எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரபாடாவின் துல்லியமான ராக்கெட் வேகப்பந்துவீச்சு, ஆலிவர், ஜேஸனின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கேப்டவுனில் நடந்து வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கோலி 79 ரன்கள்...
தனி ஒருவனாகப் போராடிய கேப்டன் விராட் கோலி 79 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் 8 ரன்னிலும், கேசவ் மகராஜ் 6 ரன்னிலும் களத்தில் உள்ளனர். டாஸ் வென்ற கேப்டன் கோலி பேட்டிங் செய்தது நல்ல முடிவுதான் என்றாலும் 223 ரன்கள் என்பது எதிரணிக்கு சவால் அளிக்கக்கூடிய ஸ்கோர் அல்ல. இன்னும் கூடுதலாக 70 ரன்கள் சேர்த்திருந்தால், இந்திய அணி வலுவாகப் போராட முடியும். இல்லாவிட்டால் இதுபோன்ற ஸ்கோர்கள் பந்துவீச்சாளர்களுக்கே நெருக்கடியையும், அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
புஜாரா ஓ.கே...
முதல் இன்னிங்ஸில் புஜாராவின் பேட்டிங்கில்கூட சிறிது ஃபயரைப் பார்க்க முடிந்தது. ஆனால், ரஹானே தேறுவார் போலத் தெரியவில்லை. இனியும் அவரை அணியில் வைப்பது வேஸ்ட் என்றுதான் கூற வேண்டும். சிறந்த பந்துவீச்சுக்கு எதிராக இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் தாங்குவார்களா என்பதற்கு நேற்று முன்தின ஆட்டம் சிறந்த உதாரணமாகும்.
140 கி.மீ. வேகத்தில்...
ரபாடா தான் வீசிய பந்தில் லைன் லென்த்தை மாற்றி வீசவே இல்லை. 140 கி.மீ. வேகத்தில் அனைத்துப் பந்துகளும் ஸ்டெம்ப்பை நோக்கியே வந்ததால், பேட்ஸ்மேன்கள் சிறிது கவனக்குறைவாக ஆடினாலும் விக்கெட்டை இழக்க நேரிடும். ரபாடா வீசிய பந்துகள் பெரும்பாலும் காற்றிலேயே வாப்லிங் ஆகி பிட்ச் ஆகும்போதுதான் எந்தத் திசையில் செல்லும் என்பதைக் கணிக்க முடியும். இதனால் பேட்ஸ்மேன்கள்தான் கணிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.
கடும் நெருக்கடி...
ரபாடாவுக்குத் துணையாக, ஆலிவர், இங்கிடி, ஜேஸன் ஆகியோரும் சிறப்பாகப் பந்துவீசினர். இதில் ஜேஸன், ஆலிவரும் துல்லியத்தை மாற்றாமல் வீசிய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். ஒட்டுமொத்தத்தில் பழைய தென் ஆப்பிரிக்கப் பந்துவீச்சைப் பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது. குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு அம்சம், விராட் கோலியின் பேட்டிங். முதல் இன்னிங்ஸில் விராட் கோலி விளையாடினாரா அல்லது தனது 49-வது பிறந்த நாளில் திராவிட் களமிறங்கி விளையாடினாரா எனத் தெரியவில்லை. ராகுல் திராவிட்டின் பேட்டிங் சாயல் கோலியின் பேட்டிங்கில் தெரிந்தது. இதை வர்ணனையில் சுனில் கவாஸ்கரே குறிப்பிட்டார்.
புஜாரா அவுட்...
ரபாடா பந்துவீச்சை புஜாரா, கோலி ஜோடி ஓரளவுக்குத் தாக்குப்பிடித்தனர். கோலி நிதானமாக ஆட, புஜாரா ஷாட்களை ஆடி ரன்களைச் சேர்த்தார். இருவரும் 3-வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கோலியின் ஸ்ட்ரைக் ரேட்டைவிட நேற்று புஜாராவின் ஸ்ட்ரைக் ரேட்தான் அதிகமாக இருந்தது, புஜாரா அரை சதத்தை நோக்கி நகர்ந்தபோது, 43 ரன்களில் ஜேஸன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் விக்கெட்களை இழக்க இந்திய 223 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும், ஜேஸன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.