எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோ : ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நடைபெற்ற 8-ம் நாள் போட்டியின் போது 3 தங்கப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. நடைபெற்ற 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே, 8 நிமிடம் 19.50 விநாடிகளில் முதலாவதாக வந்து புதிய ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கம் வென்றார்.
இதற்கு முன்பு 2018-ல் ஈரான் வீரர் ஹொசைன் கெய்ஹனி 8 நிமிடங்கள் 22.79 விநாடிகளில் ஓடியதே ஆசிய விளையாட்டுப் போட்டி சாதனையாக இருந்தது. அதை தற்போது அவினாஷ் முறியடித்துள்ளார். மேலும், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவினாஷ் பெற்றுள்ளார்.
ஆடவர் குண்டு எறிதல் போட்டியில்:- இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் தூர் 20.36 மீட்டர் தூரத்துக்கு குண்டு எறிந்து தங்கம் வென்றார். கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தஜிந், தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடவர் அணி துப்பாக்கிச் சுடுதல் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், கியானன் செனாய், ஜொராவர் சிங் சாந்து ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளைக் குவித்து தங்கம் வென்றது.
துப்பாக்கிச் சுடுதல் மகளிர் அணி டிராப் பிரிவில்:- மணீஷ் கீர், பிரீத்தி ரஜாக், ராஜேஸ்வரி குமாரி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளிகள் குவித்து 2-ம் இடம் பிடித்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணிக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 357 புள்ளிகள் குவித்த சீன அணிக்கு தங்கமும், 336 புள்ளிகள் குவித்த கஜகஸ்தான் வீராங்கனைகளுக்கு வெண்கலமும் கிடைத்தது.
கோல்ஃப்:-
மகளிர் கோல்ஃப் பிரிவில் இந்திய வீராங்கனை ஆதித்தி அசோக் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். முதல் இடத்தை தாய்லாந்து வீராங்கனை அர்ப்பிசயா யூபோலும், தென்கொரிய வீராங்கனை ஹுயுன்ஜோ யூ 3-வது இடமும் பிடித்தனர்.
1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு வெள்ளி:- ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர்கள் அஜய்குமார் சரோஜ் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
மகளிர் 1,500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஹர்மிலன் பெயின்ஸ் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஜோதி யார்ராஜிக்கு வெள்ளி:-
மகளிர் 100 மீட்டர் தடை ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி 3-வதாக (12.91 விநாடி) வந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதே பிரிவில் பங்கேற்ற சீன வீராங்கனை யானி வூ (2-வது இடம்) தகுதியிழப்பு செய்யப்பட்டதால் ஜோதி யார்ராஜி இரண்டாவதாக வந்ததாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவரது பதக்கம், வெள்ளிப் பதக்கமாக மாற்றப்பட்டது.
முரளி ஸ்ரீசங்கருக்கு வெள்ளி:-
ஆடவர் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் முரளி ஸ்ரீசங்கர் 2-வது இடம் (8.19 மீட்டர் தூரம்) பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.
மகளிர் வட்டு எறிதல் போட்டி:-
இந்திய வீராங்கனை சீமா பூனியா வெண்கலமும் (58.62 மீட்டர் தூரம்), மகளிர் ஹெப்டத்லான் போட்டியில் இந்திய வீராங்கனை நந்தினி அகாசரா வெண்கலமும் வென்றனர். மகளிர் 50 கிலோ குத்துச்சண்டை அரை இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை நிகத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் தாய்லாந்தின் ரகாஸ்த் சுத்தாமத்திடம் தோல்வி கண்டார். இதையடுத்து அவர் வெண்கலப் பதக்கத்துடன் திரும்பினார்.
பதக்கப் பட்டியலில் 4-வது இடம்:-
8-ம் நாள் போட்டிகளின் முடிவில் இந்தியா 13 தங்கம், 21 வெள்ளி, 19 வெண்கலப் பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனாவும், 2-வது இடத்தில் ஜப்பானும், 3-வது இடத்தில் கொரியாவும் உள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.