எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : நாட்டில் உள்ள 9 கோடிக்கும் அதிகமான சிறு, குறு விவசாயிகளுக்கு பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 3-வது கட்ட தவணையாக ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். அப்போது பேசிய அவர் விவசாயிகளுடன் மனம் திறந்து பேசத் தயார் என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும்நிலையில், இந்த நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு கிடைக்கும் நன்மைகள், மத்திய அரசின் உதவி திட்டங்கள், விவசாயிகளின் எதிர்கால வளர்ச்சிக்கு செய்யப்படும் உதவிகள் குறித்து பிரதமர் மோடி விரிவாக பேசினார். ஆனால் மேற்கு வங்கத்தில் இந்த உதவி கிடைக்கவிடாமல் மம்தா செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் முந்தைய ஆட்சியாளர்களின் கொள்கையால் ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆக்கப்பட்டார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி, ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பு நிதியாண்டுக்கான 3-வது தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்குவதற்கான நிதி ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் மோடி நேற்று விடுவித்தார்.
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை நேரடியாக அரசின் சார்பில் டெபாசிட் செய்யப்படுகிறது. இதற்காக நாடுமுழுவதும் 19 ஆயிரம் இடங்களில் பிரதமர் மோடியின் பேச்சை விவசாயிகள் கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான நேற்று சிறந்த நிர்வாகத்துக்கான நாளாக மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அந்த தினத்தில் விவசாயிகளுக்கு மூன்றாவது கட்ட நிதியுதவியை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.
விவசாயிகளுக்கு மூன்றாவது கட்ட நிதியுதவி வழங்கும் பணிகளை, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று பகல் 12 மணிக்கு துவங்கி வைத்து, 6 மாநில விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
ஒடிசா மாநில விவசாயிகளிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி, கிசான் கிரெடிட் கார்டு மற்றும் அதன் மூலம், குறைந்த வட்டியில் கடன் வாங்க முடியும் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளதை, விவசாயிகளிடம் விளக்க வேண்டும் என்றார்.
அப்போது நவீன் என்ற விவசாயி கூறுகையில், 2019-ம் ஆண்டு கிசான் கிரெடிட் கார்டு வாங்கினேன். அதன் மூலம் 4 சதவீத வட்டியில், 27 ஆயிரம் கடன் வாங்கினேன். இது இடைத்தரகர்களிடம் வழங்கும் வட்டியை விட 20 சதவீதம் குறைவு என்றார்.
பிரதமர் டெல்லியில் உரையாற்றியபோது மத்திய மந்திரிகளும், கட்சியின் முக்கிய தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா டெல்லியில் மெக்ராலிக் என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் ஆகியோரும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மத்திய மத்திரிகள் பியூஸ் கோயல் ஹாபூரிலும், நிதின் கட்காரி அசாம் மாநிலம் சில்ஜாரிலும், கஜேந்திர செகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரிலும், ஸ்மிருதிராணி அமேதியில் நடந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தமிழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திறந்த வெளி மைதானத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இதற்காக பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு இருந்தன. 2 ஆயிரம் விவசாயிகள் சுமார் 1000 கட்சி தொண்டர்கள் அமர இருக்கை வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
காலை 10 மணியளவில் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய மந்திரிகள் பிரகாஷ் ஜவடேகர், மாநில தலைவர் எல்.முருகன், அகில இந்திய செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் பேசினார்கள். கே.டி.ராகவன், பலராமன், செம்பாக்கம் வேத சுப்பிரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மோடி உரை நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதேபோல் தமிழகம் முழுவதும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் மோடியின் உரை விவசாயிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
14 Dec 2025சென்னை, கடலோர தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


