முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு

வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2021      இந்தியா
Image Unavailable

நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடும் நீடித்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா சிகிச்சைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருவதால் மாநில அரசுகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றன.

இந்நிலையில் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் விநியோகம் செய்வதற்கும்,  ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.  ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகள் குறித்து பிரதமர் மோடியிடம் உயர்மட்டக்குழு விளக்கம் அளித்தனர்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தடையின்றி ஆக்சிஜனை விநியோகம் செய்வது மற்றும் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பிரதமர் மோடி நாடு முழுவதும் ஆக்சிஜன் உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து