எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மும்பை : டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும் முன்னாள் வர்ணனையாளருமான இயன் சாப்பல் வேதனை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டுக்கான ஆங்கில இணையதளம் ஒன்றில் இது தொடர்பாக அவர் எழுதிய பத்தி ஒன்றில், “நிர்வாகிகள் டி20 கிரிக்கெட்டை பெரிய அளவுக்கு ஆதரித்து ஒருநாள் கிரிக்கெட்டை காலி செய்து விட்டனர், இப்படி காலியாவதற்கு அனுமதித்த வீரர்களும் குற்றவாளிகளே” என தெரிவித்துள்ளார்.
ஆம், முன்பெல்லாம் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. ஷார்ஜாவில் சில வேளைகளில் ஆஸ்ட்ரல்-ஆசிய கோப்பை ஒருநாள் கிரிகெட்டும் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்று முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் என்னும் கருத்தாக்கமே காணாமல் போய் விட்டது. ஐசிசி ஒரு கட்டத்தில் எதிர்காலப் பயணத்திட்டத்தில் முத்தரப்பு கிரிக்கெட்டைச் சேர்த்தாலும் பணபலமுள்ள பிசிசிஐ, ஆஸ்திரேலிய, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒப்புக் கொள்வதில்லை. ஆகவே வெறும் இருதரப்பு ஒருநாள் தொடராகக் குறுக்கப்பட்டு அதுவும் அளவில் குறைக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அவர் அந்தப் பத்தியில் கூறியிருப்பதாவது: டி20 கிரிக்கெட்டுக்கு பெரிய அளவில் ரசிகர்கள் ஆதரவு உள்ளது. இதனால் பணத்தைப் பெருக்க டி20 கிரிக்கெட்டை பெரிய அளவில் வாரியங்கள் வளர்த்து விடுகின்றன. கிரிக்கெட்டை நிதியளவில் பெரிய அளவில் டி20 உயர்த்தியது என்பதில் ஐயமில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டை புறமொதுக்கி இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது ஒருநாள் கிரிக்கெட்டை இன்று உதிர்ந்து வாடிய பூவாக்கி விட்டது. அதாவது ஆட்டத்தின் அமைப்பாக்கத்தில் டி20க்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் விகிதாச்சார அளவுப்படி மேலதிகமானது. இதனால் ஒருநாள் கிரிக்கெட் என்பது உலகக்கோப்பையை நம்பியே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. அதுவும் பிளாக்பஸ்டர் போட்டியாக பெரிய அளவில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை ஊதிவிட்டு வருகின்றனர்.
1996-ல் கனடா நாட்டின் டொராண்டோ நகரில் நடைபெற்ற தொடர் ஒன்றில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெற்ற போது நான் வர்ணனையாளர்கள் குழுவில் இடம்பெற்றிருந்தேன். அப்போது இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் நட்பு ரீதியாக ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நான் இந்த வீரர்களுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் கேட்டேன்: ஏன் இருநாடுகளுக்கும் இடையே பகை, நீங்கள் இரு அணி வீரர்களும் நன்றாகத்தானே பழகுகிறீர்கள் என்று கேட்டேன்.
அப்போது பதில் இவ்வாறு எனக்குக் கிடைத்தது, “நாங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறோம், இருவரும் ஒரே உணவைத்தான் உண்கிறோம். ஆகவே மக்கள் நன்றாக ஒருவருடன் ஒருவர் பழகுகின்றனர். அரசியல்வாதிகள்தான் பகைமையை தக்க வைக்க முயற்சிக்கின்றனர்” என்றார் ஒரு வீரர். இது வருத்தத்திற்குரியது, ஆனால் உண்மையான கூற்று. இதற்குப் பிறகே உறவுகள் மேலும் மோசமடைந்துதான் போய்விட்டது.
நன்றாக ஆடப்படும் ஒருநாள் கிரிக்கெட்டை ரசிகர்கள், வீரர்கள் என்று அனைவரும் விரும்பவே செய்வார்கள். முதலில் 60 ஓவர்களாக தொடங்கிய உலகக்கோப்பையில் 1975-ல் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் போராட்ட குணத்தை மீறியும் வெஸ்ட் இண்டீஸ் அருமையாக ஜெயித்தது. அதன் பிறகே 50 ஓவர் கிரிக்கெட்டாக மாறியது. இன்று டி20 கிரிக்கெட்டினால் மலர்ச்சியின்றி வாடிப்போயுள்ளது. டி20 பணமழை, ஸ்பான்சர்கள் உள்ளிட்ட வருவாய், வீரர்களுக்கு ஏகப்பட்ட பணம் என்று கொட்டிக் கொடுக்க ஒருநாள் கிரிக்கெட்டை சாவிலிருந்து மீட்க நிர்வாகிகள் தந்திரங்களில் ஈடுபட்டனர். பவர் ப்ளே, பவுண்டரிகளின் நீளத்தை குறைப்பது, பவுலர்களையும் பவுலிங்கையும் ஒன்றுமில்லாமல் ஆக்கும் விதிமுறைகள், பேட்டிங் பிட்ச், இது கேப்டன்களின் கற்பனை வளத்தைப் பதிலீடு செய்து கேப்டன்களின் சிந்தனையையே கட்டுப்படுத்தத் தொடங்கியது.
பவர் ப்ளே என்பது இல்லாத காலத்தில் கேப்டன்களுக்கு பெரிய சவால், களவியூகம் அமைப்பதில் அவர்களது புத்திசாலித்தனம் வெளிப்பட்டது. இப்போது ஆட்டத்தின் கண்டிஷன்கள் கேப்டன்களைக் கட்டுப்படுத்தி அவர்களை வெற்றாக்கி விட்டது. ஒரு அணியில் 2 பவுலர்கள் 10 ஓவர்கள் கட்டுப்பாடில்லாமல் அதிக ஓவர்கள் வீசலாம் என்று அனுமதிக்கலாம். இதன் மூலம் எதிரணியைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் கேப்டன்கள் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்த முடியும், ஆட்டமும் சுவாரஸ்யமடையும்.
50 ஓவர் கிரிக்கெட்டை முன்னேற்ற நிறைய வழிகள் இன்னும் உள்ளன. சிந்தனாபூர்வமாக மாற்றங்களைக் கொண்டு வந்து ஒருநாள் கிரிக்கெட்டை மீண்டும் உயிர்ப்பிக்க முடியும். ஆனால் அவை தழுவப்படவில்லை. ஒருநாள் கிரிக்கெட் உதிர்ந்த மலராக வாடி வீழ்ந்து வருகின்றது. ஆனாலும் உலகக்கோப்பை என்பது இன்றும் பெரிய அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வருகின்றது. ஆகவே 2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட்டுக்கு இன்னும் உயிர் இருப்பதை மெய்ப்பிக்கிறது. இவ்வாறு இயன் சாப்பல் எழுதியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
லிபியாவில் இந்திய தம்பதி கடத்தல்
14 Dec 2025டிரிபோலி, லிபியாவில் 3 வயது குழந்தையுடன் இந்திய தம்பதி கடத்தப்பட்டனர். போர்சுகலுக்கு செல்ல அவர்கள் முயற்சித்தபோது கடத்தப்பட்டுள்ளனர்.
-
இந்திய ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க நேபாளம் முடிவு
14 Dec 2025காத்மாண்டு, இந்திய ரூபாய் நோட்டுகளை மீண்டும் அனுமதிக்க நேபாளம் முடிவு செய்துள்ளது.
-
நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்
14 Dec 2025காத்மண்டு, நேபாளத்தில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.;
-
கவர்னரின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாதது ஏன்? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
14 Dec 2025கும்பகோணம், கவர்னர் கலந்துகொள்ளும் பட்டமளிப்பு விழாக்களில் நாங்கள் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் விளக்கமளித்துள்ளார்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
14 Dec 2025 -
ராகுலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று ஆலோசனை
14 Dec 2025சென்னை, தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்ய, தமிழகம் - புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி டெல்லியில
-
அமித்ஷா இன்று தமிழகம் வருகை
14 Dec 2025வேலூர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார். வேலூரில் கட்சி நிர்வாகிகளுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார்.
-
ஈரோட்டில் விஜய் மக்கள் பிரச்சார கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி
14 Dec 2025சென்னை, ஈரோட்டில் பெருந்துறை அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
காசாவில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸ் முக்கிய தளபதி பலி
14 Dec 2025காசா சிட்டி, காசா முனையில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா சிட்டியில் சென்ற காரை குறிவைத்து டிரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
ஜோர்டான், ஓமன் உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்
14 Dec 2025புதுடெல்லி, அரசு முறைப் பயணமாக ஜோர்டான், ஓமன் மற்றும் எத்தியோப்பியா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பயணம் மேற்கொள்கிறார்.
-
மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்: பெண்ணை அடித்துக்கொன்ற புலி
14 Dec 2025மும்பை, மகாராஷ்டிராவில் பெண்ணை புலி அடித்துக்கொன்ற சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருவனந்தபுரம் மாநகராட்சியின் புதிய மேயருக்கான பரிந்துரை பட்டியலில் ராஜேஷ், ஸ்ரீலேகா
14 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி.
-
பா.ஜ.க.-அ.தி.மு.க.வின் ஊதுகுழலாக உள்ளாா்: அன்புமணி மீது அமைச்சா் விமர்சனம்
14 Dec 2025சிதம்பரம், பா.ம.க. தலைவா் அன்புமணி தற்போது அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் ஊதுகுழலாக உள்ளாா் என அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
-
ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இரண்டு மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி
14 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவில் 2 மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
-
தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து இந்தியர் உள்பட 4 பேர் பலி
14 Dec 2025கேப்டவுன், தென் ஆப்பிரிக்காவில் கோவில் இடிந்து விழுந்த விபத்தில் இந்தியர் உள்பட 4 பேர் பலியாயினர்.
-
பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலை துணை ஜனாதிபதி வெளியிட்டார்
14 Dec 2025புதுடெல்லி, தமிழக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் நினைவு சிறப்பு தபால் தலையை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று வெளியிட்டார்.
-
நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
14 Dec 2025திருவண்ணாமலை, நமக்கு ஓட்டுப்போடாதவர்கள் கூட தி.மு.க.வுக்கு வாக்களிக்கின்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று நேற்று திருவண்ணாமலையில் நடைபெற்ற இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத
-
சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட அமெரிக்கர்கள் 3 பேர் படுகொலை: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சூளுரை
14 Dec 2025வாஷிங்டன், சிரியாவில் ராணுவ வீரர்கள் உட்பட 3 அமெரிக்கர்கள் படுகொலை சம்பவத்திற்கு நிச்சயம் பதிலடி தரப்படும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு - 9 பேர் காயம்
14 Dec 2025ரோட் ஐஸ்லாந்து, அமெரிக்காவின் ரோட் ஐஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர்
-
விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் எழுச்சிமிகு வரவேற்பு
14 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலைக்கு நேற்று வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
மெஸ்ஸி-ராகுல் காந்தி சந்திப்பு
14 Dec 2025ஐதராபாத், ஐதராபாத்தில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார்.
-
சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்
14 Dec 2025சென்னை, சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ.
-
த.வெ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு குறித்து புஸ்ஸி ஆனந்த் விளக்கம்
14 Dec 2025திருச்செங்கோடு, த.வெ.க.வின் வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மட்டும் தான் அறிவிப்பார்” என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
-
நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க. இளைஞர் அணி மட்டும்தான் துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
14 Dec 2025சென்னை, நாட்டிலேயே 5 லட்சம் நிர்வாகிகளை கொண்ட ஒரே இளைஞர் அணி தி.மு.க.இளைஞர் அணி மட்டும்தான் என்று துணை முதல்வர் உதயநிதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு: டிசம்பர் 19-ல் வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்
14 Dec 2025சென்னை, வாக்காளர் சிறப்பு திருத்தப்பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.


