எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : என்னைப் பொறுத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல" என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், “மக்களவைத் தேர்தல் களத்தில் திமுக முதன்மையான இடத்தில் இருக்கிறது. அதிமுக வெகுதூரம் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடிக்கப் போராடுகிறது. மற்ற கட்சிகள் கனவு உலகத்தில் மிதந்து கொண்டிருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்ததாவது., கடந்த சில நாட்களாக மக்களவைத் தேர்தலுக்காக களத்தில் பிரசாரம் செய்து வருகிறீர்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கணிப்பு என்ன?
17 தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையை இதுவரை முடித்துவிட்டேன். திமுக கூட்டணியே வெல்லும், சாதாரணமான வெற்றியாக அல்ல, மகத்தான வெற்றியாக அமையும் என்பது மக்களின் முகங்களில் தெரிகிறது. கடந்த மூன்றாண்டு காலமாக திராவிட மாடல் ஆட்சியானது மக்களுக்குச் செய்து கொடுத்த மகத்தான சாதனைகள் அனைத்தையும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். எந்தத் திட்டத்தின் பெயரைச் சொன்னாலும் மக்கள் கைதட்டுகிறார்கள். எனவே, 2021 சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு இருந்த ஆதரவைவிட இப்போது ஆதரவு இன்னும் அதிகமாகி இருக்கிறது.
அதேபோல், மோடி மீதான கோபமும் அதிகமாகி இருக்கிறது. மோடி என்பது போலியாகக் கட்டமைக்கப்பட்ட பிம்பம் ஆகும். அந்தப் பிம்பம் உடைந்து வருகிறது. கடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழகத்தில் மோடி வெற்றி பெறவில்லை. அதைப் போலவே இந்தத் தேர்தலில் அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்ற உறுதி மக்களிடம் இருப்பதைப் பார்க்கிறேன்.
தமிழுக்கும், தமிழினத்துக்கும், தமிழகத்துக்கும் தொடர்ந்து துரோகம் இழைப்பதையே தொழிலாகச் செய்து வரும் பாஜகவை வீழ்த்தும் உறுதி மக்களிடம் இருக்கிறது. அந்த பாஜகவின் பாதம்தாங்கியாக இருந்து துரோகம் இழைத்தவர் பழனிசாமி. இன்றைய தினம் பாஜக போட்டுத்தந்த திட்டத்தின்படியே தனி அணியை உருவாக்கி சதிநாடகம் போட்டு வருகிறார் பழனிசாமி. இதையும் மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இந்த இரண்டு அணியையும் மக்கள் ஒருசேர வீழ்த்தத் தயாராகி விட்டார்கள்.”
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, இந்தத் தேர்தல் நெருக்கத்தில் கைது செய்ததன் நோக்கம் என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
“மோடியின் தோல்வி பயம்தான் அவரைத் தவறுக்கு மேல் தவறு செய்ய வைக்கிறது. 370 இடம் பிடிப்போம், 400 இடம் பிடிப்போம் என்பவர் எதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை, அதிலும் குறிப்பாக மாநில முதலமைச்சர்களைத் தேர்தல் நேரத்தில் கைது செய்ய வேண்டும்? இந்தியா கூட்டணிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வரமாட்டார் என்று பாஜக நினைத்தது. கடைசி வரைக்கும் இருக்க மாட்டார் என்று நினைத்தார்கள்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சுமுகமாக முடித்து விட்டார் கெஜ்ரிவால். வடக்கில் உள்ள மாநிலங்களில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி அணியானது வலுவாக அமைந்துவிட்டது. இங்கெல்லாம் போய் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தால் பாஜக ஒரு சில தொகுதிகளைக் கூட கைப்பற்ற முடியாது என்பதே கள நிலவரம். அவரை பிரசாரம் செய்ய விடாமல் தடுக்கவும், அவரது இமேஜை உடைக்கவும் இதனைச் செய்துள்ளார்கள்.
உண்மையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் செல்வாக்கு, அவரது கைதுக்குப் பிறகு மிக மிக அதிகமாகி விட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது, பாஜக ஆதரவாளர்களையே மனமாற்றம் செய்துள்ளது. 'இது அடக்குமுறை ஆகும்' என்று அவர்களே சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். நடுநிலை வாக்காளர்களையும் இது யோசிக்க வைத்துள்ளது. அவரைக் கைது செய்தது தவறு என்று பாஜக மேலிடத் தலைவர்களே தங்களுக்குள் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள்.
இந்தக் கைதுக்கு பிறகு வடமாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு வெகுவாக சரிந்துவிட்டது. சிறையில் இருந்தபடி ஆட்சி நடத்தும் அவரின் நெஞ்சுரத்தை நான் பாராட்டுகிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக என்றும் துணை நிற்கும்.”
இந்த 10 ஆண்டு கால மோடி ஆட்சி குறித்த உங்கள் கருத்து என்ன?
“குஜராத் மாநிலத்தை வளப்படுத்தி விட்டதாகப் பொய்யான பிம்பத்தைக் காட்டி மோடியை 2014 தேர்தலில் வளர்ச்சியின் நாயகனாக அறிமுகம் செய்தது பாஜக. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசினார் மோடி. அந்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்டு ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரப்போவதாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்தார்கள். அதுதான் அவர்களை வெற்றி பெற வைத்தது.
ஆட்சிக்கு வந்ததும் அனைவரும் வங்கிக் கணக்கை தொடங்குங்கள் என்று சொல்லி ஏமாற்றினார்கள். அதை அந்த மக்கள் நம்பினார்கள். 'இது ஜூம்லா' என்று இப்போது கூச்சமே இல்லாமல் சொல்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. வளர்ச்சியின் நாயகனாகத் தன்னைக் கட்டமைத்துக் கொண்ட மோடி, இந்தப் பத்தாண்டு காலத்தில் எதையும் வளர்க்கவில்லை. தன்னுடைய தனிமனித பிம்பத்தை வளர்த்திருக்கிறார். சொல்லிக் கொள்ள அவரிடம் எந்த சாதனையும் இல்லை.
மோடியால் சிதைக்கப்பட்ட பட்டியல்தான் அதிகம். மாநிலங்களைச் சிதைத்தார், இந்தியப் பொருளாதாரத்தைச் சிதைத்தார், இந்திய அமைதியைக் குலைத்தார். இப்படி சமூக அரசியல் பொருளாதாரத்தின் அனைத்துப் பக்கத்தையும் சிதைத்துவிட்டார். இனி அவர் சிதைக்க ஏதுமில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் சிதைக்க நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இந்தத் தேர்தலில் வென்றால் அவர் செய்வதற்கு இது ஒன்றுதான் பாக்கி இருக்கிறது. என்னைப் பொருத்தவரையில் மோடி வெற்றி பெறுவது இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கே நல்லதல்ல. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.