எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்திய அணிக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடுகளில் ஒன்று தங்களுக்கென பிரத்யேக சமையல் கலைஞர்களை உடன் அழைத்து வரக்கூடாது என்பதாகும். தற்போது உடற்தகுதிக்கு பலரும் முக்கியத்துவம் அளித்து வருவதால் தங்களுக்கு என தனி உணவு, அதை ஏற்பாடு செய்ய தனி சமையல் கலைஞர்கள் என சில வீரர்கள் வைத்திருந்தனர். ஆனால் தற்போது இந்திய வீரர்கள் நிர்வாகம் ஏற்பாடு செய்யும் உணவுகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தனியாக உனக்கென சமையல் ஆட்களை வைத்திருக்கக் கூடாது என்று பி.சி.சி.ஐ. உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் விராட் கோலி தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு அதற்கேற்ற உணவுகளை எடுத்துக் கொள்வதற்காக அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார். அந்த வகையில் தனக்கென பிரத்தியேகமாக சமையல் கலைஞர்களை அழைத்து வராமல் துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனக்கு ஏற்றவாறு உணவுகளை சமைக்க சொல்லி அதனை இந்த தொடர் முழுவதும் டெலிவரி செய்யும் வகையில் ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அவரது அந்த கோரிக்கையை ஏற்ற ஓட்டல் நிர்வாகமும் அவருக்கு உணவினை சரியான முறையில் டெலிவரி செய்து வருகிறது.
_____________________________________________________________________________________
விதர்பா 308 ரன்கள் குவிப்பு
ரஞ்சி கோப்பை அரையிறுதி போட்டி ஒன்றில் மும்பைக்கு எதிராக முதல் நாளில் விதர்பா 5 விக்கெட் இழப்புக்கு 308 ரன்கள் குவித்துள்ளது. 90-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்குகிறது. 32 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரில் லீக் மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்களின் முடிவில் குஜராத், கேரளா, விதர்பா மற்றும் மும்பை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. இந்நிலையில் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இதில் நாக்பூரில் நடைபெற்று வரும் ஒரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி ஆரம்பம் முதலே சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன அதர்வா தைடே (4 ரன்கள்) விரைவில் ஆட்டமிழந்தாலும், பின்னர் களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். மும்பை தரப்பில் ஷாம்ஸ் முலானி மற்றும் ஷிவம் துபே தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
_____________________________________________________________________________________
ஆப்கனுக்காக விளையாட விருப்பம்
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. கராச்சியில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. ஆப்கானிஸ்தான் அணி வருகிற பிப்ரவரி 21 ஆம் தேதி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கவுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபிக்கு பிறகும் ஆப்கானிஸ்தான் அணிக்காக விளையாட விரும்புவதாக அந்த அணியின் மூத்த வீரர் முகமது நபி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: என்னுடைய எதிர்காலம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது ஆப்கானிஸ்தான் அணிக்காக நான் விளையாடும் கடைசி ஒருநாள் போட்டிகளாக இருக்காது என நினைக்கிறேன். சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்த பிறகும், சில ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். இது குறித்து மூத்த வீரர்களிடம் ஆலோசனை செய்துள்ளேன். நான் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது எனது உடல் தகுதியை பொருத்தே அமையும் என்றார். ஆப்கானிஸ்தான் அணியின் மூத்த வீரரான முகமது நபிக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________________
அணியிலிருந்து ஏன் நீக்கினார்கள் என்று தெரியவில்லை..? - இந்திய வீரர் வருத்தம்
இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து ரகானே சில கருத்துகளை கூறியுள்ளார்.;
அணியிலிருந்து நீக்கம்: ரகானே விரக்தி
இந்திய அணியிலிருந்து தான் நீக்கப்பட்டது குறித்து ரகானே மிக வருத்தத்துடன் சில கருத்துகளை கூறியுள்ளார். அதில், "சில வருடங்களுக்கு முன்பு நான் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டேன். ஆனாலும் மீண்டும் எனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலக டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக செயல்பட்ட போதும் ஏன் திடீரென அணியில் இருந்து என்னை நீக்கினார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மூத்த வீரராக எனக்கு இன்னும் ஒரு சில வாய்ப்புகள் கிடைக்கும் என்று நினைத்தேன்.
ஆனால் என்னை திடீரென புறக்கணித்தார்கள்.. இது குறித்து நான் யாரிடமும் எதுவும் கேட்கப் போவது கிடையாது. ஏனெனில் அப்படிப்பட்ட ஆளும் நான் கிடையாது. என்னுடைய சிறப்பான செயல்பாடு மூலம்தான் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க முயற்சிப்பேன். எனக்குள் இன்னும் அந்த பழைய நெருப்பும், ஆர்வமும் மிஞ்சி இருக்கிறது. அந்த வகையில்தான் தற்போது ரஞ்சி தொடரில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறேன். மும்பை அணிக்காக என்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறேன் என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-07-2025.
18 Jul 2025 -
திருநின்றவூரில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jul 2025சென்னை : திருநின்றவூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
விஜய் தலைமையில் நாளை த.வெ.க. மாவட்ட செயலாளர்களின் கூட்டம் : மதுரையில் மாநாடு குறித்து ஆலோசனை
18 Jul 2025சென்னை : சென்னையில் நாளை த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருக்கும் கட்சியோடு ஒருபோதும் சேரமாட்டோம் : த.வெ.க. மீண்டும் திட்டவட்டம்
18 Jul 2025சென்னை : மதவாத சக்திகளை வீழ்த்த, சமத்துவ சக்திகளை சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
-
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி
18 Jul 2025சென்னை : கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெற உளள ராஜேந்திர சோழனின் ஆயிரம் ஆண்டு விழாவில் அவரது நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட உள்ளார்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
எதிரிகளை ஓரணியில் நின்று விரட்டியடிக்க உறுதி ஏற்போம் : தமிழ்நாடு நாளில் துணை முதல்வர் பதிவு
18 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் பெயரையே மாற்றத் துடிக்கும் ஆதிக்கக் கூட்டத்தின் சதியை, மு.க.ஸ்டாலின் முறியடித்தார் என உதயநிதி தெரிவித்துள்ளார்;
-
‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ பயங்கரவாத அமைப்பு: அமெரிக்கா அறிவிப்புக்கு இந்தியா வரவேற்பு
18 Jul 2025புதுடெல்லி : ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்ற லஷ்கர்-இ-தொய்பாவின் துணை அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்டை’ பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள அமெரி
-
காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சகோதரர் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன்பு நேரில் ஆஜராகி விளக்கம்
18 Jul 2025சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 29) சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் விசாரணை என்ற பெயரில்
-
பெருந்தலைவர் காமராஜர் விவகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்வப்பெருந்தகை சந்திப்பு
18 Jul 2025சென்னை : காமராஜர் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினார்.
-
பீகார் மாநிலத்தில் ரூ.7,200 கோடியில் திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
18 Jul 2025மோட்டிஹரி : நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மாநிலங்கள் வளர்ச்சி பெறுவதற்கு பீகார் வளர்ந்த மாநிலமாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாள்: புதுச்சேரி முதல்வர் நேரில் வாழ்த்து
18 Jul 2025புதுச்சேரி : புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவரது வீட்டுக்கு நேரில் சென்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
தமிழ்நாடு நாள் வரலாற்றில் தனிப்பெரும் நாள்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
18 Jul 2025சென்னை : தமிழ்நாடு நாள் தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
இன்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய ஆம் ஆத்மி கட்சி : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
18 Jul 2025புதுடெல்லி : தேசிய அளவில் இன்டியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக, அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு: சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் கைது
18 Jul 2025ராய்பூர் : மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை நேற்று கைத
-
பீகாரில் பருவமழை தீவிரம்: மின்னல் தாக்கி 33 பேர் பலி
18 Jul 2025பாட்னா : பீகாரில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மின்னல் தாக்குதல் சம்பவங்களில் 33 பேர் உயிரிழந்தனர், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.