எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது ரூ.8 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டது
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, நாள்தோறும் 5,900 டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் திகழ்ந்திடும் வகையில் அனைத்து போக்குவரத்து மற்றும் உட்புறச் சாலைகள், பேருந்து நிறுத்தங்கள், பூங்காக்கள், மயானபூமிகள், மேம்பாலங்கள், மேம்பாலங்களின் கீழ் உள்ள பகுதிகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குப்பைகள், கட்டிட கழிவுகள், சுவரொட்டிகள் மற்றும் அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரமாக கட்டிட கழிவுகளை அகற்றும் தூய்மைப் பணியானது மாண்புமிகு மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்களால் கடந்த மாதம் 7-ம் தேதி அன்று தொடங்கி வைக்கப்பட்டது. அதனடிப்படையில், கடந்த மாதம் 7-ம் தேதி முதல் கடந்த மாதம் 16-ம் தேதி வரை தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களிலும், இரண்டாம் கட்டமாக கடந்த மாதம் 17-ம் தேதி முதல் திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 8 மண்டலங்கள் உட்பட அனைத்து 15 மண்டலங்களிலும் தீவிரமாக கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளுக்காக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 101 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கடந்த 07.01.2025 முதல் 06.02.2025 வரை மண்டலம் 1 முதல் மண்டலம் 8 வரையிலான வடக்குப் பகுதிகளில் 13,142.86 டன் கட்டிட கழிவுகளும், மண்டலம் 9 முதல் 15 வரையிலான தெற்குப் பகுதிகளில் 11,820.04 டன் கழிவுகளும் என மொத்தம் 24,963 டன் கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தக் கழிவுகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் மறுசுழற்சிக்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் கட்டிட கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் சராசரியாக 1000 டன் வரையிலான கட்டிட கழிவுகள் தினசரி அகற்றப்படுகிறது. ஒரு டன் வரையிலான கழிவுகள் மாநகராட்சியின் சார்பில் கட்டணமின்றி அகற்றப்படும். ஒரு டன் முதல் 20 டன் வரையிலான கட்டிட கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும், 20 டன் மேலான பெருமளவில் கட்டிட கழிவுகளை உருவாக்குபவர்களுக்கும் கட்டணம் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் தனியாக உருவாக்கப்பட்டு வருகிறது. இதனைப் பின்பற்றி கட்டிட கழிவுகள் அகற்றப்படும். சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை சாலைகள், நீர்நிலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கொட்டுபவர்கள் மீது ரூ.5000 அபராதக் கட்டணமும், காவல்துறையின் மூலம் உரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். கடந்த 01.01.2025 முதல் 31.01.2025 வரையிலான ஒரு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகள் கொட்டியவர்கள் மீது கண்காணிப்புப் படையினரால் ரூ.8,06,000 அபராதம் விதிக்கப்பட்டும், வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது மற்றும் தங்கள் சுற்றுப்புறங்களில் உள்ள கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகளை அகற்ற வேண்டுமெனில் மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன் மீது மாநகராட்சியின் சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டிட மற்றும் இடிபாட்டுக் கழிவுகள் அகற்றப்படும். பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியினை சுத்தமாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-07-2025.
21 Jul 2025 -
திடீர் உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி
21 Jul 2025திருப்பூர், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாடகள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதை அடு
-
சட்டமும், நீதியும் விமர்சனம்
21 Jul 2025சாதாரண நோட்டரி புகார்களை டைப் செய்யும் வழக்கறிஞர் சரவணனிடம் உதவியாளராக சேர நம்ரிதா முயற்சிக்க, அதை சரவணன் நிராகரிக்கிறார். அப்போது கடத்தப்பட்ட தன் மகளுக்கு நீதி க
-
கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்
21 Jul 2025திருவனந்தபுரம், கேரள முன்னாள் முதல்வர் அசசுதானந்தன் நேற்று காலமானார்.
-
முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் நடிகர் ரஜினி
21 Jul 2025சென்னை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நடிகர் ரஜினிகாந்த் நலம் விசாரித்தார்.
-
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு
21 Jul 2025சென்னை, முன்னாள் எம்.பியும், அ.தி.மு.க.
-
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
21 Jul 2025சிவகாசி : சிவகாசி அருகே நேற்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
-
யாதும் அறியான் திரை விமர்சனம்
21 Jul 2025காதலர்களான தினேஷ் மற்றும் பிரானா இவர்களது நண்பர் அவரது காதலி என இரண்டு ஜோடிகள் வனப்பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு செல்கிறார்கள்.
-
இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து நிதீஷ், அர்ஷ்தீப் விலகல்
21 Jul 2025மான்செஸ்டர் : காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியிலிருந்து நிதீஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங் விலகியுள்ளனர்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் வீடு திரும்புவார்: அமைச்சர் துரைமுருகன்
21 Jul 2025சென்னை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார், விரைவில் வீடு திரும்புவார் என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
-
ஒபாமா கையில் விலங்கு: அதிபர் ட்ரம்ப் பகிர்ந்த ஏ.ஐ. வீடியோ...!
21 Jul 2025நியூயார்க், ஒபாமா கையில் விலங்கு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டது போன்ற ஏ.ஐ. வீடியோவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்துக்கு 200 எம்.பி.க்கள் ஆதரவு
21 Jul 2025புதுடில்லி : பணம் மூட்டை சிக்கிய விவகாரத்தில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய 200-க்கும் மேற்பட்ட எம்.பி.,க்கள் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வர மனுத்தாக
-
முன்னாள் எம்.பி அன்வர்ராஜா தி.மு.க.வில் இணைந்தார்
21 Jul 2025சென்னை : அ.தி.மு.க. முன்னாள் எம்.பி அன்வர் ராஜா முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
பன் பட்டர் ஜாம் திரை விமர்சனம்
21 Jul 2025கல்லூரி மாணவரான நாயகன் ராஜு, தோழி பவ்யாவை காதலிக்கிறார்.
-
டிரெண்டிங் திரை விமர்சனம்
21 Jul 2025யூடியுப் சேனல் ஒன்றை கலையரசன் - பிரியாலயா தம்பதி நடத்தி வசதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
-
ராசி மணலில் அணை: விவசாயிகளின் கோரிக்கைக்கு எடப்பாடி பழனிசாமி ஆதரவு
21 Jul 2025திருவாரூர் : ராசி மணலில் அணை கட்டினால் 62 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அ.தி.மு.க.
-
சென்ட்ரல் திரை விமர்சனம்
21 Jul 2025நாயகன் விக்னேஷ், தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்பதற்காக 12ம் வகுப்பு தேர்வு முடிந்ததும், இரண்டு மாத விடுமுறையில் வேலை செய்ய சென்னைக்கு சென்று அங்கு ஒரு நூற்பாலை
-
இஸ்ரேல் தாக்குதல்: காசாவில் 115 பேர் பலி
21 Jul 2025காசா சிட்டி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 115 பேர் உயிரிழந்தனர்.
-
எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுப்பு: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
21 Jul 2025புதுடெல்லி, மக்களவையில் எதிர்க்கட்சியினருக்கு பேச அனுமதி மறுக்கப் படுவதாக ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
6.2 ரிக்டர் அளவில் அலஸ்காவில் நிலநடுக்கம்
21 Jul 2025வாஷிங்டன், அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்லி உயர்நீதிமன்றத்தில் 6 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
21 Jul 2025டெல்லி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆறு புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். இதையடுத்து நீதிபதிகளின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
-
விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய பாரபட்சமற்ற விசாரணை: பார்லி.யில் அமைச்சர் தகவல்
21 Jul 2025புதுடெல்லி, அகமதாபாத் விமான விபத்துக்கான காரணத்தை அறிய பாரபட்சமற்ற முறையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன
-
மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 12 குற்றவாளிகளையும் விடுதலை செய்து மும்பை ஐகோர்ட் உத்தரவு
21 Jul 2025மும்பை, 2006ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பேர் உட்பட 12 பேரையும் மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
-
பிளாக் மெயில் படம் பேசப்படும் - ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை
21 Jul 2025ஜி.வி.பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில் ஜெ.டி.எஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மு. மாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’பிளாக்மெயில்’.
-
அந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன்: ஹர்பஜன்
21 Jul 2025மும்பை : ஸ்ரீசாந்தின் கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக 200 முறை மன்னிப்பு கேட்டேன் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.