எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : ஓட்டுப்போட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது என்று மதுரையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜு தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசியதாவது,
மதுரை எப்போதுமே எம்.ஜி.ஆரின் கோட்டையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகி விட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வருத்தப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கி விட்டனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கருணாநிதிக்கு நூலகமும் நினைவு மண்டபமும் கட்டி வருகிறார்கள். கடலிலும் கருணாநிதியின் பேனா வைப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலக தமிழ்ச் சங்கம், ஆம்னி பஸ் நிலையம், பெரிய ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம், புற்றுநோய் சிகிச்சை மையம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள், தடுப்பணைகள், பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம்.
ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே தி.மு.க. தொடங்கி வைத்து வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம், மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி, ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி விட்டார்கள். தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண உதவித்தொகையை உயர்த்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.
அதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிப்போம் என்று சொல்லி தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைத்து விட்டார்கள். இதுபோல மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் ரத்துசெய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வின் இந்த செயல்பாடுகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும். தேர்தல் வாக்குறுதியில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று தி.மு.க. சொல்லியிருந்தது. ஆனால் இப்போது 100 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தையும் அதிகரித்து விட்டார்கள்.
தேர்தலில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. மறந்து விட்டது. இது எல்லாமே நடிப்பு என மக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள். அ.தி.மு.க.வை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது. ஏழை, எளியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது. இதன் மூலம் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றிய ஒரே அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் மேலூர் பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மதுரை நகர நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, கு. திரவியம், எம்.எஸ். பாண்டியன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜ்சத்யன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, பி.ஆர்.சி. மகாலிங்கம், பைக்காரா கருப்பசாமி, முத்துவேல், பாசறை ஜெயரீகன், முத்துராமலிங்கம், பி. குமார், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, அன்பழகன், ரவிசந்திரன், கொரியர் கணேசன், அண்ணாநகர் முருகன், முத்துச்சாமி, எஸ்.போஸ், பெரியசெல்வம், திருப்பாலை நாகராஜன், சுகந்தி அசோக், புதூர் பாப்பா, பேச்சியம்மாள், வேணி, கல்யாணி, பி. புஷ்பா, லதா, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் : மத்திய அமைச்சர் அமித்ஷா புகழாரம்
12 Jul 2025மும்பை : யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் மராத்திய ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளதற்கு அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
12 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி: முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்தார்
12 Jul 2025சென்னை, தஞ்சாவூரில் குளத்தில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்பதில் ஆயிரம் சதவீதம் உறுதி: த.வெ.க. திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் 100 சதவீதம் அல்ல 1000 சதவீதம் உறுதியாக உள்ளோம் என்று த.வெ.க. தெரிவித்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகள்: தமிழக அரசு அறிவுறுத்தல்
12 Jul 2025சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
தனியார் பால் நிறுவன மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர்
12 Jul 2025சென்னை : தனியார் பால் நிறுவனத்தில் கருவூல மேலாளர் மரணம் தற்கொலை போன்றே தெரிகிறது என சென்னை மாநகரக் காவல் ஆணையர் அருண் தெரிவித்தார்.
-
பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: இ.பி.எஸ். உறுதி
12 Jul 2025சென்னை : ''வரும் சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை உடன் அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.
-
லாக் அப் மரணங்கள்: விஜய் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம்
12 Jul 2025சென்னை, லாக் அப் மரணங்கள் தொடர்பாக, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் த.வெ.க. தலைவர் விஜயின் தலைமையில் நடைபெற உள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.