட்டாசி மகாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக கோவில்களில் தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மறைந்த நம் பெற்றோர் மற்றும் முன்னோர்களை நினைத்து வருடத்திற்கு 96 முறை தர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகத்தில் 96 முறை தர்ப்பணம் கொடுக்க யாராலும் முடிவதில்லை.
அதனால்தான் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை நாட்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து வருகிறார்கள். இந்த மூன்று அமாவாசைகளிலும் மிக சிறந்ததாக கருதப்படுகிறது புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளாகும். இந்த அமாவாசைக்கு முன்பாக வரும் 15 நாட்கள் மகாளயபட்சம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த 15 நாட்களின் இடையில் மகாபரணி என்ற புனித நாளும் வருகிறது. அப்போதும் சில பக்தர்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். அவ்வாறு கொடுக்க இயலாதவர்கள் இன்று வரும் மகாளய அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். காரணம், புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு பித்ரு லோகத்தில் இருந்து முன்னோர்கள் பூலோகம் வந்து தங்கள் பிள்ளைகள் தங்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைக்க மாட்டார்களா என்று கவனிப்பார்களாம்.
அதன் காரணமாக பக்தர்கள் இன்று தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பதை மறக்காமல் செய்து வருகிறார்கள். பொதுவாக கோவில்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பல மாதங்களாக நீடித்து வருகிறது. கோவில்கள் கூட சில நாட்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கோவில்களில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திற்கு வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து விட்டது. அக்னி தீர்த்த கடலில் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் ஈரோடு மாவட்டத்தில் பவானி, கொடுமுடி போன்ற பகுதிகளில் கோவில்கள் மற்றும் குளக்கரைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
மதுரையில் புகழ் பெற்ற ஆலயம் இம்மையில் நன்மைதருவார் ஆலயமாகும். இங்கு தை, ஆடி, புரட்டாசி அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
ஆனால் இம்முறை கொரோனா பிரச்சினையால் கோவிலில் தர்ப்பணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நன்மை தருவார் கோவில் நிர்வாகம் அறிவித்து விட்டது. இதே போல் திருப்பரங்குன்றத்தில் சரவண பொய்கை பகுதியில் பொதுமக்கள் தர்ப்பணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர். தர்ப்பணம் கொடுக்க அவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. வீட்டுக்கே அந்தணரை வரவழைத்து தர்ப்பணம் கொடுத்தால்தான் உண்டு. ஆனால் எத்தனை பேர் அதை செய்வார்கள் என்பதுதான் புரியவில்லை. எது எப்படியோ, கொரோனா தொற்று பல வகையிலும் மக்களை பாதித்து விட்டது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.