எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது; திறன்மிகு இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்; இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலின் 200ம் ஆண்டு விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சுவாமி நாராயணன் கோயில் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய கலாச்சாரத்தின் தொடர் ஓட்டத்திற்கு இது ஒரு சான்று. சுவாமி நாராயண் கோயிலின் ஆன்மிக உணர்வை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இந்த மகத்தான நிகழ்வை ஒட்டி ரூ.200 வெள்ளி நாணயம் மற்றும் நினைவு முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வளர்ந்த இந்தியாவுக்கான அடிப்படை, நமது நாடு தற்சார்பு கொண்டதாக மாற வேண்டும் என்பதே. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்தியா தற்சார்பு அடைவதை நாமே உறுதி செய்ய வேண்டும்; நாட்டின் 140 கோடி மக்களே இதை செய்ய வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை என்பது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான முக்கியமான முயற்சி. துரதிர்ஷ்டவசமாக இன்று சிலர் தங்களின் குறுகிய புரிதலின் காரணமாக இதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகின்றனர்.
சமூகத்தை சாதி, மதம், மொழி, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், கிராமம் எனப் பிரிக்கும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சியின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்வதும், நெருக்கடியைப் புரிந்துகொள்வதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவசியம். வலிமையான, திறமையான, படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். திறமையான இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலமாக மாற வேண்டும். இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது. உலக தலைவர்கள் பலரை நான் சந்திக்கும்போது அவர்கள் கூறுவது, திறமையான இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய முன்வர வேண்டும் என்பதைத்தான். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதை எதிர்பார்க்கிறார்கள். இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது. இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.



