எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியுடன் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய கோலியை, ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து பி.சி.சி.ஐ நீக்கி, ரோஹித் சர்மாவை நியமித்தது. தென் ஆப்பிரி்க்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தபின் டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி திடீரென விலகினார். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது கிரிக்கெட்ரசிகர்களை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்ஸன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளி்த்த பேட்டியில் கோலி குறித்துப் பேசியுள்ளார். அவர் கூறியதாவது., இன்றுள்ள நவீன கால கிரிக்கெட் வீரரான விராட் கோலியைப் பற்றி விமர்சிப்பவர்கள் என்னைப் பொறுத்தவரை முட்டாள்கள். ஏனென்றால், இதுபோன்ற பயோ-பபுள் சூழலில் இருந்து கொண்டு விளையாடுவது கடினம். ஆதலால், கோலியின் முடிவை விமர்சிப்பதும், அவரை விமர்சிப்பது நியாயமற்றது. கோலி அனைத்துப் பிரிவிலும் கேப்டன் பதவியிலிருந்து விலகியது எனக்கு பெரிய வியப்பை அளிக்கவில்லை. இவ்வாறு பீட்டர்ஸன் தெரிவித்தார்.
ஹர்பஜன் சிங்குக்கு கொரோனா உறுதி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் (வயது 41). இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள், 236 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 28 சர்வதேச இருபது ஓவர் போட்டிகள் என மொத்தம் 367 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் மொத்தம், 711 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். 3,569 ரன்களை எடுத்து உள்ளார். இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 417 விக்கெட்டுகளை கைப்பற்றியதுடன், 32.46 சராசரியும் வைத்துள்ளார். இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு இருபது ஓவர் ஆசிய கோப்பையில் விளையாடிய அவர், அதன்பின்பு அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பரில் தனது ஓய்வு அறிவிப்பினையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில், ஹர்பஜன் சிங்குக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதுபற்றி அவரது டுவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டேன். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறேன். பாதுகாப்புடன் இருங்கள். கவனமுடன் இருங்கள் என தெரிவித்து உள்ளார்.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஆன்டி முர்ரே, எம்மா தோல்வி
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் போட்டியில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-6, 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டாரோ டேனியலிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் அர்ஜென்டினா வீரர் ஸ்வார்ட்ஸ்மான் 6-7 (6-8), 4-6, 4-6 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்டோபர் கொன்னலிடம் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா சரிவில் இருந்து மீண்டு வந்து 1-6, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸின்யு வாங்கை சாய்த்து 3-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தவரான இங்கிலாந்தின் இளம் புயல் எம்மா எடுகானு 4-6, 6-4, 3-6 என்ற செட் கணக்கில் 98-ம் நிலை வீராங்கனையான டான்கா கோவினிச்சிடம் (மான்ட்னெக்ரோ) வீழ்ந்து நடையை கட்டினார்.
அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் ?
எதிர்வரும் ஐபிஎல் 2022 சீசனில் பத்து அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் நாளை (ஜனவரி 22) தங்கள் அணி சார்பில் தக்க வைத்துள்ள வீரர்களின் விவரத்தை ஐபிஎல் நிர்வாகக் குழுவிடம் சமர்பிக்க உள்ளன.
இந்நிலையில் அகமதாபாத் அணியின் கேப்டனாக ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை அந்த அணியின் நிர்வாகம் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. பாண்ட்யா குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் மக்களை ஈர்க்கும் வகையில் இதனை அகமதாபாத் அணி செய்ய வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பாண்ட்யா மட்டுமல்லாது சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ஷூப்னம் கில்லை அகமதாபாத் அணி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. அது தொடர்பான விவரம் இன்று உறுதியாக தெரிந்துவிடும்.
ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து: இந்தியா - ஈரான் போட்டி `டிரா’
20வது ஆசிய கோப்பை மகளிர் கால்பந்து போட்டி மும்பையில் தொடங்கியது. இதில் 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. நேற்று ஏ பிரிவில் முதல் போட்டியில் சீனா- சீன தைபே மோதின. இதில் 4-0 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் இந்தியா-ஈரான் மோதின.
இந்த ஆட்டத்தில் கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் 0-0 என ஆட்டம் சமனில் முடிந்தது. இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீன தைபேயை வரும் 23ம் தேதி சந்திக்கிறது. இன்று ஜப்பான்-மியான்மர், ஆஸ்திரேலியா-இந்தோனேசியா, தாய்லாந்து-பிலிப்பைன்ஸ், வியட்நாம்-தென்கொரியா மோதுகின்றன.
ஆஸி. ஓபன் இரட்டையர்: சானியா ஜோடி முன்னேற்றம்
ஆஸ்திரேலிய ஓபன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்வியாடெக் (போலந்து), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), டாரியா கசட்கினா (ரஷியா), மேடிசன் இங்லிஸ் (ஆஸ்திரேலியா), பாவ்லிசென்கோவா (ரஷியா), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), வான்ட்ரோசோவா (செக்குடியரசு) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றிப் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் சானியா மிர்சா (இந்தியா)-ராஜீவ் ராம் (அமெரிக்கா) இணை 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் செர்பியாவின் அலெக்சாண்ட்ரா குனிச்- நிகோலா காசிச் ஜோடியை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. - முதல்வர்
13 Sep 2025சென்னை : மக்களுக்கு இடையூறு செய்யும் கட்சி அல்ல தி.மு.க. என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன்: பிரதமர் மோடி
13 Sep 2025இம்பால், மணிப்பூரை வளர்ச்சியின் அடையாளமாக மாற்ற விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம்
13 Sep 2025சென்னை : மத்திய கல்வி அமைச்சகத்தின் ஆலோசனைக்குழு உறுப்பினராக இன்பதுரை எம்.பி. நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
-
பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது: கனிமொழி எம்.பி.
13 Sep 2025மணிப்பூர் : தேர்தல் வருவதால் பிரதமருக்கு மணிப்பூர் நினைவு வந்துள்ளது என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக்: ஓமனை வீழ்த்தியது பாகிஸ்தான் 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி
13 Sep 2025அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி ஓமனை 67 ரன்களுக்கு சுருட்டி வெற்றி எளிதில் வெற்றிப்பெற்றது.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
13 Sep 2025சென்னை, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
2வது டி-20-யில் அபார வெற்றி: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து
13 Sep 2025மான்செஸ்டர் : 2-வது டி-20 போட்டியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட்டின் அபார பேட்டிங்கில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது.
-
பாக்.கிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ-க்கு கடும் எதிர்ப்பு
13 Sep 2025துபாய் : பாக்.கிற்கு எதிரான போட்டியில் இன்று இந்திய அணி விளையாடுவதற்கு பி.சி.சி.ஐ.,க்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - அதிர்ச்சி
13 Sep 2025லண்டன் : இங்கிலாந்தில் இந்திய பெண் கூட்டு பாலியல் வன்கொடுமையால் அதிர்ச்சி சம்பவம் நிளவியுள்ளது.
-
சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் : பக்தர்களுக்கு ஆர்.ஆர்.கோபால்ஜி அழைப்பு
13 Sep 2025சென்னை : சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நடப்பதையொட்டி வருகிற 22-ம் தேதி பக்தர்களுக்கு ஆர்.ஆர். கோபால்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
-
திருச்சி பிரச்சாரத்தில் வேலை செய்யாத மைக்: விஜய் பேச்சை கேட்க வந்த தொண்டர்கள் ஏமாற்றம்
13 Sep 2025திருச்சி : விஜய் பேசியபோது திடீர் என்று தொழில்நுட்ப கோளாறால் மைக்கில் வேலை செய்யவில்லை இதனால் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
-
சாம்சனுக்கு பயிற்சியாளர் ஆதரவு
13 Sep 2025சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டரில் சொதப்புவார் என்று அர்த்தமில்லை என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சித்தான்சு கோட்டக் தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன’ - மோகன் பகவத்
13 Sep 2025மும்பை : இந்தியாவின் வளர்ச்சியை பார்த்து உலக நாடுகள் பயப்படுகின்றன என்று மோகன் பகவத் கூறியுள்ளார்.
-
மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் : எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம்
13 Sep 2025சிங்காநல்லூர் : கோவையில் மெட்ரோ ரயில் பணிக்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது, ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏதேதோ பிரச்னை சொல்லி முடக்கிவைத்துள்ளனர்.
-
பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார்: ஐ.நா. சபையில் பாகிஸ்தான் மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு
13 Sep 2025நியூயார்க் : பின்லேடன் உங்கள் நாட்டில்தான் பதுங்கியிருந்தார் என்று பாகிஸ்தான் மீது இஸ்ரேல் கடுமையாக குற்றஞ்சாட்டி ஐ.நா. சபையில் கேள்வி எழுப்பியது.
-
இன்று ஜப்பான் தலைநகரில் தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா?
13 Sep 2025டோக்கியோ : உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி இன்று ஜப்பானில் துவங்கவுள்ள நிலையில் இன்று தங்கப்பதக்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் இடையே எழுந்த
-
இரிடியம் மோசடி-30 பேர் கைது: சி.பி.சி.ஐ.டி. அதிரடி விசாரணை
13 Sep 2025சென்னை : இரிடியம் மோசடியில் 30 பேரை சி.பி.சி.ஐ.டி.யினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம்: பிலிப் சால்ட் புதிய சாதனை
13 Sep 2025மான்செஸ்டர் : டி-20 போட்டியில் லியாம் லிவிங்ஸ்டன் சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணிக்காக அதிவேக சதம் அடித்து பிலிப் சால்ட் புதிய சாதனை படைத்துள்ளார்.
-
திருச்சி எனக்கு திருப்புமுனை அமையும்: த.வெ.க. தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு
13 Sep 2025திருச்சி, திருச்சி திருப்புமுனையாக அமையும் என்று திருச்சியில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் பேசினார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு : துறை வாரியாக பெறப்பட்ட மனுக்கள், அதன் மீதான தீர்வு குறித்து கேட்டறிந்தார்
13 Sep 2025சென்னை : உங்களுடன் ஸ்டாலின் திட்ட செயல்பாடுகள் குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு மேற்கொண்டார்.
-
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு - மு.க.ஸ்டாலின் வாழ்த்து
13 Sep 2025சென்னை : இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் : துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் நடந்தது
13 Sep 2025சென்னை : நான் முதல்வன் ஸ்கவுட் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாணவர்கள் உலகளாவிய பயிற்சி பெற புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் மேற்கொள்ளப்பட்
-
துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா? - டி.டி.வி. தினகரன் கேள்வி
13 Sep 2025சென்னை : துவரம்பருப்பு கொள்முதலில் தமிழகத்திற்கு ஒரு விலையா என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி உள்ளது.
-
பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா? - அன்புமணி
13 Sep 2025சென்னை : பா.ம.க. தட்டி எழுப்பினால் தான் திராவிட மாடல் அரசுக்கு விழிப்பு வருமா என்று அன்புமணி கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025