எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை ஏப் 28 - சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது பற்றி கோவையில் 7 மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை தேர்தல் கமிஷனர் பிரவீன் குமார் பயிற்சி அளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 13 ந்தேதி 234 தொகுதிகளுக்கும் ஓரே கட்டமாக வாக்கு பதிவு நடந்து முடிந்தது. மின்னணு இயந்திரம் மூலம் நடந்த வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது மே மாதம் 13 ந் தேதி தமிநாடு முழுவதும் ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதையொட்டி கோவையில் ஓட்டு எண்ணிகையில் ஈடுபடும் அனைவரும் பயிற்சி அளிக்கப்பட்டது. தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் மற்றும் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் மண்டலம் வாரியாக வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு அறிவிப்பு தொடர்பான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அளித்து வருகின்றனர்.
இதே போல் ,கோவை கொடீசியா வளாகத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த 7 மாவட்ட கலெக்டர்களுக்கும் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷனர் தலைமையில் கூடுதல் தேர்தல் அதிகாரி அமுதா ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத், திருப்பூர் மாவட்ட கலெக்டர் சமயமூர்த்தி, ஈரோடு மாவட்ட கலெக்டர் காமராஜ்,நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், சேலம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார், தர்மபுரி மாவட்ட கலெக்டர் ஆனந்தகுமார், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அருண்ராய் மற்றும் தேர்தல் அலுவலர்கள் , நுண்பார்வையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
பயிற்சி வகுப்புகள் 2 கட்டமாக நடந்தது காலையில் நடந்த பயிற்சி யில் கோவை,திருப்பூர், ஈரோடு, மாவட்ட கலெக்டர்களும் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 2 மணிக்குதொடங்கி 5 மணிக்கு முடிந்த பயிற்சி வகுப்பில் நீலகிரி,சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டி.ஆர். ஓக்கள் தொகுதி தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கை நாளான மே 13 ந்தேதி அன்று ஓட்டு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு தொடங்கப்பட வேண்டும்என்றும் வாக்கு எண்ணிக்கையை எவ்வித குறைபாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் இடம் இன்றி நடத்தப்பட வேண்டும், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் அதிகாரி ஓப்புதல் பெற்ற பின்னர் தான் முடிவை அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகளை எவ்வாறு எண்ணுவது என்றும் வாக்குஎண்ணிக்கை மையங்களில் வெளிப்புற பாதுகாப்பு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு தேவையான குடிநீர் , கழிவறை வசதிகள், வாக்கு எண்ணும் அறைகளில் வாக்குச்சாவடி முகவர்கள் நியமிப்பது அவர்களை அமர வைப்பது வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு கூடுதல் பாதுகாப்பு ,செய்தியாளர்களுக்கு ,ஊடக அறை அமைத்து கொடுப்பது குறித்து 7 மாவட்ட கலெக்டர்கள் தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் நுண் பார்வையாளர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு முகாமில் எடுத்துரைத்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் மற்றும் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பெ. அமுதா ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசு பொறியியல் கல்லூரிக்கு நேரில் சென்று பாதுகாப்பு பணிகள், பராமரிக்கப்பட்டு வரும் வருகைப்பதிவேடு , வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி கேமிராக்களின் இயக்கம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அரசு பொறியியல் கல்லூரியில் இருந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் பாதுகாப்பு பணிகள் எவ்வாறு உள்ளது .ஏதாவது குறைபாடுகள் இருக்குமாயின் தெரிவிக்கலாம் என்று பிரவீன்குமார் கேட்டார் அதற்குஎவ்வித குறைபாடுகள் இல்லாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று பதிலளித்தார்.
இதன் பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் நிருபர்களிடம் கூறியதாவது
ஓட்டு எண்ணிக்கை தொடர்பான பயிற்சி வகுப்புகள் மண்டலம் வாரியாக அளிக்கப்பட்டு வருகிறது. இன்று (27 ந் தேதி)கோவைமண்டலத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. கோவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக உள்ளது.
ஓட்டு எண்ணும் மையங்களில் சிறப்பான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடத்துவது குறித்த பயிற்சி வகுப்புகள் நாளை (28ந்தேதி) திருச்சியிலும் ,3ந் தேதி மதுரையிலும்,4ந்தேதி புதுக்கோட்டையிலும்.5 ந்தேதி சென்னையிலும் நடத்தப்படுகிறது. 234 தொகுதிகளுக்கும் சுமார் 10 ஆயிரம் பணியாளர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள் வாக்கு எண்ணிக்கை சரியாக காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அடுத்த அரை மணி நேரத்தில் மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை துவங்கப்படும். ஓரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 14 மேஜைகள் போடப்படுகிறது.
மேலும் 49 ஓ ஓட்டு போட்டவர்கள் குறித்து காவல் துறை எந்தவித விசாரணையும் நடத்தவில்லை. இது குறித்து டி.ஜி. பி. இடம் பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்
இவ் ஆய்வின் போது கோவை மாவட்ட கலெக்டர் உமாநாத் மாவட்ட வருவாய் அலுவலர் அ. சண்முகசுந்தரம் அரசு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தி.மு.க.வா? த.வெ.க.வா? கூட்டணி முடிவை இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்..!
11 Jan 2026சென்னை, இன்று காலை தைலாபுரத்தில் அல்லது சென்னையில் யாருடன் கூட்டணி என அறிவிப்பார் என்று பா.ம.க. வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி எப்பொழுதுமே கிடையாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளதாக அமைச்சர் தகவல்
11 Jan 2026சென்னை, காங்கிரஸ் கட்சியினர் கூட்டணியில் பங்கு கேட்பது அவர்களது உரிமை என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி, தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது எப்ப
-
ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என பெயர் சூட்டினார் முதல்வர்
11 Jan 2026சென்னை, ஈரோட்டில் உள்ள சாலைக்கு ‘தியாகி குமரன் சாலை' என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.
-
யாரிடமும் பேதம் காட்டாமல், யாரையும் பிரித்து பார்க்காத ஒரே மொழி 'தமிழ்' மொழி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்
11 Jan 2026சென்னை, தமிழ்மொழி என்பது நம் அனைவரையும் இணைக்க கூடிய ஒரு மொழி. தமிழ் யாரையும் வேறுபடுத்தாது, பிரித்துப்பார்க்காது.
-
புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் உண்மையை ஒருநாள் நிச்சயம் உணர்வார்கள்: இ.பி.எஸ்.
11 Jan 2026சென்னை, ஓய்வூதியத் திட்ட விவகாரத்தில் உண்மையை அரசு ஊழியர்கள் ஒருநாள் உணர்வார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
கரூர் சம்பவம் தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. முன்பாக இன்று ஆஜராகிறார் விஜய்
11 Jan 2026கரூர், கரூர் பெருந்துயரம் தொடர்பான சி.பி.ஐ. விசாரணைக்காக இன்று காலை 7 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் டெல்லி செல்கிறார்.
-
கிரோக் ஏ.ஐ. தள விவகாரம்: இந்திய சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக எக்ஸ் நிறுவனம் உறுதி
11 Jan 2026புதுடெல்லி, எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஐ சாட்போட் ஆன கிரோக் தளம் தொடர்பான புகாரில் இந்தியச் சட்டங்களுக்கு உட்பட்டு நடப்பதாக உறுதி அளித்துள்ள
-
புதிய அரசியலமைப்பு சீர்திருத்தங்களால் இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
11 Jan 2026சென்னை, இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் ம
-
16-வது நாளாக தொடர் போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் 1,500 பேர் கைது
11 Jan 2026சென்னை, சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னையில் தொடர்ந்து 16-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களை போலீஸார் கைது செய்தனர்.
-
கடலூர், அரியலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
11 Jan 2026சென்னை, தமிழகத்தில் கடலூர், அரியலூர் உள்ளிட்ட இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருகிற 15-ம் தேதி முதல் விண்ணப்பம் விநியோகம்
11 Jan 2026ராமேசுவரம், கச்சத்தீவு திருவிழாவில் இந்தியாவில் இருந்து கலந்து கொள்பவர்களுக்கு ஜன.15ம் தேதி முதல் 25ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள
-
17 வணிக செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 12 மணி நேர கவுண்ட்டவுன் தொடக்கம்
11 Jan 2026சென்னை, மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.) சேவைக்காக இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
-
மராட்டியத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வெளிநாட்டினர் 6 பேர் கைது
11 Jan 2026மும்பை, மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் போலீசார் தீவிர சோதனை நடத்தி அங்கு
-
'ஹெத்தை' அம்மன் திருவிழா: படுகர் மக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
11 Jan 2026சென்னை, நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய திருவிழாவான "ஹெத்தை" அம்மன் திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
-
ஒருநாள் பயணமாக கேரளா சென்ற அமித்ஷா பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கேரளா சென்றுள்ளார்.
-
சுவேந்து அதிகாரி தாக்கப்பட்டதாக புகார்: மேற்கு வங்கத்தில் பா.ஜ.க.வினர் போராட்டம்
11 Jan 2026கொல்கத்தா, சுவேந்து அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, அதனைக் கண்டிக்கும் விதமாக, மேற்கு வங்கம் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.
-
ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
11 Jan 2026தெக்ரான், ஈரானில் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் மக்களின் போராட்டங்கள் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.
-
மெரினா கடற்கரையில் குப்பை கொட்டினால் ரூ.5000 அபராதம்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
11 Jan 2026சென்னை, மெரினா உள்ளிட்ட பிற கடற்கரைகளில் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டினால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
மத்திய அரசை கண்டித்து முதல்வர் பினராயி தலைமையில் எல்.டி.எப் இன்று போராட்டம்
11 Jan 2026திருவனந்தபுரம், மத்திய அரசின் "மக்கள் விரோத" கொள்கைகளுக்கு எதிராக முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கேரள ஆளும் இடது ஜனநாயக முன்னணி சத்தியாகிரகப்' போராட்டத்தை இன்ற
-
3-வது பாலியல் வன்கொடுமை வழக்கில் கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது
11 Jan 2026திருவனந்தபுரம், கேரளத்தில் மூன்றாவது முறையாக பாலியல் வன்கொடுமை வழக்கில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராகுல் மாம்கூட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
-
இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும்: கோவையில் நிதின் நபின் பேச்சு
11 Jan 2026கோவை, இந்து விரோத சக்தியை முறியடிக்க வேண்டும் என்று கோவையில் பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் பேசியுள்ளார்.
-
குஜராத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் : சவுரியா யாத்திரையிலும் பங்கேற்பு
11 Jan 2026அகமதாபாத், சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி, காலை 9.45 மணியளவில் பூஜைகள் செய்து, சாமி தரிசனம் மேற்கொண்டார்.
-
இந்தியாவில் எப்போதும் ஒரு இந்துவே பிரதமராக இருப்பார்: அசாம் முதல்வர் ஹிமாந்தா பேச்சு
11 Jan 2026திஸ்பூர், இந்தியா ஒரு இந்து தேசம், இந்து நாகரிகம் கொண்டது.
-
பிப்ரவரி 2-வது வாரத்தில் பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடங்க திட்டம்: சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு
11 Jan 2026சென்னை, பூந்தமல்லி - வடபழனி இடையே பிப்ரவரி 2-வது வாரத்தில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க திட்டமிட்டிருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கருக்கலைப்பு விவகாரம்: ஐகோர்ட் முக்கிய கருத்து
11 Jan 2026டெல்லி, கர்ப்பத்தைத் தொடரக் கட்டாயப்படுத்துவது பெண்ணின் உரிமையைப் பறிக்கும் செயல் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


