எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி,பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை செயலர் ஷம்பு கல்லோலிகர் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது;-
"உயர்கல்வி உறுதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வடிவமைப்பு, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், பயனாளிகளின் தகுதி, தொகை, திட்ட மேலாண்மை, மாநில, மாவட்ட அளவிலான குழுக்கள், ஒற்றைச் சாளர சேவை உள்ளிட்டவை குறித்த உத்தரவுகளை பிறப்பிக்கும்படி சமூக நலத்துறை இயக்குநர் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட அரசு, இயக்குநரின் கருத்துரு தொடர்பான உத்தரவை வெளியிட்டுள்ளது.
மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டம், உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரியாக சமூக நலத்துறை இயக்குநர் நியமிக்கப்படுகிறார்.
இத்திட்டம் முழுமையாக ஆன்லைன் வழியாக செயல்படுத்தப்படுகிறது. ஆன்லைன் உள்ளிட்ட வசதிகளை மின்னாளுமை நிறுவனம் பராமரிக்கும். 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் அரசுப் பள்ளியில் படித்துள்ளார்களா என்பதை பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்யும். உயர்கல்வித் துறை, விண்ணப்பங்களை பெற்று வழங்கும்.
அத்துடன், மாணவிகளுக்கு டெபாசிட் தொகை இல்லாத வங்கிக் கணக்குகளை தொடங்கவும், 6 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாணவிகள் உயர்கல்வியில் தொடர்கிறார்களா என்பதையும் சரிபார்த்து சான்றளிக்கும். மாதந்தோறும் 7-ம் தேதி பயனாளியின் வங்கிக் கணக்குக்கு ரூ.1,000 அனுப்புவதற்கான உத்தரவுகளை சமூக நலத்துறை இயக்குநர் பிறப்பிப்பார்.
இத்திட்டத்தை கண்காணிக்க, தலைமைச் செயலர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழுவும், மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்படுகிறது. மேலும், மாநில திட்ட மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு திட்டம் கண்காணிக் கப்படுகிறது.
வழிகாட்டுதல்கள்;-
1) 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து, தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் யுஜிசியால் அங்கீகரிக்கப்பட்ட தமிழகத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தும். மேலும், அரசுப் பள்ளியில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை முடித்து டிப்ளமோ, ஐடிஐ படிப்புகளில் சேர்ந்தவர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும்.
2) வேறு மாநிலத்தில் இருந்து எல்லை தாண்டி வந்து படிக்கும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
3) உயர்கல்வி என்றால் கலை மற்றும் அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள், பாராமெடிக்கல், பட்டயம், ஐடிஐ, ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி என அனைத்துக்கும் பொருந்தும்.
4) முதல் உயர்கல்விக்கு மட்டுமே உதவித்தொகை பெற முடியும். ஒருங்கிணைந்த முதுநிலைக் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலைக் கல்வியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயின்றால் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.
5) பாலிடெக்னிக் படிப்பவர்களுக்கு 3 ஆண்டுகள், ஐடிஐ சான்றிதழ் படிப்புகளுக்கு குறைந்தபட்சம் ஓராண்டு, கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு 3 ஆண்டுகள், பொறியியல் படிப்புக்கு 4 ஆண்டுகள், வேளாண் படிப்புகளுக்கு 4 ஆண்டுகள், மருத்துவப் படிப்புக்கு 5 ஆண்டுகள், சட்டம் மற்றும் பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை உதவித்தொகை பெறமுடியும்.
6) அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறும் மாணவிகளில் யார் உயர்கல்வி பயில்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
7) உதவித்தொகையை பெற ஆதார் எண் கட்டாயம்.
8) பயன்பெற விரும்பும் தகுதியான மாணவிகள், தாங்களாகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம் அல்லது கல்லூரி வாயிலாக பதிவு செய்யலாம். இத்திட்டம் தொடர்பான தகவல்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு ஆன்லைன் மூலம் தகவல்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-07-2025.
14 Jul 2025 -
பழம்பெரும் நடிகை சரோஜாதேவி உடல்நலக்குறைவால் காலமானார்
14 Jul 2025பெங்களூரு : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87.
-
40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம்: டி.ஜி.பி. சங்கர் ஜிவால்
14 Jul 2025சென்னை, டி.எஸ்.பி., உதவி ஆணையர் பொறுப்பிலுள்ள 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
மாயக்கூத்து திரை விமர்சனம்
14 Jul 2025எழுத்தாளர் நாகராஜன் கண்ணன், ஒரு கதை எழுதுகிறார்.
-
சூர்யா சேதுபதிக்கு இயக்குநர் அனல் அரசு புகழாரம்
14 Jul 2025சண்டை இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை 4 அன்று திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
-
அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
14 Jul 2025திருச்சி : 'அரசியலில் அப்பா- மகன் உறவு மிக மிக முக்கியம்' என தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேசுகையில் தெரிவித்தார்.
-
கைமேரா இசை வெளியீட்டு விழா
14 Jul 2025மாணிக் ஜெய். என் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.
-
ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கு: குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட் உத்தரவு
14 Jul 2025திருப்பத்தூர் : ஓடும் ரெயிலில் கர்ப்பிணியை கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
சரோஜா தேவி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
14 Jul 2025புதுடெல்லி : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்கள் மீது 45 நாளில் தீர்வு : கூடுதல் தலைமை செயலாளர் உறுதி
14 Jul 2025சென்னை : ''உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என அரசு கூடுதல் தலைமை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அமுதா தெரிவித்
-
கோவா, அரியானா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்
14 Jul 2025புதுடெல்லி, கோவா உள்பட 3 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம் செய்து ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம் : லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
14 Jul 2025மதுரை : முருகப்பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று (ஜூலை 14) அதிகாலை 5.31 மணியளவில் கும்பங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபி
-
தமிழக எம்.பி, எம்.எல்.ஏ.-க்கள் மீதான ஊழல் வழக்கு விவரங்களை வழங்க உத்தரவிடக்கோரி த.வெ.க. மனு
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்கு குறித்த விவரங்களை வெளியிட மாநில தகவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர்
-
விமான விபத்துக்கு பராமரிப்பு பிரச்சினைகள் காரணமில்லை : ஏர் இந்தியா சி.இ.ஓ. தகவல்
14 Jul 2025புதுடெல்லி : அகமதாபாத் விமான விபத்துக்கு இயந்திரவியல் (மெக்கானிக்கல்), பராமரிப்பு சார்ந்த (மெயின்டனன்ஸ்) பிரச்சினைகள் காரணமாக இருக்கவில்லை என ஏர் இந்தியா சி.இ.ஓ.
-
2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும்: இ.பி.எஸ். மீண்டும் திட்டவட்டம்
14 Jul 2025சேலம், 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
உள்ளே செல்ல அனுமதி மறுப்பு: தியாகிகள் கல்லறைக்கு சுவர் ஏறி சென்று முதல்வர் உமர் அஞ்சலி
14 Jul 2025ஸ்ரீநகர் : தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
-
படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் பலி: இயக்குனர் பா.ரஞ்சித் வழக்கு பதிவு
14 Jul 2025நாகை : படப்பிடிப்பு தளத்தில் ஸ்டன்ட் காட்சியின் போது ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு
-
புதின் அழகாக பேசுகிறார்; ஆனால் குண்டுகளையும் வீசி விடுகிறார்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கு
14 Jul 2025வாஷிங்டன், புதின் அழகாக பேசுகிறார் . ஆனால் அனைவர் மீதும் குண்டுகளை போடுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நடிகை சரோஜாதேவி மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்
14 Jul 2025சென்னை, நடிகை சரோஜாதேவி மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.;
-
தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் நடைமுறைக்கு வந்தது 'ப; வடிவ வகுப்பறைகள்
14 Jul 2025சென்னை, தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் "ப" வடிவ வகுப்பறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வருகிறது.
-
பயணத்தை தொடங்கியது டிராகன்: சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் இன்று பூமிக்கு திரும்புகின்றனர்
14 Jul 2025நியூயார்க், சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேருடன் பூமியை நோக்கி தனது பயணத்தை டிராகன் விண்கலம் தொடங்கியது. இன்று மாலை அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர் .
-
நாடு முழுவதும் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்: இந்திய தேர்தல் கமிஷன் திட்டம்
14 Jul 2025புதுடெல்லி, நாடு முழுவதும் அடுத்த மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
-
அமர்நாத்தில் பனி லிங்கத்தை 2 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர்
14 Jul 2025ஸ்ரீநகர், அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 2 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
-
ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.500 வினியோகம் நிறுத்தம்? மத்திய அரசு விளக்கம்
14 Jul 2025புதுடெல்லி, சட்டப்பூர்வமாக ரூ.500 நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மிசஸ் & மிஸ்டர் திரை விமர்சனம்
14 Jul 2025வனிதா விஜயகுமாரும், ராபர்ட்டும் காதல் திருமணம் செய்து கொண்டு பாங்காக்கில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். 40 வயதை எட்டும் வனிதா குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்.