எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் பேட்ஸ்மேனாக போற்றப்படுகிறார். கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகள் படைத்து வரும் இவர் பல இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக உள்ளார். களத்தில் இவர் காட்டும் ஆக்ரோஷத்தின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இந்நிலையில் இவரது புகழை சிறப்பிக்கும் விதமாக உலக பாரம்பரிய தினத்தை (ஏப்ரல் 18) முன்னிட்டு மெழுகால் ஆன விராட் கோலியின் முழு உருவ சிலையை நிறுவவுள்ளதாக ஜெய்ப்பூர் அருங்காட்சியகம் அறிவித்துள்ளது. விராட் கோலியின் உருவ சிலையை நிறுவ குழந்தைகளும் இளைஞர்களும் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 35 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
______________________________________________________
டோனிக்கு ரகானே புகழாரம்
டோனி இருப்பதால் அனைத்து மைதானங்களிலும் தங்களுக்கு சொந்த மைதானத்தைப் போன்ற ஆதரவு கிடைப்பதாக ரகானே கூறியுள்ளார். அத்துடன் 2011-ல் இந்தியாவுக்காக அறிமுகமானபோது என்ன சொன்னாரோ அதே ஆலோசனையை சென்னை அணிக்காக அறிமுகமானபோதும் டோனி தம்மிடம் கூறியதாக தெரிவிக்கும் ரகானே இது பற்றி பேசியது பின்வருமாறு:- "எங்கே பயணம் செய்தாலும் மஹி பாய் எனும் ஒரே ஒருவரால் நாங்கள் சொந்த மண்ணில் விளையாடுவது போன்ற சூழ்நிலையை பெறுகிறோம். அது அற்புதமான உணர்வு. அவருடன் சேர்ந்து விளையாடும்போது உங்களால் ஒரு வீரராகவும் மனிதராகவும் நிறைய கற்றுக் கொள்ள முடியும். தற்போது பல மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் சி.எஸ்.கே. அணியில் விளையாடுகின்றனர். அந்த சூழ்நிலை மிகவும் சிறப்பாக உள்ளது.
2011-ல் மான்செஸ்டரில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான நான் பயிற்சியை முடித்தேன். அப்போது என்னிடம் வந்த டோனி "இத்தனை நாட்களாக எப்படி விளையாடினீர்களோ அதே ஆட்டத்தை இப்போதும் களத்திற்கு சென்று வெளிப்படுத்துங்கள்" என்று சொன்னது இன்று வரை என்னுடன் ஒட்டிக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் சி.எஸ்.கே. அணியிலும் "உங்களுடைய ஆட்டத்தை மட்டும் விளையாடுங்கள். எந்த அழுத்தத்தையும் சேர்க்காதீர்கள்" என்று அதே வார்த்தையைத்தான் அவர் என்னிடம் சொன்னார். அந்த வகையில் மிகவும் எளிமையாக இருந்து ஒவ்வொருவருக்கும் ஆதரவு கொடுப்பதாலேயே அவர் மகத்தானவராக போற்றப்படுகிறார்" என்று கூறினார்.
______________________________________________________
அவரை அடித்திருப்பேன்: ஹர்பஜன்
லக்னோவுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா 22 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஒரு கட்டத்தில் மிகச் சிறப்பாக விளையாடி வந்த அவர் பவர்பிளே முடிந்ததும் ரவி பிஷ்னோய் ஓவரில் தேவையில்லாத ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தது அந்த அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது இந்த இன்னிங்ஸை கடுமையாக விமர்சித்துள்ள ஹர்பஜன் சிங் கூறுகையில்.,
களத்தில் ப்ரித்வி ஷா என்ன செய்து வருகிறார் என்பதை அனைவரும் கவனிக்க வேண்டும். நான் மட்டும் டெல்லி அணியின் நிர்வாகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் பிரித்வி ஷாவை அடித்திருப்பேன். ஏனெனில் ஒரு நல்ல இன்னிங்ஸ் ஆரம்பிக்கும்போது அதனை பெரிய இன்னிங்சாக மாற்ற வேண்டும். அதை விட்டுவிட்டு தேவையில்லாத ஷாட்டை விளையாட வேண்டிய அவசியமே கிடையாது. எப்போதுமே அவர் நன்றாக பேட்டிங் செய்யும்போது ஒரு மோசமான ஷாட்டை விளையாடி ஆட்டமிழப்பதை வழக்கமாக வைத்துள்ளார். அதனை ப்ரித்வி ஷா மாற்றிக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
______________________________________________________
ஆஸி., வீரர் குறித்து கோலி
கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக களமிறங்கினார். ஆனால் அப்போட்டியில் கோலி சந்தித்த முதல் பந்தையே மிட்செல் ஜான்சன் பவுன்சராக வீசினார். இளம் வீரராக இருந்த விராட் கோலி அதை சரியாக கணிக்கத் தவறி தலையில் அடி வாங்கி கீழே விழுந்தார்.இந்நிலையில் அப்போட்டியில் ஜான்சன் வீசிய பவுன்சரால் தம்முடைய ஒரு கண் பார்வை மங்கும் அளவுக்கு கலங்கிப்போனதாக விராட் கோலி தெரிவித்துள்ளார். அதனால் எவ்வளவு தைரியம் இருந்தால் இவர் என்னை அடிப்பார் என்ற வெறியுடன் மீண்டும் பேட்டிங் செய்து ஜான்சனுக்கு பதிலடி கொடுத்ததாக தெரிவிக்கும் விராட் கோலி இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.:- "அந்த சுற்றுப்பயணத்தின் முதல் போட்டியின் முதல் பந்திலேயே ஜான்சன் என்னுடைய தலையில் அடித்தார். அதை என்னால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.
அந்த தொடரில் இப்படி விளையாடுவோம் அப்படி பேட்டிங் செய்வோம் என்று 2 மாதங்களாக நான் கனவு கண்டு வைத்திருந்தேன். ஆனால் முதல் பந்திலேயே தலையில் அடி வாங்கியதால் என்னுடைய மொத்த திட்டத்தையும் மாற்றினேன். அந்த அடியால் எனது இடது கண் வீங்க தொடங்கியதால் பார்வை குறைய துவங்கியது. அதை நான் அப்போது கவனிக்கவில்லை. இருப்பினும் உணவு இடைவெளிக்கு முன் அவ்வாறு நடந்ததற்காக நான் நன்றியுடையவனாக இருக்கிறேன். ஏனெனில் அதன் காரணமாக சண்டையிட வேண்டும் அல்லது விமானத்தில் வீடு திரும்ப வேண்டும் என்ற 2 விருப்பங்கள் மட்டுமே என்னிடம் இருந்தன. அப்போது "என் தலையில் அடிக்க அவருக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்? இவரை நான் அடித்து நொறுக்குவேன்" என்பதே என்னுடைய ரியாக்சனாக இருந்தது. கடைசியில் அதையே செய்தேன்" என்று கூறினார்.
______________________________________________________
தோல்வி குறித்து கே.எல்.ராகுல்
டெல்லிக்கு எதிரான போட்டியில் தோல்வி குறித்து லக்னோ அணியின் கே.எல் ராகுல் கூறுகையில்., "இந்த போட்டியில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் வரை குறைவாக அடித்து விட்டோம். நல்ல துவக்கம் இருந்தும் எங்களால் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் போனது. 180 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றிக்கு போதுமான ஸ்கோராக இருந்திருக்கும். இந்த மைதானத்தில் உள்ள தன்மையை பயன்படுத்தி குல்தீப் யாதவ் எங்கள் அணியின் முக்கிய வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்க வைத்துவிட்டார்.
அதேபோன்று டெல்லி அணி சார்பாக ஜேக் பிரேசர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அனைத்து பந்துகளையும் அவர் அடித்து ஆடவே நினைத்தார். அவரது இந்த இன்னிங்ஸ் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேபோன்று பவர்பிளேவிலேயே வார்னர் விக்கெட்டை நாங்கள் வீழ்த்தி விட்டோம். மேலும் பவர்பிளேவிற்கு பிறகு இரண்டாவது விக்கெட்டையும் வீழ்த்தி விட்டோம். ஆனால் ரிஷப் பண்ட் மற்றும் ஜேக் பிரேசர் ஆகியோர் சிறப்பான பாட்னர்ஷிப் அமைத்து எங்களிடம் இருந்து ஆட்டத்தை பறித்தனர். ஜேக் பிரேசர் கேட்சை தவறவிட்டது பெரிய இழப்பாக மாறியது" என்று கூறினார்.
______________________________________________________
அரையிறுதியில் ஜோகோவிச், ரூட்
களிமண் தரை போட்டியான மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்துவருகிறது. இதில் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலிய வீரர் டி மினாருடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-4 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் அரையிறுதியில் ஜோகோவிச், நார்வே வீரர் காஸ்பர் ரூடுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் சிட்சிபாஸ், சின்னருடன் மோதுகிறார்.
______________________________________________________
இந்தியா ஒயிட்வாஷ் ஆகி ஏமாற்றம்
இந்திய ஹாக்கி அணி ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றிருந்தது. முதல் நான்கு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா 1-5, 2-4, 1-2, 1-3 எனத் தோல்வியடைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்று எப்படியாவது ஒயிட்வாஷ் ஆவதை தடுக்க இந்தியா முயற்சித்தது. இருந்த போதிலும் 2-3 எனத் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தது.
ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் இந்திய அணி கேபடன் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியா 20-வது, 38-வது மற்றும் 53-வது நிமிடத்தில் அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்தது. 53-வது நிமிடத்தில் பாபி சிங் தாமி ஒரு கோல் அடித்தார். அதன்பின் இந்திய வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 எனத் தோல்வியைத் தழுவியது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நெருங்கும் நேரத்தில் இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. என்றபோதிலும் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
மு.க.முத்து உடல்நலக்குறைவால் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி
19 Jul 2025சென்னை : “என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அண்ணன் மு.க.முத்து.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
அகமதாபாத் விமான விபத்து செய்தி: சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கண்டனம்
19 Jul 2025வாஷிங்டன் : ஏர் இந்தியா விமான விபத்து செய்தி விவகாரத்தில் சர்வதேச ஊடகங்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்காவில் கூட்டத்தில் புகுந்த கார்: 5 பேர் படுகாயம்
19 Jul 2025லாஸ் ஏஞ்சல்ஸ் : அமெரிக்காவில் கிழக்கு ஹாலிவுட் பகுதியில் கூட்டத்தில் புகுந்த கார் ஏற்படுத்திய விபத்தில் 20 பேர் காயம் அடைந்தனர்.
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
தங்கம் விலை மேலும் உயர்வு
19 Jul 2025சென்னை : தங்கம் விலை நேற்றும் உயர்ந்து விற்பனையானது.
-
வேளாங்கண்ணி பேராலயத்தில் இ.பி.எஸ். சிறப்பு பிரார்த்தனை
19 Jul 2025வேளாங்கண்ணி : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் எடப்பாடி பழனிசாமி மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
19 Jul 2025சென்னை : தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வரும் 22ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
19 Jul 2025தருமபுரி : ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
19 Jul 2025நாகை : கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
-
இந்தியா - பாகிஸ்தான் மோதலின் போது சுட்டு வீழ்த்தப்பட்ட 5 ஜெட் விமானங்கள் அதிபர் ட்ரம்ப் கருத்தால் பரபரப்பு
19 Jul 2025வாஷிங்டன், இந்தியா - பாக். மோதலின் போது 5 ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
19 Jul 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில், அந்நாட்டு பயங்கரவாதத் தடுப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
இ.பி.எஸ். தானாக பேசவில்லை; யாரோ அவரை பேச வைக்கிறார்கள் : திருமாவளவன் விமர்சனம்
19 Jul 2025சென்னை : 'இ.பி.எஸ்., அவராக பேசவில்லை. அவரை இவ்வாறு யாரோ பேச வைக்கிறார்கள்'' என திருமாவளவன் தெரிவித்தார்.
-
சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்
19 Jul 2025சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
நீலகிரியில் கனமழை: சுற்றுலா தலங்கள் மூடல்
19 Jul 2025ஊட்டி : கனமழை காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன்பாரஸ்ட், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
40 பி. டாலரை தாண்டிய ஏற்றுமதி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
19 Jul 2025ஐதராபாத், இந்தியாவின் ஏற்றுமதி மதிப்பு 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.