எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி கோவில் வளாகத்திலேயே நடத்தப்பட்ட மதுரை சித்திரை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. வரும் 15-ம் தேதி எதிர்சேவையும், 16-ம் தேதி கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மதுரையின் அடையாள மாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் கரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள்வளாகத்திலேயே பக்தர்களின்றி நடத்தப்பட்டது. மதுரை நகரமே கோலாகலமாக கொண்டாடும் இந்த திருவிழா எளிமையாக நடந்தது மக்களை ஏமாற்றமடைய செய்தது.
தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு சித்திரை திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழா வரும் 5-ம் தேதி தொடங்குகிறது. வரும் 5-ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கற்பக விருட்ச,சிம்ம வாகனத்தில் சுவாமி, மீனாட்சி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். 6-ம் தேதி புதன்கிழமை பூத , அன்ன வாகனத்திலும், 7-ம் தேதி கைலாச பர்வதம், காமதேனு வாகனத்திலும், 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தங்க பல்லக்கு வாகனத்திலும் தொடர்ந்து 11-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் சுவாமி, மீனாட்சி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
அதை தொடர்ந்து 12-ம் தேதி மீனாட்சி பட்டாபிஷேக நிகழ்ச்சியும், 13-ம் தேதி புதன்கிழமை மீனாட்சி திக்விஜயமும், 14-ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவமும், 15-ம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறுகிறது. 17-ம் தேதி கள்ளழகர் வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் எழுந்தருள்கிறார். பிற்பகலில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தரும் கள்ளழகர் இரவு தசாவதார கோலத்தில் ராமராயர் மண்டபத்தில் காட்சி தருகிறார். வரும் 18-ம் தேதி திங்கள்கிழமை காலை மோகனாவதாரத்திலும், இரவு கள்ளழகர் திருக்கோலத்திர் புஷ்ப பல்லக்கு மைசூர் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். 19-ம் தேதி செவ்வாய்கிழமை கள்ளழகர் அழகர்மலைக்கு சென்றடைகிறார்.
மதுரை மாநகரில் 2ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பங்கேற்புடன் சித்திரை திருவிழா நடக்க உள்ளது. எனவே தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பக்தர்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
மதுரை சித்திரை திரு விழாவில் குறிப்பிடத்தக்க அம்சம்- கள்ளழகர் எதிர் சேவை மற்றும் வைகை ஆற்றில் எழுந்தருளல் நிகழ்ச்சியாகும். அப்போது பக்தர்கள் விரதம் இருந்து சுவாமி வேடம் அணிந்து, கள்ளழகருடன் நடந்தே மதுரைக்கு வருவார்கள். இதற்காக அவர்கள் அணிந்து இருக்கும் ஆடைகள் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.
மதுரை புதுமண்டபத்தில் கள்ளழகர் பக்தர்களுக்கான பிரத்தியேக உடைகள் தைக்கப்பட்டு வந்தன. அங்குள்ள கடைகள் குன்னத்தூர் சத்திரத்துக்கு மாறி விட்டதை அடுத்து அங்கு கள்ளழகர் பக்தர்களுக்கான பிரத்யேக உடைகள் தயாராகி வருகின்றன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-09-2025.
14 Sep 2025 -
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
இன்றைய ராசிபலன்
14 Sep 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Sep 2025- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- மதுரை நவநீதகிருஷ்ணசுவாமி விழா தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
- பிரான்மலை சேக்
-
இன்றைய நாள் எப்படி?
14 Sep 2025