எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஏப்.- 6 - சினிமா காமெடியன் வடிவேலு, நடிகை குஷ்புவின் தேர்தல் பிரச்சாரத்தை நம்பி தேர்தல் களம் காணும் முதல்வர் கருணாநிதியின் பரிதாப நிலையை கண்டு மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். இதன் மூலம் தி.மு.க.வின் கொள்கைகள் பாரம்பரியத்தையே கருணாநிதி குழி தோண்டி புதைத்து விட்டார் என தி.மு.க.வின் முன்னோடிகள் புலம்புகின்றனர். றகாங்கிரசுக்கு எதிராக தி.மு.க.வை தொடங்கினார் அண்ணா. தி.மு.கவுக்கென புரட்சிகரமான கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அண்ணா உருவாக்கினார். சிறந்த பேச்சாளர்கள், நேர்மையான சிந்தனையாளர்கள், தியாகசீலர்களின் உழைப்பால் உயர்ந்தது தி.மு.க. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் கிடைத்தற்கரிய பொக்கிஷமாக தி.மு.க.விற்கு கிடைத்தவர் எம்.ஜி.ஆர்.
தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் இன்று வரை பிரிக்க முடியாத மறக்க முடியாத அங்கமாக திகழ்ந்து வருபவர் எம்.ஜி.ஆர். இறந்து 24 ஆண்டுகளாகியும் அரசியல் சினிமாவில் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்காதவர்களுக்கு எதிர்காலம் இல்லை என்றளவிற்கு புகழ் பெற்று விளங்குகிறார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கை , வளர்ச்சியை பொறுக்காத கருணாநிதி 1972 ல் எம்.ஜி.ஆரை தி.மு.கவில் இருந்து நீக்கினார். அதன் பின் விஸ்வரூபம் எடுத்த எம்.ஜி.ஆர் இன்று வரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அப்போதைய அரசியல் தலைவர்களான அண்ணா, ஈ.வெ. சம்பத், சத்யவாணி முத்து, மதியழகன், என்.வி. நடராஜன், சுப்பிரமணியன், பக்தவச்சலம், முத்துராமலிங் தேவர், மொரார்ஜி தேசாய், கக்கன், கல்யாண சுந்தரம், ராமமூர்த்தி, நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் ஆகிய மாபெரும் மனிதர்களுடன் அரசியல் பயணம் செய்தவர் கருணாநிதி. 60 ஆண்டுகள் அரசியல் அனுபவம் பெற்ற கருணாநிதி 19 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். கருணாநிதி ஆட்சியில் இருந்த போதெல்லாம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து மிகப் பெரிய செல்வந்தரானார்.
சர்க்காரியா கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டவர் கருணாநிதி. தற்போது மத்திய அரசில் தனது மகன், பேரன், உறவினர்களுக்கு முக்கிய பொறுப்புக்களை போராடி பெற்றவர். தொழில்நுட்ப ரீதியில் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க. அமைச்சர் ராசா, ஈடுபட்டு அதன் மூலம் கிடைத்த பணத்தில் கருணாநிதி டி.வியை தொடங்கி விட்டார். தானும் தனது குடும்பத்தினரும் மட்டுமே லட்சம், கோடி, மில்லியன், பில்லியன் கணக்கில் சம்பாதித்து உலக கோடீஸ்வரர் வரிசையில் கருணாநிதியின் குடும்பத்தினர் இடம் பிடித்து விட்டனர். நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று 6 வது முறையாக முதல்வராகி தமிழகத்தில் உள்ள இயற்கை வளங்களை மீண்டும் கொள்ளையடித்து திட்டம் வகுத்து செயல்படுகிறார் கருணாநிதி.
கடந்த தேர்தல்களில் செய்த தில்லுமுல்லு, ஓட்டுக்கு பணம் கொடுத்தல், எதிர்க்கட்சியினரின் பூத் ஏஜண்டுகளை விலைக்கு வாங்குதல், பூத்களில் அதிகாரிகளை மிரட்டியோ, அல்லது அவர்களை விலைக்கு வாங்கியோ கள்ள ஓட்டுக்கள் போடுவது தேர்தலன்று வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியடைந்ததை போல் தற்போதைய தேர்தலிலும் வெற்றியடையலாம் என கனவு கண்டார். ஆனால் தேர்தல் கமிஷனோ கருணாநிதியின் ஆசை கனவில் மண்ணைப் போடுவது போன்று நேர்மையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளத் துவங்கியுள்ளது. இதனால் தி.மு.க.வின் திட்டங்கள் ஈடுபடவில்லை. கருணாநிதியின் மகன் கேபினட் அரிதாரம் பூசியுள்ள அழகிரி தேர்தலில் பல்வேறு தில்லுமுல்லுகளை அரங்கேற்றி அவரது கைவாகனங்களுடன் தென் மாவட்டங்கள் முழுவதும் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.
அவர்களையும் தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். இதனால் முந்தைய தேர்தல்களை போன்று வெளிப்படையாக மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் தி.மு.க.வினர் திணறுகிறார்கள். ஒரு சில இடங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு தெரியாமல் பணப்பட்டுவாடாவும் நடக்கிறது. பெரும்பாலான இடங்களில் தி.மு.கவின் பணப்பட்டுவாடாவை தேர்தல் அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் உறவினரது வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணங்களையும் மக்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு சென்ற பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல தி.மு.க.வினர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மதுரை மேற்கு தொகுதியில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ 20 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளதாலும் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் தொடரும் மின்வெட்டு, அனைத்து பொருட்களின் விலை உயர்வு, மணல், கிரானைட் கொள்ளை, தி.மு.க. அரசால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களிடம் ஏற்பட்டுள்ள மவுன புரட்சி அ.தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்து அக்கூட்டணி அமோக வெற்றி பெறும் என பல்வேறு கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ஆத்திரமும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்த கருணாநிதியும், அவரது மகன்களும் என்ன செய்வதென்று புரியாமல் குழப்பத்தில் உள்ளனர். எதையாவது செய்து தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும் என பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நடிகர் வடிவேலுவை தி.மு.க. விற்கு ஆதரவாக பிரச்சாரத்தில் இறக்கி விட்டுள்ளனர். நடிகை குஷ்புவும் பிரச்சாரம் செய்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், வடிவேலுவுக்கும் ஏற்கனவே பிரச்சினை உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்தை நாகரீகமற்ற தரம் தாழ்ந்த வார்த்தைகளால் வடிவேலு திட்டி வருகிறார்.
இதனால் அவரது பேச்சை கேட்க கூடும் தி.மு.க கூட்டணியினரும் வேடிக்கை பார்க்க வந்தவர்களும் முகம் சுழிக்கின்றனர். தன்னிகரில்லா தலைவர்களுடன் அரசியல் நடத்திய கருணாநிதி இந்த தேர்தலில் தரம் தாழ்ந்து போய் நடிகர் வடிவேலு, குஷ்பு ஆகியோரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி இருப்பது வேதனைக்குரியது. தி.மு.க. ஆட்சியின் அவலங்களால் கொதிப்பில் உள்ள தமிழக மக்கள் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக மரண அடி கொடுக்க தயாராகி வருகின்றனர் என்பதை அறியாத கருணாநிதி இது போன்ற அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகிறார் என தி.மு.க. கூட்டணியில் உள்ளவர்களே வெளிப்படையாக புலம்புகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 20 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.