எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஏப்.- 5 - கிரானைட் கற்களை வெட்டியெடுக்க முயற்சிசெய்த மு.க.அழகிரியின் திட்டம் முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அய்யர்பங்களாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்தார். மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யர்பங்களாவில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாட்டை ஏகபோகமாக கொள்ளையடித்துவரும் ஒரு குடும்ப கும்பலிடம் இருந்து மீட்டு தமிழகத்தை காப்பாற்ற வரும் தேர்தல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியின் கொள்ளைக் கும்பலுக்கு முடிவுகட்டவேண்டும். கருணாநிதி தமிழகத்தை சூறையாடி உலக பெரும் பணக்காரர்களாக தனது குடும்பத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அண்மையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 310 வது இடத்தில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பேரனுக்கு மட்டும் இந்த அளவுக்கு சொத்து இருந்தால், கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பமாகத்தான் இருக்கும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டம் தீட்டி ஆட்சியை நடத்திவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.
மக்கள் பணத்தை சுரண்டி ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி பல கோடி ஊழல் செய்து, சம்பாதித்துவரும் கருணாநிதியையும், அவரது தேச விரோத சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேர்தல் மூலம் நீங்கள் வீழ்த்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்போது கருணாநிதி பின்னோக்கி தள்ளிவிட்டார். தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் சுமை என்பதுதான் கருணாநதி ஆட்சியின் சாதனையாக உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும்.
இந்த பகுதிவாழ் மக்களுக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். ஒத்தக்கடை யானைமலையை உடைத்து சிற்பநகரம் உருவாக்குகிறோம் என்று கூறி, அதிலுள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கும்பல் முயற்சி செய்துவருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு யானைமலை காப்பாற்றப்படும். அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதிவாழ் மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள், பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். ஒரு ரவுடி கும்பல் தமிழ்நாட்டை அடக்கி ஆள்வதற்கு இந்த தேர்தலில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.தமிழரசன், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி, சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.கருப்பையா ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை கிழக்கு தொகுதிக் கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கருப்பணன், மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க. தேர்தல் வாக்குறுதி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
25 Jan 2026சென்னை, தி.மு.க.வால் இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கை கூட தி.மு.க.
-
இன்று 77-வது குடியரசு தினம்: தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு
25 Jan 2026புதுடெல்லி, நாடு முழுவதும் குடியரசு தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை உள்பட நாடு முழுவதும் உச
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –26-01-2026
25 Jan 2026 -
உள்துறை அமைச்சர் அமித்ஷா 28-ம் தேதி தமிழ்நாடு வருகை
25 Jan 2026சென்னை, உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 28ம் தேதி தமிழகம் வருகிறார்.
-
வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்க்க சிறப்பு முகாம்கள் நிறைவு
25 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், வரும் பிப்.17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
-
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து-நடராசனுக்கு சிலைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மரியாதை
25 Jan 2026சென்னை, மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு தாளமுத்து - நடராசன் நினைவிடத்தில் அவர்களது திருவுருவப் படங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தின
-
வங்கதேசத்தில் பயங்கரம்: மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை
25 Jan 2026டாக்கா, வங்க தேசத்தில் மேலும் ஒரு இந்து வாலிபர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
என்ன சூழ்ச்சி செய்தாலும் எந்த அழுத்தத்திற்கும் நான் அடங்கிப் போக மாட்டேன்: த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
25 Jan 2026சென்னை, அழுத்தத்திற்கு அடங்கிப் போகும் ஆள் நான் இல்லை என்று த.வெ.க. செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஊழல் செய்யவே மாட்டேன்.
-
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி: கைப்பற்றிய பகுதிகளை திரும்பி தர ரஷ்யா மறுப்பு
25 Jan 2026அபுதாபி, அபுதாபியில் ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலைியல் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா திரும்பி தர மறுத்துள்ளதாக
-
தமிழ் மொழியை உயிரெனக் காப்போம்: மொழிப்போர் தியாகிகளின் நினைவு நாளில் விஜய் பதிவு
25 Jan 2026சென்னை, ஒப்பற்ற நம் அன்னைத் தமிழை உயிரெனக் காப்போம் என்று மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு விஜய் தெரிவித்துள்ளார். மேலும் த.வெ.க.
-
கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன்: பிரேமலதா விஜயகாந்த் தகவல்
25 Jan 2026திருச்செந்தூர், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன் என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் 2026 தேர்தல் நல்ல மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ற
-
டபுள் என்ஜின் எனக்கூறி ஏமாற்ற முடியாது: டெல்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: காஞ்சிபுரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சூளுரை
25 Jan 2026காஞ்சிபுரம், டபுள் என்ஜின் எனக்கூறி இனி தமிழக மக்களை மத்திய அரசு ஏமாற்ற முடியாது என்றும் 7-வது முறையாக தமிழகத்தில் தி.மு.க.
-
த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் ராணி வேலுநாச்சியாரின் கதையை சொன்ன விஜய்
25 Jan 2026சென்னை, த.வெ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் நிர்வாகிகளை ஊக்கும்விக்கும் வகையில் த.வெ.க. தலைவர் விஜய் ராணி வேலுநாச்சியார் பற்றி குட்டிக்கதை ஒன்று சொன்னார்.
-
இன்று 77-வது குடியரசு தினம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்
25 Jan 2026சென்னை, இன்று 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கவர்னர் இன்று கொடியேற்றுகிறாா்.
-
ஜனநாயகத்தின் உணர்வை மதிக்க வேண்டும்: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வலியுறுத்தல்
25 Jan 2026புதுடெல்லி, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும்: கனடா மக்களுக்கு பிரதமர் கோரிக்கை
25 Jan 2026ஒட்டவோ, அதிபர் ட்ரம்ப் வரி மிரட்டல் காரணமாக கனடா பொருட்களையே வாங்க நாட்டு மக்களுக்கு பிரதமர் கார்னி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
குஜராத்தில் விபத்து - 6 பேர் பலி
25 Jan 2026காந்தி நகர், குஜராத்தில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளிகள் வெளிநாடுகளில் பதுங்கி உள்ளனர்: மத்திய அரசு
25 Jan 2026புதுடெல்லி, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் பட்டியலில் உள்ள 70 இந்தியக் குற்றவாளிகள் 2024-25 ஆண்டுகளுக்கு இடையில் வெளிநாடுகளில் இருப்பது கண்டறியப்பட்டுள
-
பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்துக்கட்சி கூட்டம்
25 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், நாளை (ஜன., 27ம் தேதி) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
-
தமிழகத்தில் அன்றும், இன்றும், என்றும் இந்திக்கு இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
25 Jan 2026சென்னை, அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழுக்காகத் தங
-
சீனாவுடன் தொடரும் உறவு: கனடாவுக்கு 100 சதவீத வரி மிரட்டல் விடுத்தார் ட்ரம்ப்
25 Jan 2026நியூயார்க், சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
ஐ.நா. தீர்மானத்துக்கு எதிராக வாக்கு: இந்தியாவுக்கு ஈரான் நன்றி
25 Jan 2026தெஹ்ரான், ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஒடுக்கப்படுவதற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்கள
-
எத்தனை கட்சிகள் வந்தாலும் தி.மு.க.வின் இண்டியா கூட்டணியை யாராலும் எதுவும் செய்ய முடியாது: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
25 Jan 2026புதுக்கோட்டை, எத்தனை கட்சிகள் அந்த கூட்டணியில் வந்து சேர்ந்தாலும் தி.மு.க.
-
ஓ.பன்னீ செல்வத்தின் ஆதரவாளரான கு.ப.கிருஷ்ணன் த.வெ.க.வில் இணைந்தார்
25 Jan 2026சென்னை, த.வெ.க.வில் ஓ.பி.எஸ். ஆதரவாளரான அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் இணைந்துள்ளார்.
-
நாட்டையே முடக்கிய கடும் பனிப்புயல்: அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் சேவை ரத்து
25 Jan 2026நியூயார்க். அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


