எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா களம் இறங்குவாரா என்பதில் சந்தேகம் நிலவியது. தீக்சனா ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பீல்டிங்கின் போது தொடை பகுதியில் காயம் அடைந்தார். வலது தொடையில் ஏற்பட்டுள்ள காயத்தின் தன்மையை அறிந்து கொள்ள அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் அவருக்கு காயம் உள்ளது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மகேஷ் தீக்சனா இடம் பெற மாட்டார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் தீக்சனாவுக்கு பதிலாக சஹான் ஆராச்சிகே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
______________
கோப்பை மிகவும் முக்கியம்: ஷுப்மன் கில்
உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் முக்கியம் என இந்திய அணியின் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 முதல் தொடங்கவுள்ள நிலையில், ஷுப்மன் கில் இவ்வாறு தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கும். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது எங்களுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், நாங்கள் வெற்றி பெறும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.
தொடர்ச்சியாக வெற்றி பெறுவது என்பது அவசியம். இந்த சூழலில் நாங்கள் ஓரிரு போட்டிகளில் தோல்வியடைந்தால் அது எங்கள் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். வங்கதேசத்துக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடியதாகவே உணர்கிறோம். நாங்கள் 10-15 ரன்கள் அதிகமாக அவர்களை எடுக்க விட்டுவிட்டோம். மற்றபடி, நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.
______________
புதிய தொழிலை தொடங்கும் கங்குலி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவருமானவர் சவுரவ் கங்குலி. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சவுரவ் கங்குலி தொழில் தொடங்கும் முனைப்பில் உள்ளார். அவர் மேற்குவங்காளத்தின் மெதினிபூரில் விரைவில் இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளார். மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி 12 நாள் பயணமாக ஸ்பெயின் மற்றும் துபாய்க்கு சென்றுள்ளார். அரசு முறை பயணமாக மம்தா பானர்ஜியும் அரசின் முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர். அதேவேளை மம்தா பானர்ஜியுடன் சவுரவ் கங்குலியும் சென்றுள்ளார். மேற்குவங்காளத்தில் முதலீடு செய்ய வருமாறு ஸ்பெயின், துபாயில் உள்ள முதலீட்டாளர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் நடந்த வங்காள-உலக தொழில் கூட்டத்தில் பங்கேற்ற சவுரவ் கங்குலி கூறுகையில், நாங்கள் மேற்குவங்காளத்தில் 3வது இரும்பு தொழிற்சாலை அமைக்கும் பணியை தொடங்கியுள்ள இந்த நேரத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் கிரிக்கெட் மட்டும் தான் விளையாடுவேன் என பலர் நினைக்கின்றனர். நாங்கள் 2007ம் ஆண்டே சிறிய அளவில் இரும்பு தொழிற்சாலை தொடங்கிவிட்டோம். இன்னும் 6 மாதத்திற்குள் நாங்கள் மெதினிபூரில் புதிய இரும்பு தொழிற்சாலை தொடங்க உள்ளோம்' என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
திருச்செந்தூரில் மீண்டும் உள்வாங்கிய கடல்
09 Nov 2025திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று மீண்டும் கோவில் முன்புள்ள கடல் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு சுமார் 100 அடி உள்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-11-2025.
09 Nov 2025 -
துருக்கியில் நடைபெற்ற பாகிஸ்தான் - ஆப்கான் இடையே அமைதி பேச்சுவார்த்தை தோல்வி
09 Nov 2025அங்காரா : பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்துளது.
-
இ.பி.எஸ். வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
09 Nov 2025சென்னை : இ.பி.எஸ். வீடு, பா.ம.க., அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
குரல்வழி யு.பி.ஐ. வசதி அறிமுகப்படுத்த திட்டம்
09 Nov 2025சென்னை : குரல் அடிப்படையிலான யு.பி.ஐ. பரிவர்த்தனை சேவையை அறிமுகப்படுத்த பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திட்டமிட்டுள்ளது.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க குவிந்த சுற்றுலா பயணிகள்
09 Nov 2025தென்காசி : விடுமுறை தினத்தை முன்னிட்டு குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
09 Nov 2025திருப்பதி : ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரருமானவர் முகேஷ் அம்பானி நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
-
தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது
09 Nov 2025ஐதராபாத் : தெலுங்கானாவில், ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு நடைபெற்ற பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.
-
12 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Nov 2025சென்னை : தமிழகத்தில் தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ள
-
சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரியர் நாடு கடத்தல்
09 Nov 2025ஐதராபாத் : இந்தியாவில் சட்டவிரோதமாக 13 ஆண்டுகள் தங்கி இருந்த நைஜீரியர் நாடு கடத்தப்பட்டார்.
-
தாக்குதல்கள் நடத்த சதி திட்டம்: குஜராத்தில் 3 பேர் கைது
09 Nov 2025அகமதாபாத் : நாட்டில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த ஆயுத விநியோகம், சதி திட்டம் தீட்டிய 3 பேர் குஜராத்தில் கைது செய்யப்பட்டனர்.
-
கர்நாடகாவில் அரசு பள்ளிகளில் தினமும் கூடுதல் வகுப்பு நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
09 Nov 2025பெங்களூரு : கர்நாடகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் சார்பில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் பணிகள் நடந்து வருகிறது.
-
பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்: பங்கேற்றால் 50 மதிப்பெண்கள் என்ற அறிவிப்பால் புதிய சர்ச்சை
09 Nov 2025டேராடூன் : பிரதமர் மோடியுடனான கலந்துரையாடலில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எஸ்.ஐ.ஆர்.-க்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் பல பிரச்சினைகள்-குழப்பங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
09 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்காக வழங்கப்படும் கணக்கீட்டு படிவத்தில் ஏராளமான பிரச்சினைகளும் குழப்பங்களும் இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்
-
குடியிருப்புகளில் மின் வாகன சார்ஜிங் வசதி இனி கட்டாயம் : தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு
09 Nov 2025சென்னை : குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம் என விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.
-
அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து
09 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் விமானப் போக்குவரத்துத் துறைக்கு நிதி வழங்காததால், லட்சக்கணக்கானோருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டதை அடுத்து அங்கு 1,200 விமானங்கள் ரத்து செய
-
அந்தமான் கடலில் நிலநடுக்கம்
09 Nov 2025போர்ட் பிளேர் : அந்தமான் கடலில் நிலநடுக்கம் 90 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.
-
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை திருச்சியில் முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025சென்னை : திருச்சியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் இன்று அவர் தொடங்கி வைக்கிறார்.
-
பீகாரில் 122 தொகுதிகளில் 2-ம் கட்ட தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது : நாளை வாக்குப்பதிவு
09 Nov 2025பாட்னா : பீகாரில் 2-ம் கட்ட தேர்தலுக்கான 122 சட்டசபை தொகுதிகளில் நேற்று மாலையிடுன் பிரச்சாரம் ஓய்ந்தது.
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு சார்பில் விழா: ரூ.773 கோடி மதிப்பிலான புதிய நலத்திட்ட பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
09 Nov 2025திருச்சி : திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் ரூ.773.
-
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு கோதுமை சென்று சேர்வதை அரசு உறுதி செய்ய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
09 Nov 2025சென்னை : தமிழ்நாட்டில் 12,573 ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, ரேஷன் கடைகளுக்கு
-
36-வது பிறந்தநாள்: தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Nov 2025சென்னை : 36-வது பிறந்தநாளை முன்னிட்டு தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தலிலும் பீகார் மக்கள் மாற்றத்திற்காகவே வாக்களிப்பார்கள் : தேஜஸ்வி யாதவ் நம்பிக்கை
09 Nov 2025பாட்னா : பீகார் மக்கள் முதல் கட்ட தேர்தலில் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நவம்பர் 11 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலிலும் அவர்கள் அதையே செய்வார்கள் என்று மகா கூட்டணிய
-
வாக்கு திருட்டு விவகாரத்தில் மேலும் பல ஆதாரங்களை விரைவில் வெளியிடுவேன்: ராகுல் காந்தி பேட்டி
09 Nov 2025பச்மாரி : மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரத்திலும் இதுவே நடந்துள்ளது என்று நான் நம்புகிறேன். இது பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் வேலை.


