எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கடந்த செவ்வாய் கிழமை முதல் சென்னையில் 6 பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும் மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். மேலும் நீண்ட தூரம் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் பெரும்பாலானவர்கள் 4 மாதங்களுக்கு முன்னதாகவே பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்தனர்.
இதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் எல்லா வகுப்புகளும் நிரம்பின. சிறப்பு ரெயில்களும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களை நோக்கி செல்கின்றனர். கடந்த 2 நாட்களாக வெளியூர் பயணத்தை மேற்கொண்டு வரும் பொதுமக்களால் பல்வேறு இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. கார், வேன் போன்ற சொந்த வாகனங்களிலும் பலர் ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள், சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் பஸ், ரெயில்களில் கூட்டம் அலை மோதுகிறது. கூட்ட நெரிசலை குறைக்க 23 ரெயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் இருந்து சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. சென்ட்ரலில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்கள் மற்றும் கோவை, திருவனந்தபுரம், மங்களூர் சென்ற அனைத்து ரெயில்களிலும் பயணிகள் முழு அளவில் பயணம் செய்தனர்.
பகல் நேர ரெயில்களில் மட்டுமே முன்பதிவு செய்யாத பயணிகள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இரவு நேர ரெயில்களில் அனைத்து பயணிகளும் முன்பதிவு செய்துதான் பயணிக்க வேண்டும். அந்த அடிப்படையில் சென்ட்ரலில் இருந்து மட்டும் சுமார் 2 லட்சம் பயணிகள் 2 நாட்களில் பயணம் செய்தனர்.
இதேபோல எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் 24 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. சுமார் 1 லட்சம் பயணிகள் அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற நகரங்களுக்கும் புறப்பட்டு சென்றனர். அரசு பஸ்களில் சுமார் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். முதல் நாளில் 1.15 லட்சம் பேரும், நேற்று 1.85 லட்சம் பேரும் பயணம் செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. 5 ஆயிரம் பஸ்கள் இதுவரையில் இயக்கப்பட்டுள்ளன.
இதேபோல சென்னையில் இருந்து இயக்கப்பட்ட ஆம்னி பஸ்கள் மூலம் 50 ஆயிரம் பேர் பயணம் செய்திருப்பதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுதவிர கார், வேன் போன்ற சொந்த வாகனங்களில் சென்றவர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருப்பார்கள் என்று தெரிகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம் செய்துள்ளனர். பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகைகளை கொண்டாடும் வகையில் வெளியூர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் நேற்று கடைசி நேர பயணத்தை பெரும்பாலானவர்கள் மேற்கொள்வார்கள். நேற்று 2,100 வழக்கமான பஸ்களுடன் 1,920 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3,020 பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் திட்டமிட்ட அளவு பஸ்களை விட அதிகளவு இயக்கப்படுகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று காலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. எந்தெந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ் தேவை என்பதை கண்டறிந்து அதற்கேற்றவாறு சிறப்பு பஸ்களை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


