எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனிக்கு விரைவில் 2-வது குழந்தை பிறக்க இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் எம்.எஸ். டோனி. 40 வயதாகும் எம்.எஸ். டோனி கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந்தேதி சாக்ஷி என்பரை திருமணம் செய்து கொண்டார். எம்.எஸ். டோனி- சாக்ஷி தம்பதிக்கு கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஜிவா எனப் பெயர் சூட்டியிருந்தார்.
ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை எம்.எஸ். டோனியின் மனைவி மகள், சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா மற்றும் குழந்தைகள் கொண்டாடினர். இந்த நிலையில் டோனியின் மனைவி சாக்ஷி கர்ப்பமாக உள்ளார். விரைவில் ஜிவாவுக்கு சகோதரி அல்லது சகோதரன் வரப்போகிறான் என்ற செய்தியை பிரியங்கா ரெய்னா உறுதிப்படுத்தியதாக இணைய தளங்களில் செய்திகள் காட்டுத்தீ போன்று பரவி வருகிறது.
கால்பந்து போட்டியில் துப்பாக்கி சூடு - பதற்றம்
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் லாட்-பீபிள்ஸ் ஸ்டேடியத்தில் கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், போட்டி முடிவடையும் தருணத்தில் திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது. இதில் 4 பேர் காயமடைந்து உள்ளனர். ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். துப்பாக்கி சூடு நடந்தவுடன், ரசிகர்கள் இடையே கூச்சலும், குழப்பமும் ஏற்பட்டது.
இதனால், அவர்கள் தப்பி செல்வதற்காக முயன்றுள்ளனர். இதனை தொடர்ந்து, விளையாட்டு வீரர்களை பாதுகாப்பிற்காக கீழே படுத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது. மொபைல் நகர போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான 2 பேரை தேடி வருகின்றனர். அவர்கள் தாக்குதல் நடத்தி விட்டு காரில் தப்பி சென்று விட்டனர்.
சாதனை சிறுவனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சர்வேஷ். கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபத்தில் இருந்து சென்னை வள்ளுவர் கோட்டம் வரையிலான 750 கிலோமீட்டர் தொடர் ஓட்டத்தை சர்வேஷ் தொடங்கினார். இந்த தொடர் ஓட்டத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிலையில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை 750 கிலோமீட்டர் தூரத்தை 14 நாட்கள் தொடர் ஓட்டம் மூலம் கடந்து சர்வேஷ் சாதனை படைத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பசி, பட்டினியின்மை, நல்ல ஆரோக்கியம், தரமான கல்வி, வறுமை ஒழிப்பு உட்பட 17 நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து வழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தொடர் ஓட்டம் ஓடியதாக சிறுவன் சர்வேஷ் தெரிவித்து உள்ளார் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ள சர்வேஷ்-ஐ முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இளம் வீரர் பரோட் மாரடைப்பால் மரணம்
ரஞ்சிப் போட்டிகளில் செளராஷ்ட்டிரா அணிக்காக விளையாடி வந்த இளம் பேட்ஸ்மேன் அவி பரோட் (29) மாரடைப்பால் காலமானார். அவி பரோட்டின் இறப்பை சைராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் உறுதிப்படுத்தியிருக்கிறது. இந்திய 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் அணிக்கு 2011 ஆம் ஆண்டில் அவி பரோட் கேப்டனாக இருந்தார்.
மேலும் 2019-20ஆம் ஆண்டு ரஞ்சித் தொடர்களில் சௌராஷ்ட்ரா அணி வெற்றிபெற காரணமாக இருந்த இவர், ஹரியானா மற்றும் குஜராத் அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார். இவரது இறப்பு அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக சௌராஷ்ட்ரா கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருக்கிறது.
சென்னை அணியில்தான் இருக்கிறேன் - டோனி
ஐ.பி.எல். 2021 தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. அப்போது அவர் கூறியதாவது., நான் இன்னும் நான் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை.
தென் ஆப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை அணி ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன் விளையாடுவோம் என உற்சாகமாக தெரிவித்தார்.
சென்னை அணிக்கு முதல்வர் வாழ்த்து
14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டி துபாயில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை அணியிடம் இருந்து அருமையான ஆட்டம் வெளிப்பட்டது. 4-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ள சிஎஸ்கே அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் உலகெங்கிலும் இருக்கிற ஒவ்வொரு ரசிகர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியை கொண்டாட சென்னை, தோனிக்காக அன்புடன் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 2 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
19 Sep 2025சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
இன்று விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் மின்தடை அறிவிப்பு
19 Sep 2025திருவாரூர் : த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் இன்று மின்தடை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது