எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.30 - பெப்சி தொழிலாளர்கள் ஸ்டிரைக் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதனால் பெப்சி உடையும் நிலையிலுள்ளது.
பெப்சி எனும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தில் சுமார் 23 சங்கங்கள் உள்ளன. இதன் தலைவராக டைரக்டர் அமீர் உள்ளார். இந்த அமைப்பிலுள்ள ஒவ்வொரு சங்கத்திலும் உட்கட்சி பூசல் நிறையவே உள்ளது. அது அவ்வப்போது வெடிக்கிறது.
பெப்சியில் அங்கம் வகிக்கும் கார் டிரைவர்கள் யூனியன் இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருவதால், அந்த யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று பெப்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக சங்க உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக சென்றபோது பெப்சியின் பொருளாளர் அங்கமுத்து சண்முகம் மற்றும் நிர்வாகி தனபால் ஆகிய இருவரும் தாக்கப்பட்டார்கள். இருவருக்கும் அடி-உதை விழுந்தது. இதுதொடர்பாக வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது. அத்துடன் பெப்சியின் பொதுக்குழுவை கூட்டி, டிரைவர் யூனியனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பெப்சி நிர்வாகிகளை தாக்கியதாக கூறப்படும் செந்தில் மற்றும் அவரது ஆதாரவாளர்களை கைது செய்யக்கோரி பெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இதனால் தமிழ்நாடு முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன.
லைட்மேன்கள், கேமரா உதவியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் வேலைக்கு வராததால், விஷால் நடிக்கும் பாண்டிய நாடு, கார்த்தி நடிக்கும் பிரியாணி உள்பட 40 படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகல்:
இதற்கிடையில் பெப்சி அமைப்பில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதனால் பெப்சி சங்கம் உடையும் சூழல் உருவாகியுள்ளது. டிரைவர்ஸ் யூனியன் பஞ்சாயத்து தொடர்பான பேச்சுவார்த்தை கைகலப்பில் முடிந்தது. இதனால் பெப்சி அமைப்பு நேற்று முன்தினம்ஒருநாள் ஸ்டிரைக்கில் ஈடுப்பட்டது. இதனால் சின்னத் திரைதொடர்களுக்கான படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பெப்சியில் அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சியில் இருந்து விலகுவதாக அதன் தலைவர் ராதிகா சரத்குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கு இடையில் தொடர்களை தயாரித்து வருகிறார்கள். ஆனால் சமீபகாலமாக தொழிலாளர்கள் அவர்களுக்குள் ஏற்படும் தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சின்னத்திரை படப்பிடிப்பை எந்தவித முன்னறிவுப்புமின்றி நிறுத்திவிடுகிறார்கள். இதனால் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு குறித்த நேரத்தில் ஒளிப்பரப்பு செய்ய தங்களது தொடர்களை தரமுடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். இதற்கு மேலும் எங்களது தயாரிப்பாளர்கள் சோதனைகளை தாங்க முடியாத காரணத்தினால் கர்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சின்னத்திரைகளுக்கு என்று தனிப்பட்ட தொழிலாளர்கள் அமைப்பு உள்ளது போல் தமிழ்நாட்டிலும் தொடங்குவது என ஏகமனதாக முடிவு எடுக்கப்பட்டது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெப்சி தொழிலாளர்கள் சரியாக வேலைக்கு வராததால் தயாரிப்பாளர்கள் நிறைய பேருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு பலமுறை அழைத்தும் யாரும் பேச முன்வரவில்லை. இதனால் பெப்சியில் இருந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் விலகுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சந்திப்பின்போது செயலாளர் டி.வி.சங்கர், பொருளாளர் டி.ஆர்பாலேஷ் மற்றும் சத்தியஜோதி தியாகராஜன், அழகன், தமிழ்மணி, மதி ஒளிகுமார், சோலைராஜா, ராமதாஸ் என பலர் கலந்து கொண்டனர்.
டிரைவர்ஸ் யூனியன் பிரச்னை, சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் விலகல் உள்ளிட்ட பிரச்னைகளால் பெப்சி அமைப்பு உடையும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



