எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி ஏப்- 4 - ஒரு குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா பேசினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா நேற்று தூத்துக்குடியில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். தூத்துக்குடி தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.பி.சண்முகநாதன், திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பி.ஆர்.மனோகரன், விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் அ.தி.மு.க. வேட்பாளர் மார்க்கண்டேயன், கோவில்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர் கடம்பூர் ராஜா,ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது பேசியதாவது: இதயதெய்வம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தங்களான எனது உயிரினும் மேலான எனதருமை உடன்பிறப்புக்களே, வாக்காள பெருமக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
வாக்காள பெருமக்களே தமிழ்நாட்டை காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையோடு உங்கள் முன் வந்திருக்கிறேன். ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுப்பதற்கான பொன்னான வாய்ப்பு இந்த தேர்தல் மூலம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. கருணாநிதியின் குடும்பத்தினரும், அவரது அமைச்சர்களின் குடும்பங்களும் தமிழகத்தை சூறையாடி உலக பணக்காரர்களாக மாறியிருக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதுதான் நான் உங்கள் முன் வைத்திருக்கும் கோரிக்கை. கடுமையான மின்வெட்டு, எந்த பொருளையும் வாங்க முடியாத விலையேற்றம், ஊர்ஊருக்கு ரவுடிகள் சாம்ராஜ்யம், மணல்கொள்ளை, அரிசி கடத்தல், சமூகத்தில் யாருமே எந்த தொழிலும் செய்யமுடியாதபடி அச்சுறுத்தல், அடி,தடி, கட்டப்பஞ்சாயத்து என்று அராஜகம் தலைவிரித்தாடும் சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.
எனவே இந்த தேர்தலில் தமிழக்தை மீட்டெடுக்கவில்லையென்றால் எப்போது மீட்டெடுக்க போகிறோம் என்று நல்லோர்களின் மனசாட்சி நம்மை பார்த்து கேட்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல்மூலம் ரூ.1லட்சத்து 80 ஆயிரம் கோடி கொள்ளையடித்த கருணாநிதி மற்றும் தி.மு.க.வினருக்கும் தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப்போகிறது என்று நாடே காத்திருக்கிறது. தேசவிரோத சக்திகளோடு கைகோர்த்து கொண்டு கருணாநிதி குடும்பத்தினர் நடத்தியிருக்கும் ஊழல் சாம்ராஜ்யத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்திடவேண்டும். தானும் தனது குடும்பத்தாரும் மக்களை சுரண்டி எப்படி சம்பாதிக்கவேண்டும் என்று திட்டமிடுபவர் கருணாநிதி.
இதற்கு எடுத்துகாட்டாக ரூ.2ஆயிரம் மதிப்புள்ள டி.வி.யை இலவசமாக வழங்கிவிட்டு அந்த குடும்பத்திலிருந்து கேபிள் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.1000 அவரது குடும்பத்தினர் பெறுகின்றனர். கருணாநிதியின் தந்திரத்தையும், சூழ்ச்சியையும் விளக்க இது ஒன்றே போதும். சுதந்திர போராட்டத்தின் மூலம் வெள்ளையர்களை போராடி விரட்டினோம், இப்போது கருணாநிதி குடும்பம் என்ற கொள்ளை கும்பலை தேர்தல்மூலம் விரட்டியடிக்கவேண்டும். கருணாநிதியின் பேரன் கலாநிதி மாறன் உலக பணக்காரர்களின் வரிசையில் 310வது இடத்தில் இருக்கிறார். ஒருவருக்கே இவ்வளவு சொத்து இருக்கிறது என்றால் அவரது மொத்த குடும்பத்தையும் சேர்த்து பார்த்தால் உலக உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக கருணாநிதியின் குடும்பம் இருக்கும். தமிழகம் தாழ்ந்த நிலைக்கு சென்றதற்கு இது போன்ற ஊழல்தான் காரணம்.
இந்த தேர்தலில் கின்னஸில் இடம்பெறும் வகையில் தி.மு.க. போட்டியிடும் இடத்தில் எல்லாம் டெபாசிட் இழக்க செய்யவேண்டும். இதுவே உங்களை சுரண்டிய மனிதருக்கு சரியான தண்டனை மக்கள் கொடுத்துள்ளனர் என்று உலகம் உங்களை பாராட்டும். புரட்சித்தலைவர் நல்லாசியோடு அ.தி.மு.க. ஆட்சி அமைந்தால் தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை போக்க 1வது மற்றும் 2வது ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்படும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 4வது குடிநீர்திட்டம் செயல்படுத்தப்படும், ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம் அமைக்கப்படும், கச்சத்தீவை மீட்டு மீனவர்களின் நலனை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எந்திர மீன்பிடி படகு வாங்க மானியம் வழங்கப்படும், தூத்துக்குடியில் 13 இடங்களில் குளிர்பதன மீன் பூங்காக்கள் அமைக்கப்படும்.
மீன்பிடி இல்லாத 45 நாட்கள் மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு குடும்பத்திற்கு ரூ.2ஆயிரம் நிதி வழங்கப்படும், பருவகாலமான 4 மாதங்கள் மீன்பிடி இல்லாத நேரத்தில் மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.4ஆயிரம் நிதி வழங்கப்படும், இலங்கை அகதிகளுக்கும் இலவச திட்டங்கள் கிடைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும், திருச்செந்தூர் நாசரேத் பகுதியில் செவிலியர் பயிற்சி கல்லூரி அமைக்கப்படும், அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும், மணல் மாதாகோவில் சுற்றுலா தளமாக அறிவிக்கப்படும், தமிழகத்தில் பொதுமக்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும்.
மாணவர்களுக்கு இலவசமாக லேப்டாப் வழங்கப்படும், நிலமற்ற ஏழைகளுக்கு 3செண்ட் நிலம் வழங்கப்படும், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 3லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1.80லட்சம் செலவில் பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும், கேபிள் டி.வி. அரசுடமையாக்கப்ட்டு மக்களுக்கு குறைந்தகட்டணத்தில் கேபிள் இணைப்பு வழங்கப்படும், விவசாயிகளுக் இலவச சொட்டு நீர் பாசானம் அமைத்து கொடுக்கப்படும், விவசாய இடுபொருட்கள், விதைகள் தங்ளுபடி விலையில் வழங்கப்படும், ஏழை எளிய மக்களிடமிருந்து கருணாநிதி குடும்பம் மற்றும் ரவுடி கும்பல்களால் அபகரிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கப்படும், ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்கவும், ரவுடி கும்பல்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் அ.தி.மு.க.கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள் என்று பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.