எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.12 - ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை ஊழல் மூலம் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்திய கருணாநிதி ஆட்சியை அகற்ற அ.தி.மு.க., தே.மு.தி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சியினருக்கு வாக்களித்து தமிழகத்தில் ஒரு அமைதி புரட்சியை ஏற்படுத்தவேண்டும் என்று தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் வரும் ஏப்ரல் 13-ம் தேதி புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது. கடந்த 2 மாதங்களாக இந்த தேர்தல்களில் வெற்றிபெற அயராது உழைத்தோம். நானும் இரவும், பகலும் பாராமல் நாட்டு மக்களை சந்தித்த வண்ணம் இருந்தேன். எனது நிகழ்ச்சிக்கு கழகத் தோழர்களும், கூட்டணியினரும் ஆங்காங்கே சிறப்பான ஏற்பாடுகளை செய்து வரவேற்றனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூட தங்கள் எழுச்சியைக் காட்டினர். மக்கள் மனப்பூர்வமாக நம்மை ஏற்றுக் கொண்டிருப்பதையே இந்த நிகழ்ச்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. அதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியை முதற்கண் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டு வரவாற்றிலேயே என்றும் இல்லாத அளவிற்கு ஒரு குடும்பத்தின் கோரப்பிடியில் தமிழ்நாடு சிக்கிக்கொண்டுள்ளது. மக்களாட்சியை பயன்படுத்தி முதலமைச்சராக பொறுப்பேற்ற கருணாநிதி, மக்களை வாழ வைக்கவில்லை. தன் குடும்பம் உயரவேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றியதன் விளைவாக தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையே கருணாநிதி குடும்பத்தின் கட்டுப்பாட்டற்குள் வந்து விட்டது.
செய்தி பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்கள், சினிமாத்துறை, நிலம் வாங்கி வீடு கட்டுதல் என எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் கருணாநிதி குடும்பம் வைத்ததுதான் சட்டம் என்றாகி விட்டது. மக்களின் உரிமைகள் கருணாநிதி குடும்பத்தின் கோரப்பிடியில் இருந்து மீட்பதே இந்தத் தேர்தலில் நமது தலையாய கடமையாகும்.
மக்களை அன்றாடம் அலைக்கழிக்கும் விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், அரசு நிர்வாகத்தில் லஞ்சம், ஊழல், ஆள் கடத்தில், கொலை, கற்பழிப்பு போன்ற பெருகி வரும குற்றங்கள் கருணாநிதி ஆட்சியின் இலக்கணமாகி விட்டது. மத்திய அரசில் பங்கு பெற்று கருணாநிதி குடும்பத்தினர் ஈடுபட்ட ஒன்றே முக்கால் இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஊழல், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலக அரங்கில் தலைகுனிய வைத்துவிட்டது.
தமிழ்நாட்டின் பல துறைகளிலும் சீரழிவை ஏற்படுத்தி, தமிழ்நாட்டுக்கே அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தியுள்ள கருணாநிதி ஆட்சியை வருகின்ற சட்டமன்ற தேர்தல் மூலம் அகற்றுவதே நாம் பிறந்த தமிழ்நாட்டுக்கு செய்ய வேண்டிய தலைசிறந்த பணியாகும். இதற்கான வாய்ப்பை தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கிடவே இதுரரையில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., அ.தி.மு.க. உட்பட இதர எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி சேர முடிவெடுத்தது.
நாடு முதலில், கட்சி பிறகு என்றார் அறிஞர் அண்ணா. ஆகவே நாட்டு நலன் கருதி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.
இந்தக் கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி மட்டுமல்ல. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிற ஒன்றாகும். சகல துறைகளிலும் வீழ்ந்து விட்ட தமிழ்நாட்டை தூக்கி நிறுத்துகின்ற பெரு முயற்சியாகும்.
மக்களின் உரிமைகளை மீட்கவும், தமிழ்நாட்டைக் காப்பாற்றவும், ஜனநாயகத்தை நிலை நிறுத்தவும் அ.தி.மு.க..வோடு நாம் கூட்டணி வைக்க முயற்சித்தபோது, எப்படியும் இந்தக் கூட்டணி வரவிடக்கூடாது என்று கருணாநிதியும், அவரது சகாக்களும், காவல்துறை ஒற்றர் பிரிவும் சதிவலை தீட்டினர். ஆனால் அதை முறியடித்து வெற்றிகரமான கூட்டணியை உருக்கினோம். ஆகவே தமிழ்நாட்டு மக்கள் இதை வெற்றிக் கூட்டணி என்று அழைப்பதில் வியப்பில்லை.
எனினும் மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றங்கள் அரசாட்சியில் உள்ளனர். பணபலம், பலாத்திரம், அதிகார துஷ்பிரயோகம் என்று அனைத்தையும் பயன்படுத்தினர். குறிப்பாக தி.மு.க.வினர் பண மழை பொழிய துவங்கி விட்டனர். ஓரளவிற்காவது நியாயமாக தேர்தல்கள் நடத்த வேண்டுமென்று பாடுபடுகின்ற தேர்தல் கமிஷனையே முதலமைச்சர் கருணாநிதி மறைமுகமாக மிரட்டுகிறார் என்றால், சாதாரணமான பாமர மக்கள், இவர்களை எதிர்த்து என்ன செய்ய முடியும்? இருப்பினும் ஆர்வம் மிக்க இளைஞர்களும், குடும்பத்தை நடத்த தவிக்கின்ற தாய்மார்களும் அரசியல் சீரழிவைக் கண்டு வேதனைப்படுகின்ற பெரியோர்களும், இன்றைய ஆட்சியில் மாற்றம் தேவை என்பதை உணருகின்றனர்.
இதன் விளைவாகவே தமிழ்நாட்டில் இன்று கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக மக்கள் சக்தி திரண்டுள்ளது. இந்த மக்கள் சக்தியை வாக்குகளாக மாற்றி மக்கள் விரும்பும் மாற்றத்தை கொண்டு வருவது கட்சித் தோழர்களின் கையில் உள்ளது. இன்று முதல் தேர்தல் முடியும் வரை பணத்தைக் கொண்டு வாக்குகளை திருட முயற்சிக்கும் சமூக விரோதிகளிடம் இருந்து பாமர மக்களை காப்பாற்றவும், வாக்காளர்களை இடைவிடாது அணுகவும், வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வைப்பதும் கழகத் தோழர்களின் கடமையாகும்.
எனது உயிரினும் மேலான தமிழ் நெஞ்சங்களாகிய உங்களை இந்தத் தேர்தல் மூலம் ஒரு புதிய வரலாறு படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளுகிறேன்.
அ.தி.மு.க., தே.மு.தி.க. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் நமது அணியில் இடம் பெற்றுள்ள இதர கட்சிகள் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியாளர்களாக ஆக்கித் தருவது மக்கள் கையில் உள்ளது. மக்களோ மாற்றத்தைக் காண விரும்புகின்றனர். அந்த மாற்றத்திற்கு வடிவம் தர வேண்டியது நமது தோழர்கள் கையில் உள்ளது. ஆகவே மக்களை இடைவிடாது அணுகி வாக்குப்பதிவு செய்யும் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கக் கேட்டுக் கொள்ளுகிறேன். தமிழ்நாட்டு மக்களும் வாக்குச் சீட்டுகள் மூலம் ஒரு அமைதிப் புரட்சியை உருவாக்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா தாக்குதல்-2 பேர் பலி
13 Dec 2025கீவ், உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 2 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த முன்னாள் விமானப்படை அதிகாரி கைது
13 Dec 2025திஸ்பூர், பாகிஸ்தானுக்கு ரகசிய ஆவணங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக உளவு பார்த்த முன்னாள் இந்திய விமான படைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
-
வன்னியர்களுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியது தி.மு.க. அமைச்சர் பெரியசாமி பேச்சு
13 Dec 2025திண்டுக்கல், வன்னியர்களுக்கு 13 சதவீரம் இடஓதுக்கீடு வழங்கியது தி.மு.க.தான் என்று அமைச்சர் பெரியசாமி பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
முதியவர்களை குறிவைத்து மோசடி: அமெரிக்காவில் இந்தியருக்கு சிறை
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் முதியவர்களை குறிவைத்து ரூ.62 கோடி மோசடி செய்த இந்தியருக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் டிச. 31க்குள் அமல்படுத்தப்படும் டாஸ்மாக் திட்டவட்டம்
13 Dec 2025சென்னை, காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வருகிற 31-ம் தேதிக்குள் அமல்படுத்தப்படும் என்று டாஸ்மாக் உத்தரவாதம் அளித்துள்ளது.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
கொல்கத்தா லேக் டவுன் பகுதியில் தனது 70 அடி உயர சிலையை திறந்து வைத்தார் மெஸ்சி
13 Dec 2025கொல்கத்தா, கொல்கத்தாவில் லேக் டவுன் பகுதியில் ஸ்ரீபூமி விளையாட்டு கிளப் சார்பில் 70 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள தனது முழுவுருவச்சிலையை மெஸ்சி நேற்று திறந்து வைத்தார்.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் சூர்யவன்ஷி புதிய சாதனை
13 Dec 2025துபாய், இளையோர் ஒரு நாள் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற புதிய சாதனையை இந்தியாவின் இளம் வீரர் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.
8 அணிகள்...
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பெற்ற பா.ஜ.க.: கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி
13 Dec 2025திருவனந்தபுரம், திவனந்தபுரத்தில் வரலாற்று வெற்றியை பா.ஜ.க.வுக்கு பெற்று தந்த கேரள மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
-
'சால்ட் லேக்' மைதானத்தில் சில நிமிடங்கள் இருந்த மெஸ்சி: கோபத்தில் ரசிகர்கள் கலவரம்
13 Dec 2025அர்ஜென்டினா அணியின் கேப்டனான பிரபல கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார்.
-
டெல்லியில் காற்று மாசுபாடு: மக்களின் உடல்நலம் பாதிப்பு
13 Dec 2025புதுடெல்லி, டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
அமெரிக்காவில் பட்டம் பெற்ற மாணவர்கள் அவர்கள் நாட்டுக்கே செல்ல வேண்டும்: அதிபர் ட்ரம்ப்
13 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பிறகு இந்தியா, சீனா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்கள் நாடு திரும்ப வேண்டியிருப்பது அவமானம் என அமெரிக்க அதிபர் கொனால்டு ட்ரம்ப் தெரிவித
-
மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு
13 Dec 2025கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.


