எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : இந்த தேசம் தற்சார்பு இந்தியா எனும் இலக்கை அடைய, மேலாண்மைத் துறையில் புத்தாக்கம், நேர்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகிய முக்கிய மந்திரங்களாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஒடிசா மாநிலம், சம்பல்பூரில் ஐ.ஐ.எம். நிறுவனத்துக்கான நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, அடிக்கல் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
மேலாண்மையில் கூட்டுசேர்தல், புத்தாக்கம், மாற்றத்துக்கான கருத்துகள் ஆகியவை மூலம் தற்சார்பு இந்தியா எனும் இலக்கை நாம் அடைய முடியும். மண்டலங்களுக்கு இடையிலான தொலைவை தொழில்நுட்பம் குறைத்திருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும். உலகளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்தியாவும் டிஜிட்டல் முறையில் அனைவரும் ஒருவரோடு நெருக்கமாக தொடர்பில் இருத்தலுக்கான சீர்திருத்தங்களை விரைவாகக் கொண்டு வந்திருக்கிறது.
மனித மேலாண்மையைப் போல், தொழில்நுட்ப மேலாண்மையும் முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா போதுமான அளவு திறனுடன் இருந்ததால்தான் கொரோனா காலத்தில் ஏற்பட்ட சிக்கல்களை சமாளிக்க முடிந்தது.
தற்சார்பு இந்தியா எனும்இலக்கை அடைவதற்கு புத்தாக்கம், நேர்மை, அனைவரையும் உள்ளடக்குதல் ஆகியவை மேலாண்மையில் அவசியமான ஒன்று. இந்த மூன்றும்தான் தற்சார்பு இந்தியாவை அடைய உதவும் முக்கிய மந்திரங்கள். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்ய இளம் தலைமுறையினர் பின்தங்கிய பிரிவு மக்களையும் அரவணைத்துக் கொண்டு செல்ல வேண்டும். புதிய மேலாண்மை தொழில்நுட்பம், கருத்துகள் உதவியின் மூலம், உலக அளவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு செல்ல முடியும்.
இன்று உருவாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்தான் எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக மாறுகின்றன. நாட்டின் எண்ணங்களுக்கு ஏற்ப நிறுவனங்களின் இளம் மேலாளர்கள் தங்கள் இலக்குகளை சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 6 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-09-2025.
06 Sep 2025 -
திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
06 Sep 2025சென்னை : தமிழகத்தில் திருவண்ணாமலை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று (செப்.7) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
ரூ.450 கோடிக்கு சர்க்கரை ஆலை: சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
06 Sep 2025காஞ்சீபுரம் : காஞ்சீபுரத்தில் ரூ. 450 கோடிக்கு சர்க்கரை ஆலை வாங்கிய சசிகலா மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
மும்பையில் குண்டு வெடிக்கும் என மிரட்டல்: ஜோதிடர் கைது - திடுக்கிடும் தகவல்
06 Sep 2025மும்பை : மும்பையில் பயங்கரவாதிகள் ஊடுருவல், 34 வாகனங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த ஜோதிடரை போலீசார் கைது செய்து விசாரித்தரில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்
-
திருச்செந்தூர் கோயிலில் 500 ரூபாய் கட்டணத்தில் பிரேக் தரிசனம் அமல்
06 Sep 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் ரூ.500 கட்டணத்தில் பிரேக் தரிசனத்திற்கு பக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
ஆப்கான் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய வருகை ரத்து
06 Sep 2025காபூல் : ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் முத்தாகியின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்: 475 வெளிநாட்டினர் கைது
06 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி கார் உற்பத்தி ஆலையில் வேலை செய்த வெளிநாட்டினர் 475 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
வார ராசிபலன்
06 Sep 2025 -
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் படிக்கும்பொழுது அம்பேத்கர் தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
06 Sep 2025சென்னை : பெரியாரும், அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அம்பேத்
-
கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
06 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் கார்ல்மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வணக்கம் செலுத்தினார்.