எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 18 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டம் ஸ்பெயினில் உள்ள மாட்ரிட்டில் நடந்தது. ரஷியா-குரோஷியா அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் ரஷியா 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று டேவிஸ் கோப்பையை கைப்பற்றியது.
2-வது ஒற்றையர் ஆட்டத்தில் டேனில் மெட்வதேவ் (ரஷியா) 7-6 (9-7), 6-2 என நேர் செட் கணக்கில் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தினார். இதன்மூலம் ரஷியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அந்த அணி 15 ஆண்டுகளுக்கு பிறகு டேவிஸ் கோப்பையை வென்று உள்ளது. ஒட்டு மொத்தத்தில் ரஷியா 3-வது முறையாக பட்டம் பெற்று உள்ளது. இதற்கு முன்பு 2002, 2006-ம் ஆண்டுகளில் வெற்றி பெற்று இருந்தது.
ஹேட்லி சாதனையை சமன் செய்த அஸ்வின்
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 1956-ம் ஆண்டு முதல் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதுவரை 22 தொடர் முடிந்து உள்ளது. தற்போது 23-வது தொடர் நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் இடையேயான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி அதிக விக்கெட் கைப்பற்றி இருந்தார். அவர் 14 டெஸ்டில் 24 இன்னிங்சில் 65 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் இருந்தார்.
ஹேட்லியின் இந்த சாதனையை அஸ்வின் சமன் செய்தார். மும்பை டெஸ்டில் அவர் 3 விக்கெட் கைப்பற்றினார். ரோஸ் டெய்லரை அவுட் செய்ததன் மூலம் அவர் இந்த சாதனையை சமன் செய்தார்.அஸ்வின் 9 டெஸ்டில் 17 இன்னிங்சில் 65 விக்கெட் கைப்பற்றி உள்ளார். 59 ரன் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியது அவரது சிறந்த பந்து வீச்சாகும்.
ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: பதக்கத்தை தவறவிட்டது இந்தியா
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நடைபெற்றது. கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா, பிரான்ஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதல் பிரான்ஸ் வீரர்கள் சிறப்பாக ஆடினர். இதனால் முதல் பாதி முடிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 0-2 என பின்தங்கி இருந்தது.
இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தை வென்றது. முன்னதாக ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடரில் ஜெர்மனியை வீழ்த்தி அர்ஜென்டினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலக செஸ் சாம்பியன்ஷிப்: கார்ல்சன் முன்னிலை
துபையில் நடைபெற்றும் வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் 5 ஆட்டங்களும் டிரா ஆன நிலையில் வெள்ளியன்று நடைபெற்ற 6-வது ஆட்டத்தில் 136 நகர்த்தலுக்குப் பிறகு கார்ல்சன் வெற்றி பெற்று முன்னிலை வகித்தார். உலக செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக நகர்த்தல் கொண்ட ஆட்டம் அதுதான். 7-வது ஆட்டத்தை கார்ல்சன் டிரா செய்தார். கார்ல்சன் - நிபோம்நிஷி இடையிலான 8-வது ஆட்டம் நடைபெற்றது.
மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இப்போட்டியில் இதுவரை கார்ல்சன் 5 புள்ளிகளும் நிபோம்நிஷி 3 புள்ளிகளும் எடுத்துள்ளார்கள். 2 புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிப்பதால் உலக சாம்பினாக கார்ல்சன் மீண்டும் மகுடம் சூடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, ஓய்வு நாளாகும். 9-வது ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது.
மும்பை டெஸ்ட் தொடர்: வைரலான 4 பேர் புகைப்படம்
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அக்ஷர் படேல், ஜடேஜா, அஜாஸ் படேல், ரச்சின் ரவிந்திரா ஆகிய நால்வரும் இணைந்த புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டு பாராட்டு பெற்றுள்ளது.
நால்வரின் சட்டைகளிலும் பின்னால் எழுதப்பட்ட பெயர்களின் வழியே அக்ஷர் படேல், ரவிந்திர ஜடேஜா ஆகிய பெயர்கள் ஆங்கிலத்தில் வரிசையாக உள்ளன. இந்தப் புகைப்படம் ரசிகர்களால் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புதிய கேப்டன் கேப்டன்கள்
காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியதால் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கிறது. டி20 தொடர் டிசம்பர் 13-ல் ஆரம்பிக்கிறது. ஒருநாள் தொடர் டிசம்பர் 22-ல் நிறைவுபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன.
டி20 உலகக் கோப்பைப் போட்டியின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திலிருந்து கேப்டன் பொலார்ட் விலகியுள்ளார். மே.இ. தீவுகள் ஒருநாள் அணிக்கு ஷாய் ஹோப்பும், டி20 அணிக்கு நிகோல்ஸ் பூரனும் கேப்டன்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். ஷாய் ஹோப் முதல்முறையாக ஒருநாள் கேப்டனாகச் செயல்படவுள்ளார். பூரன் தலைமையில் சமீபத்தில் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய மே.இ. தீவுகள் அணி, 4-1 எனத் தொடரை வென்றது.
நியூசிலாந்து அணி வீரர் அஜாஸ்-க்கு சிறப்பு பரிசு
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மும்பையில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியாவின் 10 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து சுழற்பந்து வீரர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றியிருந்தார். மேலும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இந்நிலையில் மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 2-வது டெஸ்ட் போட்டியின் முடிவில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அஜாஸ் படேலுக்கு மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் விஜய் பாட்டீல் பாராட்டு தெரிவித்தார். மேலும், இந்த போட்டியின் முதன் இன்னிங்ஸ் அதிகாரப்பூர்வ ஸ்கோர் ஷீட்டையும் அவர் வழங்கினார். அப்போது கிரிக்கெட் பந்து மற்றும் விளையாட்டின்போது அவர் பயன்படுத்திய டீசர்ட் ஆகியவற்றை மும்பை கிரிக்கெட் சங்க அருங்காட்சியகத்திற்கு அஜாஸ் பட்டேல் வழங்கினார்.
ஜன. 2-வது வாரத்தில் ஐ.பி.எல் வீரர்கள் ஏலம்
2022-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் கூடுதலாக லக்னோ, அகமதாபாத் அணிகள் இணைந்துள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி 2வது வாரத்தில் நடைபெற உள்ளது. ஏற்கனவே ஜன. முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அகமதாபாத்தை ஏலம் எடுத்த சிவிசி கேப்பிட்டல் நிறுவனம் சூதாட்ட நிறுவனங்களில் முதலீடு புகார் விவகாரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அடுத்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும். பின்னர் 2 புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் 3 வீரர்களை வாங்கிக்கொள்ள 31ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்ந்து ஜன.2வது வாரத்தில் வீரர்கள் பொது ஏலம் நடைபெறும் என பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
முதல்முறையாக ரயில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
25 Sep 2025புதுடெல்லி, நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
25 Sep 2025கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்
25 Sep 2025சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
25 Sep 2025சென்னை: தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது
25 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவரை போலீசார் கைது செய்தனர்.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் பலி
25 Sep 2025ராமநாதபுரம், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: உள்துறை அமைச்சகம்
25 Sep 2025லடாக், லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்: 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
25 Sep 2025சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர்
-
காகிதப்புலி அல்ல... நாங்கள் கரடி: அதிபர் ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி
25 Sep 2025செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: ஏழு புத்த மத துறவிகள் உயிரிழப்பு
25 Sep 2025கொழும்பு, இலங்கையில் கேபிள் கார் விபத்தில் புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழநதுள்ளனர்.
-
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
25 Sep 2025மதுரை, குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் நடக்கிறதா என்று மதுரை ஐகோர்டடு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் நிலநடுக்கம்
25 Sep 2025காரகாஸ், 6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்
25 Sep 2025விழுப்புரம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்
25 Sep 2025டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
25 Sep 2025சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
25 Sep 2025சென்னை, நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்
-
டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ட்ரம்ப்
25 Sep 2025வாஷிங்டன்: டிக்டாக் தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கையேழுத்திட முடிவு செய்தார்.
-
ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவரானார் வெங்கடேஸ்வரன்
25 Sep 2025சென்னை, பா.ம.க. சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
எச் - 1பி விசா கட்டண விவகாரம்: திறமை வாய்ந்த இந்தியர்களை ஈர்க்க தீவிரம் காட்டும் ஜெர்மனி, பிரிட்டன்..!
25 Sep 2025லண்டன்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி பிரிட்டன் தீவிரம் காட்டியுள்ளது.
-
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
25 Sep 2025புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.