எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
டெல்லி : 2011-ஆம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் பதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
டிசம்பர் 1964 -ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியில் பாம்பன்-தனுஸ்கோடி பயணிகள் ரெயில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணம் செய்த 126-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர்.
கடந்த 1981ஆம் ஆண்டு நாட்டின் மிக மோசமான மற்றும் உலகின் இரண்டாவது பெரிய ரெயில் விபத்து பீகாரில் நடந்தது. பீகார் மாநிலம் பாலகோட்டில் வீசிய சூறாவளிக் காற்றில் சிக்கிய பயணிகள் ரெயில் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. 9 பெட்டிகளுடன் பயணிகள் நெரிசலில் சென்ற ரெயிலின் 7 பெட்டிகள் பாக்மதி ஆற்றில் தடம் புரண்டு கவிழ்ந்தது. நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்தில் ஏறத்தாழ 800 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது.
1981 ஆம் ஆண்டில் வாணியம்பாடியில் 3 பயணிகள் ரெயில்கள் ஒரே பாதையில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.
1988 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி கேரளாவில் உள்ள அஷ்டமுடி ஏரியின் மீதுள்ள பெருமான் பாலத்தில் ரெயில் தடம் புரண்டு தண்ணீரில் விழுந்ததில் 105 பேர் உயிரிழந்தனர்.
1995 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் அருகே நின்று கொண்டிருந்த காளிந்தி எக்ஸ்பிரஸ் மீது டெல்லி செல்லும் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 358 பயணிகள் உயிரிழந்தனர்.
1998 ஆம் ஆண்டு கொல்கத்தா செல்லும் ஜம்மு தாவாய்-சீல்டா எக்ஸ்பிரஸ், பஞ்சாபின் வடக்கு ரெயில்வேயின் கன்னா-லூதியானா பிரிவில் அமிர்தசரஸ் செல்லும் எல்லைப்புற கோல்டன் டெம்பிள் மெயிலின் தடம் புரண்ட 6 பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 212 பேர் உயிரிழந்தனர்.
1999 ஆம் ஆண்டு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 310 மைல் தொலைவில் உள்ள கைசல் அருகே இரண்டு அதிவேக ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியது. அப்போது இரண்டு ரெயில்களில் 2500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். விபத்தில் இரண்டு ரெயில்களில் பயணித்த சுமார் 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
2002-ஆம் ஆண்டு இந்தியாவின் அதிவேக ரெயிலான ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரஃபிகஞ்ச் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 140 பயணிகள் உயிரிழந்தனர்.
2005- ஆம் ஆண்டு தெலுங்கானாவில் உள்ள ஒரு சிறிய ரெயில் பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. பாலத்தின் சேதமடைந்த பகுதி அருகே சென்றபோது டெல்டா பாஸ்ட் பாசஞ்சர் ரெயில் தடம் புரண்டு 114 பேர் இறந்தனர்.
2010-ஆம் ஆண்டு மேற்கு மிட்னாபூரில் உள்ள கெமாஷூலி மற்றும் சர்திஹா அருகே மும்பை நோக்கிச் சென்ற ஹவுரா குர்லா லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ரெயில் மீது மோதி சுமார் 148 பேர் உயிரிழந்துள்ளனர்.
2011-ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் அருகே கல்கா மெயில் ரெயில் தடம் புரண்டதில் 70 பேர் உயிரிழந்தனர்.
2016 -ஆம் ஆண்டு இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் கான்பூர், புக்ராயன் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 150 பேர் உயிரிழந்தனர்.
2017-ஆம் ஆண்டு தெற்கு ஆந்திராவில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் 41 பேர் உயிரிழந்தனர்.
2018-ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் நடந்த ரெயில் விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
2023-ஆம் ஆண்டு ஒடிசாவில் பாலசோர் பகுதியில் நடந்த ரெயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


