எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புது டெல்லி:பாராளுமன்ற மக்களவையில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறிய நிலையில் நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் காரசார விவாதம் நடைபெற்றது.
மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே 33 சதவீத இட ஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவித்தார். இதையடுத்து மசோதா மீது அனைத்து கட்சி எம்பிக்களும் பேசினர்.
பாராளுமன்ற 5 நாள் சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற கூட்டத்தை அடுத்து மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. கடந்த 18-ம் தேதி பாராளுமன்ற பழைய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி, எம்.பி.க்கள் பிரியா விடை கொடுத்து விட்டு பாராளுமன்ற புதிய கட்டிடத்திற்கு சென்று அவை நடவடிக்கைகளை தொடங்கினர். அப்போது மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் தொடங்கி நடைபெற்றது. இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 27 பெண் எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இறுதியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 454 எம்.பி.க்கள் ஆதரவாகவும், மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பி.க்கள் இதற்கு எதிராகவும் வாக்களித்தனர். நடப்பு சிறப்பு கூட்டத்தொடரில் மக்களவையில் முதலாவதாக நிறைவேற்றப்பட்ட மசோதா இதுவாகும்.
புதிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா என்ற பெருமையையும் இம்மசோதா பெற்றது. மக்களவையை தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இங்கும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசுகையில், இந்த அரசியலமைப்பு திருத்த மசோதா மூலம் சட்ட விதிகள் 330, 332 மற்றும் 334- ல் கூடுதலாக ஒரு பிரிவு சேர்க்கப்படும். இதன் மூலம் பாராளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளில் 3-ல் 1 பங்கு இடம் பெண்களுக்கு ஒதுக்கப்படும்.
இந்த இட ஒதுக்கீடு, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு பெண்களுக்கும் பொருந்தும். இது வரலாற்று சிறப்புமிக்க முயற்சியாகும். மகளிருக்கான இந்த இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்தும். இதனை அமல்படுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அது தொடர்பான வரையறை அவசியமானதாகும் என்றார்.
அதனைத்தொடர்ந்து பா.ஜ. எம்.பி.யும் அந்த கட்சியின் தேசிய தலைவருமான ஜே.பி. நட்டா மசோதா மீதான விவாதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க இந்த இட ஒதுக்கீடு மசோதா உறுதியளித்துள்ளது. காங்கிரஸ் கட்சியை விட அதிகளவு ஓ.பி.சி பிரிவை சேர்ந்த எம்.பி.க்கள் எங்கள் கட்சியில் உள்ளனர் என்றார்.
தொடர்ந்து மசோதா மீது காரசார விவாதம் நடைபெற்றது. இங்கும் அனைத்து கட்சிகளின் பெண் எம்.பி.க்கள் மசோதா மீது காரசாரமாக பேசினர். விவாதத்துக்கு பின்னர் மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதி பரிசீலனைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். அவரின் ஒப்புதலுக்கு பிறகு இந்த மசோதா உடனடியாக சட்டமாக மாறும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.