எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை நேரில் சந்திக்க இருக்கிறோம் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கூட்டு நடவடிக்கை...
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று (திங்கள்கிழமை) பேசியதாவது: தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டம் தொடர்பாகத் தெரிவிக்க விரும்புகிறேன். மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காகத் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாடு சட்டசபையில் தான் தொகுதி மறுவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பங்கேற்ற கட்சிகளுக்கு...
வட மாநிலங்களில் எந்த விகித்தத்தில் தொகுதிகள் மறுவரையறைக்கப்படுகிறதோ அதே விகிதத்தில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்த வேண்டும். தமிழ்நாடு முன்னெடுத்துச் செல்கின்ற தொகுதி மறுவரையறை விழிப்புணர்வு குறித்து தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தொகை கட்டுப்பாட்டை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டிய மாநிலங்கள் தண்டிக்கப்படக்கூடாது. இதற்கு துணை நின்ற தமிழ்நாட்டின் கட்சிகளுக்கும், கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளுக்கும் தமிழ்நாடு மக்களின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இருக்கும் தொகுதி வரையறை, 2026-ல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் எனப் பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் உறுதியளிக்க வேண்டும். அரசியலமைப்பில் அதற்கான சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
முதல்வர்கள் பங்கேற்ற...
கடந்த வாரம் சனிக்கிழமை கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான் சிங், கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் நேரிலும், ஓடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் காணொளி காட்சி வாயிலாகவும் கலந்துகொண்டு, பாராளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிரான முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
வெளிப்படையுடன்...
விரிவான ஆலோசனைக்குப் பிறகு பாராளுமன்ற தொகுதிகள் மறுவரையறை மாநிலங்களுடன் கலந்து ஆலோசித்து வெளிப்படையுடன் நடைபெற வேண்டும், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மேலும் 25 ஆண்டுகள் நீட்டிக்கப்பட வேண்டும், மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்திய மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது, உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும், கூட்டுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அவர்களின் மாநில பேரவைகளிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பிரதமரை சந்திக்க....
தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று, நம் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுவரையறையைப் பெற்றிட, தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பிக்களை அழைத்துச் சென்று பிரதமர் மோடியை சந்திக்க இருக்கிறோம். தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என்ற முழக்கத்தின் அடுத்த கட்டமாக, பாராளுமன்றத்தில் உள்ள தமிழக கட்சிகளின் உறுப்பினர்களை அழைத்துச் சென்று பிரதமரை நேரில் சந்திக்க இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி
18 Dec 2025மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூ
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.


