எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்ர், ஜன. 20 - சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரியில் கள்ள நோட்டுகளுடன் 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர், தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் வடமாநிலங்களை சேர்ந்த கள்ள நோட்டு கும்பலை கைது செய்தனர். பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகளை இவர்கள் நாடு முழுவதிலும் புழக்கத்தில் விட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் அங்கு அச்சடிக்கும் கள்ள நோட்டுக்களை இந்திய இளைஞர்கள் மூலமாகவே புழக்கத்தில் விட்ட அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதன்பிறகு கள்ள நோட்டு வேட்டையை தமிழகம் முழுவதும் போலீசார் தீவிரப்படுத்தினர். கட்டிட தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் போல ஊடுருவி கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்ட வாலிபர்கள் அணி அணியாக கைது செய்யப்பட்டனர். சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகை கடைகளில் கள்ள நோட்டுகளை மாற்றிய வெளிமாநில வாலிபர்களும் போலீசில் சிக்கினர்.
இதன்பிறகு ஓரளவுக்கு கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டாலும், புழக்கத்தில் விடப்பட்ட கள்ள நோட்டுகள் ஆங்காங்கே பொதுமக்களிடம் சிக்கி குழப்பத்தை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து எடுக்கப்பட்ட பணத்தில் கள்ள நோட்டு இருந்தது. போலீஸ் கமிஷனர் அலுவலக உணவகத்திலும் கள்ள நோட்டு சிக்கியது. 500 ரூபாய் நோட்டுகளே அதிக அளவில் கள்ள நோட்டுகளாக அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இதனால் ஒரு சில கடைகளில் 500 ரூபாய் நோட்டுகளை வாங்குவதற்கு கூட தயக்கம் காட்டினர். அந்த அளவுக்கு கள்ள நோட்டுகளின் ஆதிக்கம் சென்னையில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில்எருக்கஞ்சேரி பகுதியில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்படுவதாக கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அவர் அங்கு விரைந்து சென்றார்.
பின்னர் எம்.கே.பி. நகர் உதவி கமிஷனர் கோவி.மனோகரன், இன்ஸ்பெக்டர்கள் குணவர்மன், சம்பத் ஆகியோருடன் அவர் மூலக்கடை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு வேகமாக வந்த காரை போலீசார் மறித்தனர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. போலீசார் விரட்டிச் சென்று காரை மடக்கி பிடித்தனர். காரில் இருந்தவர்களில் 3 பேர் தப்பி விட்டனர். இஸ்மாயில் என்பவர் மட்டும் சிக்கினார். காரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் இஸ்மாயிலை கைது செய்து விசாரணை நடத்தினர். கொடுங்கையூர் சிவசங்கரன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அவர் கூட்டாளிகளுடன் தங்கி இருந்தது தெரியவந்தது. அந்த வீட்டுக்கு போலீசார் அதிரடியாக சென்று சோதனையிட்டனர்.
அங்கிருந்த ரபீக் என்பவர் கல்லால் ஜன்னல் கண்ணாடியை உடைத்து தப்பி ஓடிவிட்டார். அந்த வீட்டில் இருந்து ரூ.3 லட்சத்து 19 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை போலீசார் கைப்பற்றினர். அனைத்தும் ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளாகும். வீட்டில் இருந்த விலை உயர்ந்த டி.வி., கம்ப்யூட்டர் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்னன.
இதைத் தொடர்ந்து மண்ணடியில் உள்ள ஒரு வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தியதில் மண்ணடி பகுதியைச் சேர்ந்த முன்னாவு, வாசிம் ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் லட்சக்கணக்கான கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என தெரிகிறது.
இந்த கள்ள நோட்டுகள் வடமாநிலங்களில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடிய ரபீக்கை போலீசார் தேடி வருகிறார்கள். இவர் ஏற்கனவே ஒருமுறை கள்ள நோட்டு வழக்கில் சிக்கியவர். கள்ள நோட்டுகள் அனைத்தும் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பியோடிய கள்ளநோட்டு கும்பல் தலைவன் முகமது ரபீக்கை கைது செய்ய தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் முக்கிய பிரமுகர்கள் யாரேனும் செயல்பட்டுள்ளார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
ஓ.பி.எஸ்.சும், தினகரனும் தே.ஜ. கூட்டணியில் இல்லை: நயினார் நாகேந்திரன் பேட்டி
25 Dec 2025கிருஷ்ணகிரி, ஓ.பன்னீர்செல்வமும், தினகரனும் எங்கள் கூட்டணி யில் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்: வைகோ கண்டனம்
25 Dec 2025சென்னை, இந்தியா கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்நடத்திய வன்முறையாளர்களை சம்பவம் நடைபெற்ற மாநிலங்களின் அரசுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று வைகோ தெரிவி
-
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே பாடப்புத்தகங்களை வழங்க நடவடிக்கை
25 Dec 2025சென்னை, அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாளிலேயே 3-ம் பருவத்துக்கான பாடப்புத்தகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
-
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜன. 9-ல் அமித்ஷா தமிழகம் வருகிறார்
25 Dec 2025சென்னை, பா.ஜ.க.
-
தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு
25 Dec 2025சென்னை, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கேரளா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவ
-
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கோலாகம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
25 Dec 2025சென்னை, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்று உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.
-
அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்கும் முறையில் மாற்றம்
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவின் எச்-1பி விசா வழங்குவதற்கான குலுக்கல் முறையை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
-
டெல்லியில் இருந்தபோது சுவாச தொற்று ஏற்பட்டது: மத்திய அமைச்சர் வருத்தம்
25 Dec 2025புதுடெல்லி, டெல்லி இருந்தபோது காற்று மாசு காரணமாக சுவாச தொற்று ஏற்பட்டதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி வருத்தம் தெரிவித்துள்ளார்.
-
101-வது பிறந்தநாள்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி
25 Dec 2025புதுடெல்லி, வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள 'சதைவ் அடல்' நினைவிடத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி.
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த ஜெலன்ஸ்கி
25 Dec 2025கீவ், ரஷ்யாவுடன் போர் நிறுத்தம் மேற்கொள்ள அமெரிக்காவின் திட்டத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சம்மதம் தெரிவித்துள்ளார்.
-
மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ், ராஜ் தாக்கரே கூட்டணி
25 Dec 2025மும்பை, மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி குறித்து உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே புதிய அறிவிப்பை அறிவித்துள்ளனர்.
-
ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்து
25 Dec 2025புதுடெல்லி, ராகுல்காந்தி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
-
கேல் ரத்னா- அர்ஜுனா விருது: 24 வீரர்கள் பெயர் பரிந்துரை
25 Dec 2025புதுடெல்லி, கேல் ரத்னா- அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 24 வீரர்களின் விவரம் வெளியாகியுள்ளது.
விருதுகள் வழங்கி...
-
பொருளாதாரத்தில் இந்தியா மிக விரைவில் முதல் இடம் பிடிக்கும்: மத்திய இணை அமைச்சர் நம்பிக்கை
25 Dec 2025கோவை, பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதல் இடம் பிடிக்கும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
-
திட்டக்குடி கோர விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
25 Dec 2025சென்னை, திட்டக்குடி கோர விபத்து குறித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வேலு நாச்சியார் நினைவு நாள்: த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
25 Dec 2025சென்னை, வேலு நாச்சியார் நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
-
தி.மு.க. ஆட்சிக்கு இப்போதும் கூடுதல் வரவேற்பு கிடைக்கிறது: அமைச்சர் முத்துசாமி தகவல்
25 Dec 2025ஈரோடு, தி.மு.க.
-
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகும் ரவி சாஸ்திரி..? முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரை
25 Dec 2025லண்டன், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியம
-
காற்று சுத்திகரிப்பானுக்கு அதிக ஜி.எஸ்.டி. வரி விதிக்கலாமா...? டெல்லி உயர் நீதிமன்றம் காட்டம்
25 Dec 2025புதுடெல்லி, ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான காற்று தேவை. அதற்கான குறைந்தபட்ச நடவடிக்கையாக அரசு காற்று சுத்திகரிப்பான்களை வழங்கலாம் என்று டெல்லி ஐகோர்ட் கூறியது.


