எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தேசிய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரியை ஆளும் கூட்டணி அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி மாநிலத்தில் ஆட்சி நடத்தும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசானது, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு பெறுவதில் தேசிய மருத்துவ ஆணையத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்த மட்டில் 4 நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களும் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் உள்ள நிலையில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் பல்கலைக்கழகங்கள் மாநில அரசுக்கு வழங்கி வந்த அரசின் இடஒதுக்கீட்டை முழுமையாக மறுத்து, அரசுக்கு ஒரு இடம் கூட வழங்கப்படுவதில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுச்சேரி மாநிலத்தில் தற்போது இயங்கி வரும் மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் மொத்தம் 650 மருத்துவ இடங்கள் இருப்பதாகவும், தேசிய மருத்துவக் கவுன்சிலின் ஆணைப்படி குறைந்தது 50 சதவீத இடங்களை அரசின் இடஒதுக்கீடாக அரசு பெற வேண்டும்.
புதுச்சேரியில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அரசும், தற்போதுள்ள என்.ஆர். காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசும், ஆண்டுதோறும் மனம்போன போக்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் கொடுக்கும் குறைந்த இடங்களை மட்டுமே அரசின் இடஒதுக்கீடாக பெற்று, ஆண்டுதோறும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் உரிமையாளர்கள் பயன்பெறும் விதத்தில் ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வருவதாக புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் எனது தலைமையிலான அம்மா ஆட்சியின்போது, அரசு பள்ளிகளில் படித்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதன்மூலம் ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயிலும் பொன்னான வாய்ப்பினைப் பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி மாநிலத்திலும் இதுபோன்ற சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, மாநில அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்திலும், சட்டமன்றத்திற்கு வெளியிலும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் விளைவாக, புதுச்சேரி அரசானது இச்சட்டத்தை அமல்படுத்தியது.
அதன்படி, உள் இடஒதுக்கீடு பெறக்கூடிய மாணவர்கள் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படிக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது. 12 ஆண்டுகள் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டும் இச்சட்டத்தின் பயன்கிடைக்கும் சூழ்நிலை உள்ளதால், இச்சட்டத்தின் மூலம் 10 சதவீத இடஒதுக்கீட்டை அரசுப் பள்ளி மாணவர்களால் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரியை ஆளும் கூட்டணி அரசைக் கண்டித்தும் இந்த ஆண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வலியுறுத்தியும் தமிழகம் போன்று, அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ள மாணவர்கள், மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளியின் இட ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலத்தின் சார்பில், இன்று காலை 10 மணியளவில், பழைய பஸ் நிலையம், பேரறிஞர் அண்ணாசிலை அருகில், புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன், தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், தொண்டர்களும பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புதுச்சேரி மாநில அரசை கண்டித்து நடைபெற உள்ள இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


