எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை. 13 - உணவு பாதுகாப்பு சட்த்தில் 10 திருத்தங்களை செய்யும்படி சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் வலியுறுத்தி உள்ளார். மத்திய அரசு உணவு பாதுகாப்பு அவசர சட்டத்தை சமீபத்தில் கொண்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், இச்சட்டம் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று தெரிவித்திருந்தார். டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்த முலாயம்சிங், சுமார் 30 நிமிடங்கள் சந்தித்து பேசினார். அப்போது அவசர சட்டத்தில் 10 திருத்தங்களை செய்யும் படி அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
பிரதமரை சந்தித்து விட்டு வெளியே வந்த முலாயம்சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், உணவு பாதுகாப்பு மசோதா மட்டுமல்ல, வேறு சில அரசின் செயல்பாடுகளையும் நாங்கள் ஏற்கனவே விமர்சித்துள்ளோம். உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்கு விவசாயிகளிடம் அதிகளவில் உணவு தானியங்களை குறைந்தபட்ச விலையில் அரசு கொள்முதல் செய்யும் அபாயம் உள்ளது என்றார்.
மத்திய அரசுக்கு இதே போல பல சந்தர்ப்பங்களில் முலாயம்சிங் மிரட்டல் விடுத்தாலும் மிகவும் இக்கட்டான தருணங்களில் அவர் அரசை காப்பாற்றி உள்ளார். முலாயம்சிங் மீதான வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து குவித்த வழக்கு இம்மாதம் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தால் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 67 சதவீத மக்கள் பலன் பெறுவர். அவர்களுக்கு 5 கிலோ அரிசி ரூ. 3 விலையிலும், கோதுமை ரூ. 2 விலையிலும், பிற தானியங்கள் ரூ. 1 விலையிலும் கிடைக்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு புகழேந்தி ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு அறிவிப்பு
13 Mar 2026சென்னை, வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
13 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.
-
அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்
13 Mar 2026சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.
-
ஜல் ஜீவன் திட்ட நிலுவை நிதி ரூ.3,112 கோடியை உடனே விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடிய
-
சட்டசபை தொகுதிப் பங்கீடு: இ.பி.எஸ். - டி.டி.வி.தினகரன் ஆலோசனை?
13 Mar 2026சென்னை, கூட்டணி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.
-
பொய் வாக்குறுதிகளை விற்கும் கடை: அசாமில் காங்கிரஸ் கட்சி மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்
13 Mar 2026டெல்லி, காங்கிரஸ் கட்சி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே தருவதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
-
வார ராசி பலன்கள்
14 Mar 2026


