எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ரவுடிகளின் செயல்பாடுகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன..? என்பது குறித்து காவல்துறை தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
காவல்துறை தலைமை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- காவல்துறையினர் மேற்கொண்ட பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக, 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கொலைகள், காய வழக்குகள் மற்றும் கலவரங்கள் உள்ளிட்ட மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன.
மேலும், கொலை வழக்குகளின் நீண்டகால போக்கின் தரவுகளை பகுப்பாய்வு செய்ததில் 2017-2020 ஆம் ஆண்டில், கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து, 2019 ஆம் ஆண்டில் 1,745 வழக்குகளுடன் உச்சத்தை எட்டின. இருப்பினும், 2021 மற்றும் அதற்குப் பிறகு, கொலை வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து குறைந்து வருகின்றன, 2024 ஆம் ஆண்டில் மிகக் குறைந்த கொலை வழக்குகள் (1,563 வழக்குகள்) பதிவாகி உள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் எந்தவொரு வருடத்தையும் விட மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலை வழக்குகள் 2024 ஆம் ஆண்டில் பதிவாகி உள்ளன.
கடந்த 4 ஆண்டுகளில், காவல்துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், மிகக் குறைந்த அளவில் ரவுடி கொலைகள் பதிவாகியுள்ள நிலையில், குறிப்பாக கடந்த 6 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில் ரவுடி கொலைகள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளன. கொலை வழக்குகள் குறைந்து வரும் போக்கின் தொடர்ச்சியாக, 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி முதல் மார்ச் வரை), 340 கொலைகள் பதிவாகி உள்ளன, இது முந்தைய ஆண்டின் (2024) முதல் காலாண்டில் 352 கொலைகளாக இருந்தது.
கொலைகளுக்கான காரணங்களில் திடீர் தூண்டுதல், குடும்ப தகராறுகள், திருமணத்தை தாண்டிய உறவு போன்ற பிற வகையான கொலைகளைத் தடுப்பது கடினம். கொலை வழக்குகளில் ரவுடி கொலைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் கொலைகள் மற்றும் பிற வகையான மனித உடலுக்கு எதிரான குற்றங்கள் குறைப்பதில் நல்ல பலனைத் தந்துள்ளன.
1. அதிக எண்ணிக்கையிலான தடுப்புக்காவல்கள். 2024 ஆம் ஆண்டில், தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சரித்திர பதிவேடு குற்றவாளிகள் (3,645) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். 2021 க்கு முன்பு அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டில் 1,929 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் 2,484 சரித்திர பதிவேடு குற்றவாளிகள், 2022 ஆம் ஆண்டில் 3380, 2023 ஆம் ஆண்டில் 2832 மற்றும் 2024 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 3,645 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
2. கவனம் செலுத்தி திறம்பட கண்காணிப்பதற்காக, சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அவர்களின் தற்போதைய செயல்பாட்டின் அடிப்படையில் மறு வகைப்படுத்துதல். மறு வகைப்படுத்தலுக்குப் பிறகு சரித்திர பதிவேடு குற்றவாளிகள் எண்ணிக்கை A+ - 421, A - 836, B - 6398 மற்றும் C - 18,807 ஆகக் குறைந்துள்ளது. A+ மற்றும் A பிரிவின் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டுள்ளது, இது 50 சதவீதம் அதிகமாகக் குறைந்துள்ளது. இது காவல்துறை மிக முக்கியமான மற்றும் தீவிர செயல்பாடுடைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கவனம் செலுத்தவும் அவர்களை திறம்பட கண்காணிக்கவும் உதவியது.
3. தீவிர செயல்பாடுடைய சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு எதிராக காவல் நிலையத்தில் DARE (Drive Against Rowdy Element) அதிகாரிகளை நியமித்தல். ரவுடிகள் தொடர்பான சம்பவங்களைத் தடுக்க அவர்களின் தற்போதைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணி இந்த DARE அதிகாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
4. பல சந்தர்ப்பங்களில், சிறைக்குள் இருந்தபடியே பழிவாங்கும் கொலைகளைச் செய்ய ரவுடிகளால் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. பழிவாங்கும் மற்றும் ரவுடி தொடர்பான கொலைகளைத் தடுக்கவும், சிறைக்குள் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பெறவும் சிறைகளில் உள்ள ரவுடிகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறார்கள்.
5. விசாரணை முடிவுறும் நிலையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தண்டனை கிடைக்கும் வாய்ப்பு உள்ள (391 வழக்குகள்) அடையாளம் காணப்பட்டு கண்காணிக்கப்பட்டன, இதனால் கடந்த 2024 ஆம் ஆண்டில் 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர், இதில் 150 ரவுடிகளுக்கு எதிராக 10 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்ட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் மிக அதிகமாகும்.
6. ஜாமீன் பினை நிபந்தனைகளை மீறியதால் 68 ரவுடிகளின் ஜாமீன்கள் பினை ரத்து செய்யப்பட்டன, இது கடந்த 12 ஆண்டுகளில் செய்யப்பட்ட அதிகபட்ச ஜாமீன் பினை ரத்து ஆகும்.
7. இதற்கு முன்பு செய்யப்படாத ரவுடிகளுக்கு எதிரான நிதி விசாரணை தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி ஆதாரத்தை தடுக்கும் வகையில், நிதி விசாரணையை நடத்துவதற்கான விரிவான செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி விசாரணையை நடத்துவதற்காக 41 தீவிர செயல்பாடுடைய ரவுடிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ரவுடிகள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளுக்கு எதிரான இந்த முறையான, முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், தமிழ்நாட்டில் பழிவாங்கும் மற்றும் ரவுடி கொலை வழக்குகள் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்து நல்ல பலனைத் தந்துள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-05-2025
02 May 2025 -
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
அதிகரிக்கும் தெரு நாய்க்கடி தொல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
02 May 2025சென்னை : தெரு நாய்க்கடி தொல்லையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
-
பூமியில் சோவியத் கால விண்கலம்
02 May 202553 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் கால விண்கலம் விரைவில் பூமியில் விழும் என எதிர்பார்க்கபடுகிறது.
-
போராட்டத்தில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை
02 May 2025சென்னை : அங்கன்வாடி ஊழியர்களுக்கு, அரசு கோடை விடுமுறை வழங்கிய பின்னரும் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது சட்ட விரோதமான செயலாகும் என்று அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார
-
அதிர்ச்சி சம்பவம்.. ஈரோட்டில் நடந்த இரட்டை கொலை - 8 தனிப்படைகள் அமைப்பு ஈரோடு அருகே முதிய தம்பதி கொலை: 8 தனிப்படைகள் அமைப்பு
02 May 2025ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தோப்பு வீட்டில் இரட்டை கொலை, கொள்ளை நடைபெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
போக்சோ புகார்களில் இனி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 4 நாட்களில் இடைநீக்கம்
02 May 2025சென்னை : தமிழ்நாட்டில், அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்கள் மீது போக்சோ புகார்கள் பதிவு செய்யப்பட்டால் அவர்கள் 4 நாட்களுக
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுலுக்கு நோட்டீஸ்
02 May 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மே 6ல் கனமழை பெய்ய வாய்ப்பு
02 May 2025சென்னை : தமிழகத்தில் மே 6ம் தேதி நீலகிரி, கோவை, மயிலாடுதுறை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்தது தமிழ்நாடு அரசு
02 May 2025சென்னை : அம்பேத்கர் சட்டப் பல்கலை.க்கு துணை வேந்தரை நியமிக்க, சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிர
-
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு மாற்றம்
02 May 2025சென்னை : கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட் நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
-
ஈரோடு இரட்டை கொலை: இ.பி.எஸ். குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம்
02 May 2025ஈரோடு : ஈரோடு இரட்டை கொலை சம்பவத்தில், எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு அமைச்சர் முத்துசாமி விளக்கம் அளித்துள்ளார்.
-
மதுரை சித்திரை திருவிழா: அதிக விசைத்திறன் கொண்ட குழாய்களை பயன்படுத்த வேண்டாம்: கோவில் நிர்வாகம்
02 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிக விசைத்திறன் கொண்ட குழாய்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது என அழகர் கோவில் நிர்வாகம் அறிவுறுத்தல்களை வழங்கியு
-
சட்டம் ஒழுங்கை முறையாக காக்க வேண்டும்: முதல்வருக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
02 May 2025சென்னை : சட்டம் ஒழுங்கை காக்கும் தன் முதற்பணியை முதல்வர் முறையாக செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
-
இறந்த வாக்காளர்கள் விவரங்களை பதிவாளரிடம் பெற முடிவு : தலைமை தேர்தல் கமிஷன் நடவடிக்கை
02 May 2025புதுடெல்லி : இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
-
ரூ. 8,867 கோடியில் கட்டப்பட்ட விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர்
02 May 2025விழிஞ்சம் : கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமம் சார்பில் ரூ.
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண
-
3 விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
02 May 2025சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 151 நபர்களுக்கு பண
-
ம.பி.யில் விபத்து: 4 பேர் பலி
02 May 2025போபால், மத்தியப் பிரதேசத்தில் திருமண வீட்டினரை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டல் பலிக்காது: சீனா எச்சரிக்கை
02 May 2025பெய்ஜிங், வரி விதிப்பு குறித்து சீனாவுடன் அமெரிக்கா நடத்த விரும்பும் பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்க மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள
-
சி.பி.எஸ்.சி. பள்ளிகளில் 3, 5 மற்றும் 8-ம் வகுப்புகளில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து
02 May 2025புதுடில்லி : சி.பி.எஸ்.சி.
-
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல்: பாக்., ராணுவம், ஐ.எஸ்.ஐ., லஷ்கர் பயங்கரவாதிகள் தொடர்பு அம்பலம்
02 May 2025புதுடில்லி : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ்.ஐ., மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகள், பாக்., ராணுவத்தினர் தொடர்பு அம்பலம் ஆகி உள்ளது.&nbs
-
ஒரே இரவில் உக்ரைனின் 121 டிரோன்களை வீழ்த்திய ரஷ்யா
02 May 2025மாஸ்கோ, ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் பறந்த உக்ரைனின் 121 டிரோன்களை அந்நாட்டு ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.
-
சி.பி.எஸ்.இ. நடவடிக்கையை பெற்றோர் எதிர்க்க வேண்டும் : அமைச்சர் அன்பில் மகேஷ் கோரிக்கை
02 May 2025திருச்சி : சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் நடைமுறையை பெற்றோர் எதிர்க்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
-
கேதார்நாத் கோவில் நடை திறப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02 May 2025டேராடூன் : கேதார்நாத் கோயிலின் நடை நேற்று கோலாகலமாகத் திறக்கப்பட்ட நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.